search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "quarrying"

    • மூன்றரை ஏக்கர் நிலத்தில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்க கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி வரை 20 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் பெற்று இருந்தார்.
    • வெங்கடாசலம் தொடர்ந்து அனுமதியின்றி சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுப்பதாக சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனருக்கு தகவல் கிடைத்தது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அன்னதானப்பட்டி கிராமம் பூத்தாளக்குட்டையை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர், அதே பகுதியில் மூன்றரை ஏக்கர் நிலத்தில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்க கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி வரை 20 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் பெற்று இருந்தார்.

    இந்த நிலையில் வெங்கடாசலம் தொடர்ந்து அனுமதியின்றி சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுப்பதாக சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனருக்கு தகவல் கிடைத்தது.

    ஆய்வு

    இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி சேலம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் நேரில் சென்று தணிக்கை மேற்கொண்டார். அதில் உரிய நடைசீட்டு அனுமதியின்றி குத்தகை பரப்பிற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் சுரங்கப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து வெட்டி எடுக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் கனிமத்தினை அளவீடும் பணி மேற்கொள்ளப்பட்டதில் உரிய நடைசீட்டு அனுமதியின்றி குத்தகை பரப்பிற்குள் 816.04 டன் சுண்ணாம்பு கற்களும் மற்றும் குத்தகை பரப்பிற்கு வெளியே 1,465.62 டன் என மொத்தம் 2281.66 டன் சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    வழக்கு பாய்ந்தது

    இதையடுத்து சுரங்க குத்தகை அனுமதியின்றி சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுத்தமைக்கும், அரசுக்கு ரூ. 8 லட்சத்து 45ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் வெங்கடாசலம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி தாசில்தார் செல்வகுமார் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வெங்கடாஜலத்தின் மீது சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 17 அம்ச கோரிக்கைகளை தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சேலம் மாவட்டத்தில் மட்டும் தினமும் 50 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    ஓமலூர்:

    தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளும் 3ஆயிரம் மேற்பட்ட கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. ஜல்லி, எம்.சாண்ட் ஆகியவை பள்ளி, மருத்துவமனை, சாலை, பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணி களுக்கும் தேவையாக உள்ளது. தற்போது பெரிய அளவில் கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட விதிகளை, சிறிய அளவிலான கல் குவாரிகளுக்கும், ஜல்லி உடைக்கும் சிறு கிரசர்களுக்கும் கனிம வளத்துறை அமல்படுத்தி உள்ளது.

    அதனால் இந்த தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு, தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக கூறுகின்றனர். மேலும், உள்ளூரிகளில் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் அச்சுறுத்தல் செய்கின்றனர். மேலும், கனிம வளம் கடத்தல், கனிம வளம் கொள்ளை என அச்சுறுத்தி, குவாரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படுவதாக குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் குவாரிகளில் பல்வேறு குறைகளை கண்டறிந்து பல கோடி ரூபாய் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூரிலும் கடந்த 26-ம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 ஆயிரத்து 500 கல் குவாரிகள், 3 ஆயிரம் கிரஷர்கள் இயங்காமல் முடங்கியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், கட்டுமான தொழிலும் ஸ்தம்பித்து வருகிறது. தொடர்ந்து ஓமலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தியும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்தும் அரசுக்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

    மேலும், அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபற்றி சேலம் மாவட்ட குவாரி கிரஷர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா கூறும்போது, எங்களது சிறு குவாரிகளில் உற்பத்தி செய்யப்படும் ஜல்லி, எம்.சான்ட் அரசு பணிகளுக்கே 80 சதவீதம் அனுப்பப்படுகிறது. மீதமுள்ள 20 சதவீதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கபடுகிறது. தற்போது குவாரி தொழில் நிறுத்தப்பட்டுள்ளதால், சேலம் மாவட்டத்தில் மட்டும் தினமும் 50 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 300 கோடி ரூபாய் தினமும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், தமிழ்நாடு முதல்வர் குவாரி கிரசர் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தொழில் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

    கல்குவாரியில் வேலை ஆட்கள் சரியாக வேலை செய்கிறார்களாக என்று பார்க்க சென்ற சூப்பர்வைசர் கால் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஊத்தங்கரை:

    தருமபுரி மாவட்டம், ஏரியூரை அடுத்த சோமலிகாடு பகுதியை சேர்ந்தவர் தம்பித்துரை (வயது38). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்த தொவரப்பள்ளியில் தனியார் கல்குவாரியில் சூப்பர் வைசராக இருந்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    நேற்று காலையில் வழக்கம் போல் தம்பித்துரை கல்குவாரிக்கு வேலைக்கு சென்றார். பின்னர் கல்குவாரியில் வேலை ஆட்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்று நடந்து சென்று பார்த்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கல்குவாரியில் பள்ளமான பகுதியில் தம்பித்துரை விழுந்தார். 

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனே மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே ஆம்பிலன்சில் தம்பித்துரை பரிதாபமாக உயிரிழந்தார்.
    ×