search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணம் அருகே  13 புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார்
    X

    மரக்காணம் அருகே கூனி மேடு ஊராட்சியில் புதிய அரசு பள்ளி வகுப்பறை கட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.

    மரக்காணம் அருகே 13 புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார்

    • இதற்கான அடிக்கல் நாட்டு விழா இரண்டு பள்ளி வளாகங்களிலும் நடைபெற்றது.
    • கலைச்செல்வி உள்பட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம பள்ளி கல்வித்துறை சார்பில் அனுமந்தை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10 புதிய வகுப்பறைகள் கட்டவும் கூனிமேடு ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 புதிய வகுப்பறைகள் உள்பட ரூ 2.80 கோடி மதிப்பில் 13 புதிய வகுப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இரண்டு பள்ளி வளாகங்களிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் ,மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், துணை சேர்மன் பழனி,பேரூராட்சி மன்ற தலைவர் வேதநாயகி ஆள வந்தார், விழுப்புரம் மாவட்ட துணை சேர்மன் ஷீலா தேவி சேரன்,மாவட்ட கவுன்சிலர் புஷ்பவல்லி குப்புராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயா பெருமாள், துர்கா கலைஞர், மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், கூனி மேடு ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி ஜெயராமன், கூனி மேடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினசாமி, அனுமந்தை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி உள்பட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×