search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "buildings"

    • ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • அரசுஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து திருப்பய த்தங்குடியில் அரசுஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள நிலையில் அதற்கான இடத்தையும், அதை தொடர்ந்து வடகரை ஊராட்சியில் ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் ரஜினி தேவி பாலதண்டாயுதம், பாண்டியன், மோகன், ஊராட்சி செயலர் பிரகாஷ் குமார் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • ரூ.30.2 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.
    • காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டடத்தை திறந்து வைத்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் இடப்பற்றாக்குறை இருப்பதால் கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது .

    இதனை ஏற்று குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.2 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. கட்டடப் பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டடத்தை திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையம் பள்ளி கட்டடத்தில் நடைபெற்ற விழாவில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பணிக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரோஜாமணி ஈஸ்வரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

    இந்த நிகழ்ச்சியில், திமுக., ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,சோமசுந்தரம்,பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார், பல்லடம் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம்,வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், பொறியாளர் குரு பிரசாத்,துணைத் தலைவர்,ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள், ஒன்றிய திமுக ,நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விதிமீறல் கட்டிடங்கள் குறித்து வார்டு வாரியாக கணக்கெடுப்பு நடத்த மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார்.
    • உரிமையாளர்கள் உரிய விளக்கம் அளித்து விதிமீறல்களை சரி செய்து, அபராத தொகையுடன் கூடிய கட்டணம் செலுத்தி கட்டிட அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்ட குழும அனுமதி பெறாமல் மாநகரப் பகுதியில் ஏராள மான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக புகார்கள் வந்தது.

    விதிமீறல் கட்டிடங்கள்

    இதையடுத்து விதிமீறல் கட்டிடங்கள் குறித்து வார்டு வாரியாக கணக்கெடுப்பு நடத்த மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து உதவிப் பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் 4 மண்டலங்களிலும் வார்டு வாரியாக அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து கணக்கு எடுத்தனர்.

    ஆய்வு

    இதையடுத்து கடந்த 10 நாட்களாக 481 கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 26 வணிக வளாகங்கள் மற்றும் 76 வீடுகள் முறை யான அனுமதி இன்றி விதி முறைகளை மீறி கட்டப் பட்டது தெரியவந்தது.

    இது குறித்த ஆய்வு அறிக்கையை கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் பொறியாளர்கள் சமர்ப்பித்தனர். அதனை தொடர்ந்து முதல் கட்டமாக அனுமதியின்றி விதிமுறை களை மீறி கட்டிய கட்டிடங் களை ஏன் இடித்து அப்புறப் படுத்தக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கமிஷனர் உத்தர விட்டுள்ளார்.

    102 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்

    இதையடுத்து நகர ஊரமைப்பு சட்டப்பிரிவு 456-ன் படி 102 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அதற்கு உரிமையாளர்கள் உரிய விளக்கம் அளித்து விதிமீறல்களை சரி செய்து, அபராத தொகையுடன் கூடிய கட்டணம் செலுத்தி கட்டிட அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.

    அவ்வாறு அனுமதி பெற விண்ணப்பிக்காத கட்டிடங்களை கண்டறிந்து எடுத்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக கமிஷனர் தெரிவித்த தாகவும் கூறப்படுகிறது.

    • கீழக்கரையில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி கமிஷனர் செல்வராஜ் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிகுட்பட்ட கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலை வில் அனுமதி இல்லாமல் அடுக்குமாடி குடியிருப்பு வணிக வளாகம் கட்டுவதற்கு அனுமதி கிடையாது.

    இந்த நிலையில் கீழக்கரை கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அடுக்குமாடி கட்டிடம், வாடகை குடியிருப்பு கட்டு வதாக நகராட்சி நிர்வாகத் திற்கு புகார் வந்தது. இதை யடுத்து நகராட்சி கமிஷனர் செல்வராஜ், கீழக்கரையில் உள்ள அனைத்து கட்டி டங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

    அதன்பேரில் கீழக்கரை நகர் அமைப்பு ஆய்வாளர் வனிதா, அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வாடகை குடியிருப்பு, அடுக்குமாடி கட்டிடங்களை பார்வையிட்டார். அப்போது சாலை தெருவில் கடற்கரை யில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அதிக உயரமான வாடகை குடி யிருப்பு கட்டிடங்கள் கட்டி யது தெரியவந்தது.

