search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Group structure"

    • கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும்.
    • கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும்.

    காங்கயம்

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வரிவிதிப்பு செய்யப்படாத கட்டிடம் மற்றும் ஏற்கனவே வரிவிதிப்பு செய்யப்பட்டு அதன் பின் கூடுதலாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்படாமல் இருந்தால் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும். அவ்வாறு வரியினங்களை செலுத்த முன் வராத பட்சத்தில் குழு ஆய்வு செய்யும்போது கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் 6 ஆண்டுகளுக்கான வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும். எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவிகளிடம் ஆபாசபேச்சு விவகாரத்தில் கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • இதுதொடர்பான அறிக்கையை வருகிற 17-ந் தேதிக்குள் அளிக்குமாறு கல்லூரி முதல்வர் மேகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் சத்திய சேகரன் என்பவர் மாணவிகளிடம் செல்போ னில் ஆபாசமாகவும், சாதிரீதியாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த பேராசிரியர், மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    பேராசிரியர் சத்தியசேகரன் மீதான புகாரின் பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபாசமாக பேசுதல், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தல் என்பது உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பேராசிரியரை தேடி வருகின்றனர்.

    மேலும் பள்ளி-கல்வித்துறை சார்பில் பேராசிரியர் சத்தியசேகரன் மீதான புகார்கள் மாணவ-மாணவிகளிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. இதுதவிர, அந்த பேராசி ரியர் மீது பள்ளி கல்வித் துறை சார்பில் நடவடிக்கை எடுப்பதற்காக மூத்த பேராசிரியர்களை கொண்ட 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பான அறிக்கையை வருகிற 17-ந் தேதிக்குள் அளிக்குமாறு கல்லூரி முதல்வர் மேகலா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் பரமக்குடி அரசு கலைக்கல்லூரிக்கு மறுதேதி அறிவிக்கப்படாமல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டமும், திங்கள், செவ்வாய், புதன் கூட்டம் இல்லாத நிலையிலும் உள்ளது.
    • எந்த ஊருக்கு அதிக பயணிகள் பயணிக்கின்றனர் என்பன உட்பட விபரங்களை இக்குழுவினர் சேகரிக்க உள்ளனர்.

    திருப்பூர்:

    அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் வருவாய் இழப்பு ஏற்படுத்துவதை தடுக்க, கோட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கோட்டத்திற்கும் கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் உட்பட 8 அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இரவு 10:30க்கு பின், அதிகாலை 5:30 மணி வரை இயக்கப்படும் பஸ்கள்,ஒரு வழித்தடத்தில் ஒரு பஸ்சுக்கும் அடுத்த பஸ்சுக்குமான நேர இடைவெளி,பயணிகள்எண்ணிக்கை,எந்த ஊருக்கு அதிக பயணிகள் பயணிக்கின்றனர் என்பன உட்பட விபரங்களை இக்குழுவினர் சேகரிக்க உள்ளனர்.

    இதன் வாயிலாக எந்த வழித்தடத்தில் எந்த 'டிரிப்' இயக்கும் போது கலெக்‌ஷன் குறைகிறது, டீசல் விரயம் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.அதன் பின் தொடர்ச்சியாக இயங்கும் பஸ்களில் ஒன்றோ அல்லது இரண்டோ நிறுத்தப்பட்டு அந்த பஸ்சுக்கு பயன்படுத்தப்படும் டீசலை மிச்சப்படுத்தவும், பஸ்சின் டிரைவர், நடத்துனருக்கு வேறு பஸ்சில் பணி வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, வருவாய் இழப்பு ஏற்படுவதை ஓரளவு தடுக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டமும், திங்கள், செவ்வாய், புதன் கூட்டம் இல்லாத நிலையிலும் உள்ளது. பயணிகள் எண்ணிக்கை, பயணிக்கும் கிழமைக்கு ஏற்ப பஸ் இயக்கத்தை முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டம் பண்டிகை, விடுமுறை நாட்களுக்கு பொருந்தாது. பயணிகள் அதிகரித்தால் விலக்கிக் கொள்ளப்படும்.வருவாய் இழப்பு ஏற்படுத்தும் பஸ்களின் நேரத்தை பரீட்சார்த்த முறையில் மாற்றியமைக்கவும், தேவை இருப்பின் மாற்றங்கள் செய்யவும் ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும் என்றனர்.  

    ×