search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் ஆய்வு
    X

    பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் ஆய்வு செய்தார்.

    அரசு பள்ளியில் ஆய்வு

    • மாணவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தகூடிய நிலையில் பழைமையான கட்டிடங்கள் உள்ளன.
    • புதிய கட்டிடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டை ஒன்றியம், ராராமு த்திரகோட்டை கிராம த்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை என 200 க்கும் மேறாபட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இங்குள்ள பள்ளி வகுப்பறை கட்டி டங்கள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்த நிலையில் மாணவர்களின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தகூடிய நிலையில் பழைமையான கட்டிடங்களாக உள்ளன. மேலும் மழை காலங்களில் மழைநீர் வகுப்பறை முழுவதும் ஒழுகுவதாகவும் கூறப்படுகிறது. அதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    பழுதடைந்த நிலை யில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் அமைத்துதர வேண்டுமென இங்குள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் நீண்ட நாட்களாக அரசை வலியுறு த்தி வருகின்றனர். உயிர்பலி ஏற்படும் முன்பு பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×