    மீண்டும் இந்த கட்டி டத்தின் வரை படங்கள் குறித்து ஆய்வு செய்ய கோரி மாவட்ட நகர் ஊர் அமைப்பு துணை இயக்குனர் அலுவ லகத்திற்கு நகராட்சி மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் நகராட்சி கமிஷனர் கூறியதாவது:-

    கீழக்கரை பகுதியில் புதிய கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், வாடகை குடியிருப்புகள் முறையாக அனுமதி பெற்று கட்ட வேண்டும். மேலும் வாசல் படிகளை உரிமை யாளர்கள் இடத்திற்குள் அமைத்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் கட்டிடங்கள் அகற்றப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரூர் மாவட்டத்தில் 27 பள்ளிகளுக்கு ரூ.10.19 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது
    • இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.

    கரூர்,

    கரூர் ஊராட்சி ஒன்றியம் நெரூர், வாங்கல், குப்புச்சிப்பாளையம் மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மொஞ்சனூர் ஊராட்சி தொட்டம்பட்டியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பள்ளிகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் பள்ளிகளுக்கு தேவையான புதிய கட்டிடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் உருவாக்கிடும் வகையில் பணிகளை அதிகளவில் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரெங்கநாதன் பேட்டை, என்.புகளூர், பெரிய வரப்பாளையம் மற்றும் வாங்கல் ஆகிய இடங்களிலும், கடவூர் ஊராட்சி ஒன்றியம் பாப்பம்பட்டி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மொஞ்சனூர் தொட்டம்பட்டியில் தலா ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    இதேபோல் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சின்னம்மன் நாயக்கன்பட்டி, சிந்தலவாடி, மகாதானபுரம், கட்டாரிப்பட்டி, போத்து ராவுத்தன்பட்டி, மலைப்பட்டி, செக்கானம், ஆகிய இடங்களில் தலா ரூ.31 லட்சத்து 70 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், மாயனூர், சிவாயம், காட்டூர் ஆகிய இடங்களில் தலா ரூ.61 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடங்களும் கட்டப்படுகிறது.

    மேலும் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் மேலபட்டி, தண்ணீர் பள்ளி ஆகிய இடங்களில் ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், அய்யர் மலையில் ரூ.69 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்களும், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம் பாகநத்தத்தில் ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் சின்னியம்பாளையம், பாதிரிப்பட்டியில் தலா ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது.

    அரவக்குறிச்சி பேரூராட்சி அரவக்குறிச்சியில் ரூ.69 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்களும், புஞ்சை தோட்டக்குறிச்சி, அரவக்குறிச்சி, புலியூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் தலா ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் என மொத்தம் 27 பள்ளிகளில் ரூ.10 கோடியே 19 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, உதவி பொறியாளர்கள் இளஞ்சேரன், பூரணமா தேவி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • ரூ.30.50 கோடியில் கூடுதல் சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் கட்டப்படுகிறது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் புவனேசு வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கூடுதல் ஒருங்கி ணைந்த அவசர கால தாய்-சேய் நல சிகிச்சை மையம் மற்றும் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது. கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு கூடுதல் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் 50 படுக்கை கள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் மற்றும் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் 2 தளங்களுடன் ஒருங்கிணைந்த அவசரகால தாய்-சேய் சிகிச்சை மையத்திற்கான கூடுதல் கட்டிடம் என மொத்தம் ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் 2 கூடுதல் பிரிவு கட்டிடங்க ளுக்கான கட்டுமான பணிகள் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் அத்திய வசியமாக விளங்கி வரும் மருத்துவத்தை எளிதாக கிடைக்கப்பெறச் செய்து அவர்களின் உடல்நலத்தை பேணிக்காக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்து வத்துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் அந்த திட்டங்களின் மூலம் பயன்பெற்று உடல்நலதை சிறந்த முறையில் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ள கூடுதல் பிரிவு கட்டிடங்களை தரமான முறையில் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சத்தியபாமா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், சிவகங்கை யூனியன் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், நகர்மன்ற தலைவர் சி.எம்.துரை ஆன்ந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, வாணியங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் புவனேசு வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 30.6.2023 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவுசெய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

    திருப்பூர் :

    நகர்ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லாப குதிகளில் 1.1.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்விநிறு வனக் கட்டிட ங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டுநெ றிமுறைகள் அரசாணை வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ்நிகழ் நிலை ஆன்லைனில் 14.6.2018 முதல் 13.9.2018 வரை மூன்று மாதகாலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்க ளுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் விதிக்க ப்பட்டிருந்த தடையை நீக்கிட மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் பலவற்றில் வழங்கப்பட்டுள்ள 10.2.2021 தேதிய தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தநீதிமன்ற உத்தரவின்படி 22.3.2021 முதல் 4.4.2021 வரை இருவாரகாலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ்விண்ண ப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் ஆறு மாதகாலம் காலநீட்டிப்பு அரசால் 24.6.2022 முதல்31.12.2022 வரை வழங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் விண்ண ப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக 30.6.2023 வரை விண்ணப்பி க்க காலநீட்டிப்பு வழங்கப்ப ட்டுள்ளது.

