search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "classrooms"

    • இதற்கான அடிக்கல் நாட்டு விழா இரண்டு பள்ளி வளாகங்களிலும் நடைபெற்றது.
    • கலைச்செல்வி உள்பட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம பள்ளி கல்வித்துறை சார்பில் அனுமந்தை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10 புதிய வகுப்பறைகள் கட்டவும் கூனிமேடு ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 புதிய வகுப்பறைகள் உள்பட ரூ 2.80 கோடி மதிப்பில் 13 புதிய வகுப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இரண்டு பள்ளி வளாகங்களிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் ,மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், துணை சேர்மன் பழனி,பேரூராட்சி மன்ற தலைவர் வேதநாயகி ஆள வந்தார், விழுப்புரம் மாவட்ட துணை சேர்மன் ஷீலா தேவி சேரன்,மாவட்ட கவுன்சிலர் புஷ்பவல்லி குப்புராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயா பெருமாள், துர்கா கலைஞர், மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், கூனி மேடு ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி ஜெயராமன், கூனி மேடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினசாமி, அனுமந்தை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி உள்பட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • செஞ்சி பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார்.
    • முடிவில் உதவி தலைமை ஆசிரி யர் செந்தில்குமார் நன்றி கூறினார்

    விழுப்புரம்:

    செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2 கோடியே 56 லட்சம் மதிப்பில் 12 வகுப்பறைகள் கொண்ட கூடுதல்பள்ளி கட்டிடம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய குழு தலை வர் விஜயகுமார் முன்னி லை வகித்தார். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பரிதி, கணேசன், பிரவீன் குமார், பேரூராட்சி செயல் அலு வலர் செந்தில்குமார், துணை தலைவர் ராஜ லட்சுமி செயல்மணி, நகர செயலாளர் கார்த்திக் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திலகவதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில் உதவி தலைமை ஆசிரி யர் செந்தில்குமார் நன்றி கூறினார்

    • அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
    • மாணவர்களுக்கு இலவச சைக்கிகள், புத்தகம் வழங்கியுள்ளோம். ரொட்டி பால் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை மிஷன் வீதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கல்வி அமைச்சர் நமச்சிவாயம் நிதியுதவி வழங்கி பேசியதாவது:-

    நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 9 மாத நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும். புதுவையில் 312 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச சைக்கிகள், புத்தகம் வழங்கியுள்ளோம். ரொட்டி பால் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும்.

    லேப்டாப் வழங்கும் திட்டம் 40 நாளில் தொடங்கப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே எண்ணம் கொண்ட ஆட்சி உள்ளதால் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடிகிறது. கல்வித்துறைக்கு கடந்த ஆண்டைவிட ரூ.100 கோடி அதிகமாக ஒதுக்கப் பட்டுள்ளது. கல்விதான் மிகச்சிறந்த ஆயுதம், அதை கொடுக்க அரசு தயாராக உள்ளது. இதை நல்ல முறையில் பயன்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும். சந்திராயன் திட்டத்தில் தமிழர்கள் இடம்பெற்றனர். அதைப்போல நீங்களும் விஞ்ஞானியாக உருவாகலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அருட்தந்தை ரொசாரியோ, தலைமை ஆசிரியர் வின்சென்ட், துணை தலைமை ஆசிரியர் அகஸ்டின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 12-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
    • அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் இந்த பணியானது நடந்து வருகிறது.

    கோவை,

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடந்தது. பிளஸ்-1க்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 6 வரையும், 10-ம் வகுப்புக்கு கடந்த ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி 20-ல் முடிவடைந்தது.

    இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அண்மையில் தேர்வு முடிவுகளும் வெளியாகின.

    தற்போது கோடை விடுமுறை முடிந்து விட்டது. இதனையடுத்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 12-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும் 14-ந் தேதி 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

    பள்ளிகள் திறப்புக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பள்ளிக்கூட வளாகம், வகுப்பறைகள், மைதானம், கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கழிப்பறைகளில் துர்நாற்றம் வீசாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதுதவிர பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகள், மின் இணைப்புகள் சரிபார்ப்பு, வளாக கட்டிடங்கள் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.வகுப்பறையில் இருந்த ஒட்டடை அடிக்கப்பட்டு மேஜைகள் சரி செய்யப்பட்டுள்ளது. கரும்பலகைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு பளிச் சென்று காட்சியளிக்கிறது.

    இதேபோல் பள்ளி வளாகத்தில் கிடந்த உடைந்த பொருட்கள், கட்டிட இடிபாடுகளை அகற்றி விசாலாப்படுத்தும் பணியும் நடக்கிறது. மேலும் விளையாட்டு மைதானங்களில் உள்ள சிறு, சிறு பள்ளங்களும் சரி செய்யப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் இந்த பணியானது நடந்து வருகிறது.

    பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு புது அனுபவமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

    மேலும் பள்ளிக்கூடம் திறக்கும் தினத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 10 ஆயிரத்து 315 மாணவர்கள் மற்றும் 11ஆயிரத்து 439 மாணவிகள் ஆகியோர் 69 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
    • போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களில் வினாத்தாள்கள் ஒப்படைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 தேர்வுக்காக மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    21,754 பேர் தேர்வு எழுதுகிறார்கள்

    மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 184 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 21 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

    இதில் 10 ஆயிரத்து 315 மாணவர்கள் மற்றும் 11ஆயிரத்து 439 மாணவிகள் ஆகியோர் 69 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இதுதவிர சிறைக் கைதிகள், தனித்தேர்வுகளுக்காக 4 தனியார் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    போலீஸ் பாதுகாப்பு

    தேர்வையொட்டி மாவட்டத்தில் 5 பள்ளிகளில் வைக்கப்பட்டு உள்ள வினாத்தாள் கட்டுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு பணிகளில் சுமார் 1,500 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

    நாளை காலை 7 மணிக்கு வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டு தேர்வு மையங்களில் ஒப்படைக்கப்பட ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    தூய்மை பணிகள்

    நாளை தேர்வு தொடங்குவதையொட்டி மாநகர பகுதியில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு அறைகளில் பதிவு எண்கள் ஒட்டும் பணி முடிவடைந்து விட்டது.

