search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loss of revenue"

    • 17 அம்ச கோரிக்கைகளை தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சேலம் மாவட்டத்தில் மட்டும் தினமும் 50 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    ஓமலூர்:

    தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளும் 3ஆயிரம் மேற்பட்ட கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. ஜல்லி, எம்.சாண்ட் ஆகியவை பள்ளி, மருத்துவமனை, சாலை, பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணி களுக்கும் தேவையாக உள்ளது. தற்போது பெரிய அளவில் கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட விதிகளை, சிறிய அளவிலான கல் குவாரிகளுக்கும், ஜல்லி உடைக்கும் சிறு கிரசர்களுக்கும் கனிம வளத்துறை அமல்படுத்தி உள்ளது.

    அதனால் இந்த தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு, தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக கூறுகின்றனர். மேலும், உள்ளூரிகளில் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் அச்சுறுத்தல் செய்கின்றனர். மேலும், கனிம வளம் கடத்தல், கனிம வளம் கொள்ளை என அச்சுறுத்தி, குவாரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படுவதாக குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் குவாரிகளில் பல்வேறு குறைகளை கண்டறிந்து பல கோடி ரூபாய் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூரிலும் கடந்த 26-ம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 ஆயிரத்து 500 கல் குவாரிகள், 3 ஆயிரம் கிரஷர்கள் இயங்காமல் முடங்கியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், கட்டுமான தொழிலும் ஸ்தம்பித்து வருகிறது. தொடர்ந்து ஓமலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தியும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்தும் அரசுக்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

    மேலும், அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபற்றி சேலம் மாவட்ட குவாரி கிரஷர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா கூறும்போது, எங்களது சிறு குவாரிகளில் உற்பத்தி செய்யப்படும் ஜல்லி, எம்.சான்ட் அரசு பணிகளுக்கே 80 சதவீதம் அனுப்பப்படுகிறது. மீதமுள்ள 20 சதவீதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கபடுகிறது. தற்போது குவாரி தொழில் நிறுத்தப்பட்டுள்ளதால், சேலம் மாவட்டத்தில் மட்டும் தினமும் 50 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 300 கோடி ரூபாய் தினமும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், தமிழ்நாடு முதல்வர் குவாரி கிரசர் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தொழில் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

    • வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டமும், திங்கள், செவ்வாய், புதன் கூட்டம் இல்லாத நிலையிலும் உள்ளது.
    • எந்த ஊருக்கு அதிக பயணிகள் பயணிக்கின்றனர் என்பன உட்பட விபரங்களை இக்குழுவினர் சேகரிக்க உள்ளனர்.

    திருப்பூர்:

    அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் வருவாய் இழப்பு ஏற்படுத்துவதை தடுக்க, கோட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கோட்டத்திற்கும் கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் உட்பட 8 அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இரவு 10:30க்கு பின், அதிகாலை 5:30 மணி வரை இயக்கப்படும் பஸ்கள்,ஒரு வழித்தடத்தில் ஒரு பஸ்சுக்கும் அடுத்த பஸ்சுக்குமான நேர இடைவெளி,பயணிகள்எண்ணிக்கை,எந்த ஊருக்கு அதிக பயணிகள் பயணிக்கின்றனர் என்பன உட்பட விபரங்களை இக்குழுவினர் சேகரிக்க உள்ளனர்.

    இதன் வாயிலாக எந்த வழித்தடத்தில் எந்த 'டிரிப்' இயக்கும் போது கலெக்‌ஷன் குறைகிறது, டீசல் விரயம் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.அதன் பின் தொடர்ச்சியாக இயங்கும் பஸ்களில் ஒன்றோ அல்லது இரண்டோ நிறுத்தப்பட்டு அந்த பஸ்சுக்கு பயன்படுத்தப்படும் டீசலை மிச்சப்படுத்தவும், பஸ்சின் டிரைவர், நடத்துனருக்கு வேறு பஸ்சில் பணி வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, வருவாய் இழப்பு ஏற்படுவதை ஓரளவு தடுக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டமும், திங்கள், செவ்வாய், புதன் கூட்டம் இல்லாத நிலையிலும் உள்ளது. பயணிகள் எண்ணிக்கை, பயணிக்கும் கிழமைக்கு ஏற்ப பஸ் இயக்கத்தை முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டம் பண்டிகை, விடுமுறை நாட்களுக்கு பொருந்தாது. பயணிகள் அதிகரித்தால் விலக்கிக் கொள்ளப்படும்.வருவாய் இழப்பு ஏற்படுத்தும் பஸ்களின் நேரத்தை பரீட்சார்த்த முறையில் மாற்றியமைக்கவும், தேவை இருப்பின் மாற்றங்கள் செய்யவும் ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும் என்றனர்.  

    ×