    விண்ணப்பித்தவர்கள் உரிய விபரங்களை சமர்ப்பித்து இசைவு பெற திருப்பூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக த்தினை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ண ப்பிக்க விரும்புவர்கள் https://tcp.tn.gov.in என்ற இணையதள முகவரியில்வி ண்ணப்பம் பதிவுசெய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. இதுஒருமுறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும்.
    • கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும்.

    காங்கயம்

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வரிவிதிப்பு செய்யப்படாத கட்டிடம் மற்றும் ஏற்கனவே வரிவிதிப்பு செய்யப்பட்டு அதன் பின் கூடுதலாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்படாமல் இருந்தால் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும். அவ்வாறு வரியினங்களை செலுத்த முன் வராத பட்சத்தில் குழு ஆய்வு செய்யும்போது கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் 6 ஆண்டுகளுக்கான வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும். எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள் குறைவாக உள்ளன.
    • பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழக பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் கூறியுள்ளதாவது:-

    நாகப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில், பழுதடைந்த நிலையில் இருந்த வகுப்பறை கட்டிடங்கள் அரசு ஆணைப்படி இடிக்கப்பட்டுவிட்டன.

    தற்போது, பல பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லாமல், இதர அரசு, தனியார் கட்டிடங்களில் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    இதேபோல், பல்வேறு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் வகுப்பறை கட்டிடங்கள் குறைவாகவும் உள்ளன.

    எனவே, அத்தகைய பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்றார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின், பள்ளிகளின் முழு பட்டியலையும் அமைச்சரிடம் வழங்கினார்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    • மாணவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தகூடிய நிலையில் பழைமையான கட்டிடங்கள் உள்ளன.
    • புதிய கட்டிடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டை ஒன்றியம், ராராமு த்திரகோட்டை கிராம த்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை என 200 க்கும் மேறாபட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இங்குள்ள பள்ளி வகுப்பறை கட்டி டங்கள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்த நிலையில் மாணவர்களின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தகூடிய நிலையில் பழைமையான கட்டிடங்களாக உள்ளன. மேலும் மழை காலங்களில் மழைநீர் வகுப்பறை முழுவதும் ஒழுகுவதாகவும் கூறப்படுகிறது. அதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    பழுதடைந்த நிலை யில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் அமைத்துதர வேண்டுமென இங்குள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் நீண்ட நாட்களாக அரசை வலியுறு த்தி வருகின்றனர். உயிர்பலி ஏற்படும் முன்பு பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கீழக்கரையில் சேதமடைந்த கட்டிடங்களை இடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் முஹம்மது சாலிஹ் உசைன் தலைமையில் நடந்தது. கீழக்கரை நகராட்சியில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், இடிந்து விழும் நிலையில் உள்ள அபாயகரமான கட்டிடங்களை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழக்கரை தாலுகாவில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் தாஜுல் அமீன், இணை செயலாளர் அஹமது மிர்ஷா, பொருளாளர் ஜாபிர் சுலைமான், செய்தி தொடர்பாளர் முகைதீன் இப்ராகீம், செயற்குழு உறுப்பினர்கள் அய்யூப் கான், அஹமது ஹூசைன் ஆசிப், செய்யது மகமூது ரிபான், உறுப்பினர்கள் சீனி முஹம்மது தம்பி, ஹபீப் முஹம்மது மன்சூர், ஜியாவுல் அக்தர், நபீல் சதக்கத்துல்லா, அஹமது முபீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கட்டிடங்கள், நிலப்பயன் மாற்றத்துக்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இந்த நடைமுறை கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாகவும் மற்றும் விரைவாகவும் மனைப்பிரிவு அனுமதி பெறும் வகையில் கடந்த ஜூன் மாதம் ஒற்றை சாளர முறையில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் ஏராளமானவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெற்று வருகின்றனர்.

    அதேபோல் தற்போது கட்டிடங்கள் முழுமைத்திட்ட நிலப்பயன் மாற்றம் மற்றும் விரிவு அபிவிருத்தி திட்ட மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை ஒற்றை சாளர முறையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சரிபார்ப்பு படிவத்தின்படி, ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பம் செய்து எளிதாக ஒப்புதல் பெறலாம் என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×