    இன்று பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்தும்படி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

    அதன் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் டவுன் மண்டலத்துக்குட்பட்ட தேர்வு மையங்களில் தூய்மை பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.

    நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு உள்ள வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

    • பல்வேறு பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள் குறைவாக உள்ளன.
    • பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழக பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் கூறியுள்ளதாவது:-

    நாகப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில், பழுதடைந்த நிலையில் இருந்த வகுப்பறை கட்டிடங்கள் அரசு ஆணைப்படி இடிக்கப்பட்டுவிட்டன.

    தற்போது, பல பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லாமல், இதர அரசு, தனியார் கட்டிடங்களில் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    இதேபோல், பல்வேறு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் வகுப்பறை கட்டிடங்கள் குறைவாகவும் உள்ளன.

    எனவே, அத்தகைய பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்றார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின், பள்ளிகளின் முழு பட்டியலையும் அமைச்சரிடம் வழங்கினார்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    • ராஜபாளையம் அருகே அரசு பள்ளிக்கு ரூ.50 லட்சத்தில் வகுப்பு அறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் பூமிபூஜை நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை நடந்தது.

    தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி.முன்னிலை வகித்தார்.

    இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் தொகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு சொந்த செலவில் நூலக வசதி ஏற்படுத்தி தர தயாராக இருக்கிறேன். அதேபோல அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் ஆண்டு விழா நடத்த மாவட்ட கல்வி அதிகாரியிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆண்டுவிழா போட்டி களில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்க உள்ளேன். ராஜபாளையம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக வழிநடத்திச்செல்வேன்.

    கல்விக்கு பெருந்தலைவர் காமராஜர் எவ்வளவு முக்கியத்துவம் அளித்தாரோ, அதுபோல அண்ணா, கருணாநிதி வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார் என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் கற்பகம்மாள் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளைச்செயலாளர்கள் சின்னதம்பி, அமுதரசன், தங்கப்பான், சீதாராமன், வைரவன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தற்காலிகமாக செயல்பட உள்ள கல்லூரி கட்டிடம் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
    • மாணவர்கள் அமர 80 எண்ணிக்கை டெஸ்க், 16 நாற்காலிகள் கல்லூரிக்கு வந்து சேர்ந்தன.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரி தற்காலிகமாக பூதலூர் ஊராட்சி ஒன்றிய பழைய கட்டிடத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த 7-ம் தேதி முதல்-அமைச்சா மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தார்.

    பூதலூரில் செயல்பட உள்ள கலை அறிவியல் கல்லூரி முதல்வராக பேராசிரியர் ராஜாவ ரதராஜா நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். தற்காலிகமாக செயல்பட உள்ள கல்லூரி கட்டிடம் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

    கல்லூரி மாணவர்கள் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கு வதற்கு முன்பாக வகுப்பறைகள் தயார் நிலையில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் மற்றும் கல்லூரிக்கு தேவையான தளவாட பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன.

    துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கல்லூரிக்கு தேவையான தளவாட சாமான்கள் வாங்கி நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார்.

    எம்.எல்.ஏ-வின் பரிந்துரையின் பேரில் கல்லூரிக்கு ரூ.15.80 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்கள் அமர 80 எண்ணிக்கை டெஸ்க், 16 நாற்காலிகள், 16 மேஜைகள், புத்தகங்கள் வைக்க 5 அலமாரிகள், 5 பீரோக்கள் உள்ளிட்ட பொருள்கள் கல்லூரிக்கு வந்து சேர்ந்தன. கல்லூரிக்கு வந்த பொருள்களை கல்லூரி முதல்வர் ராஜாவரதராஜா சரிபார்த்து பெற்று கல்லூரி வகுப்பறைக்குள் வைத்தார்.

    • கோடை விடுமுறை முடிந்து 13-ந் தேதி திறப்பு பள்ளி வகுப்பறைகள் தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • இதேபோல் பள்ளி திறப்பை ஒட்டி மாணவ ர்களின் பள்ளி பேக், பள்ளி சீருடை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் மாணவர்க ளுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ந் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதை யடுத்து பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுத்தப்படு த்தும் பணி நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து பள்ளிகளை தயார்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

    பள்ளி வளாகத்தில் படர்ந்திருக்கும் மரம், செடி கொடிகள் அகற்றப்பட்டு வருகிறது. வகுப்பறையில் கிருமி நாசினி தெளிக்க ப்பட்டு வருகிறது. மாணவ ர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் தூய்மை ப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மாணவர்கள் குடிநீர் வசதிக்காக நீர்த்தேக்க தொட்டியில் மருந்து தெளித்து அதை சுத்த மாக்கும் பணி நடை பெறுகிறது. அந்தந்த பள்ளி களில் அந்தந்த தலைமை யாசிரியர்கள் மேற்பா ர்வையில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல் பள்ளி திறப்பை ஒட்டி மாணவ ர்களின் பள்ளி பேக், பள்ளி சீருடை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    ×