search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் நிறுத்தம்"

    • சென்னையில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
    • சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னையை அடுத்த மணலி புதுநகர் அருகே விச்சூர் மற்றும் வெள்ளிவாயல் கிராம பகுதிகள் உள்ளன. இதை சுற்றியுள்ள 15 கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயணம் செய்வதற்காக மாநகர பஸ் வசதியில்லை.

    இதனால், இந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள், மாணவ-மாணவிகள் என அனைவருமே விச்சூரில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டுமென்றால், 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து மணலி புதுநகருக்கு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து தான் மாநகர பஸ்சில் ஏறி பயணம் செய்யும் நிலை உள்ளது.

    அதேபோல், சோழவரம் செல்ல வேண்டுமென்றால் 9 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. விச்சூர் பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு மாநகர பஸ்களை இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னையில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    மேலும் இளம்பெண்கள் மற்றும் மாணவிகள், பொன்னேரி நெடுஞ்சாலையில் இறங்கி, விச்சூர் அல்லது வெள்ளிவாயல் பகுதிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.

    இந்த பகுதிகளுக்கு மாநகர பஸ் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மாநகர போக்குவரத்து கழக தலைமை அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சோழவரத்தில் இருந்து வெள்ளிவாயல், விச்சூர் ஆகிய பகுதிகள் வழியாக சென்னைக்கு மாநகர பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு, இதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டது. ஆனால் ஒத்திகைக்கு பிறகு இந்த வழித்தடத்தில் இதுவரை மாநகர பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    நாங்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றே பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக முதியோர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, அதிகாரிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்த வழித்தடத்தில் மாநகர பஸ்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • பஸ் நிறுத்தத்தில் சுமார் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடந்தார்.
    • இட்லி மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவை வாங்கிக் கொண்டு வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சுமார் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடந்தார். இதை கண்ட பயணிகள் ஏதோ மது அருந்திவிட்டு தூங்குவதாக நினைத்தனர். இதனால் பஸ் நிறுத்த இருக்கையில் அமர்வதற்கு கூட அஞ்சினர். இந்த நிலையில் திடீரென ஒரு கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் மனிதாபிமானத்துடன் அந்த பெரியவர் மீது பரிவு காட்டினார். இதையடுத்து அந்த பெண் அங்குள்ள ஓட்டலுக்கு சென்று இட்லி மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவை வாங்கிக் கொண்டு வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தார். அந்த பெரியவரால் எழுந்து, அமர்ந்து உட்கார முடியாத சூழ்நிலையில் படுத்த படுக்கையாக கிடப்பதால் அந்தப் பெண் அந்த பெரியவர் கையில் கொடுத்தார். அதை அவர் படுத்த நிலையிலேயே சிறிது சிறிதாக இட்லியை சாப்பிட தொடங்கினார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ள பயணிகள் கண்டு மெய் சிலிர்த்தனர். பொதுவாக யாராவது அனாதையாக சாலையோரம் கிடந்தால் அவரை யாரும் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் இந்த பெண் நடந்து கொண்ட விதம் மனிதாபிமானத்தை உண்டாக்கியது. தற்போது இந்த பெரியவர் யார்?, எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. சமூக அறக்கட்டளை நிர்வாகத்தினர் உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செட்டித்தாங்கல் பஸ் நிறுத்தத்தில் நின்று, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்ஸில் ஏறி இருக்கிறார்.
    • அரசு பஸ் கண்டக்டர் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள பழைய வேங்கூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீராசாமி மனைவி ஆனந்தநாயகி (வயது 50). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி செட்டித்தாங்கல் பஸ் நிறுத்தத்தில் நின்று, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்ஸில் ஏறி இருக்கிறார்.

    அப்போது பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் ஆனந்தநாயகியை பார்த்து ஓசியில் பஸ் ஏற வந்துட்டியா, பஸ்சை விட்டு கீழே இறங்கு என அசிங்கமாக பேசியதோடு ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து ஆனந்தநாயகி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் அரசு பஸ் கண்டக்டர் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரமேஷ் வங்கி வேலை நேரம் முடிந்த பிறகு வங்கிக்கு வந்து பணம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.
    • பஸ்சில் ஊருக்கு செல்வதற்காக அசகளத்தூர்பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி பூங்குழலி (வயது 37) இவர் தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அசகளத்தூர் பகுதியைச் சேர்ந்த குரு மகன் ரமேஷ் (25) வங்கி வேலை நேரம் முடிந்த பிறகு வங்கிக்கு வந்து பணம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி அதிகாரிகள் வங்கி வேலை நேரம் முடிந்து விட்டது. நாளைக்கு வந்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.

    பின்பு வேலை நேரம் முடிந்து வங்கி துணை மேலாளர் பூங்குழலி மற்றும் கல்விக்கரசி ஆகியோர் பஸ்சில் ஊருக்கு செல்வதற்காக அசகளத்தூர்பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் இவர்களை வழிமறித்த ரமேஷ் இருவரையும் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து துணை மேலாளர் பூங்குழலி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

    • இரு வரையும் அங்குள்ளவர்கள் சமாதானம் செய்து வைத்த னர்.
    • பண்ருட்டி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த நத்தம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் நாரா யணன் மகன் சுனில்ராஜ் (வயது 16). இவர் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி யில் படித்து வருகிறார். கடந்த 3-ந் தேதி பள்ளி யில் விளையாடும் போது அதே பள்ளியில் படிக்கும் நவீன்குமார் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இரு வரையும் அங்குள்ளவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை ராமபுரம் பஸ் நிறுத்தத்தில் 2 மாணவர்க ளும், சக மாணவர்களுடன் சேர்ந்து 2 கோஷ்டிகளாக பிரிந்து தாக்கி கொண்ட னர். அப்போதும் அங்கி ருந்த வர்கள் மாணவர் களை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்த னர்.

    பள்ளி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பும்போது நவீன்குமாரின் நண்பர் களான சிரஞ்சிவி, ராகுல், தேவா, லோகேஷ்வரன் ஆகியோர், சக மாணவர்க ளான சுனில்ராஜ், ஜெயசந்தி ரன், ரவிசந்திரன், மோகேஷ் ஆகிய 4 பேரை தாக்கினர். இதில் காயமடைந்த 4 பேரும் பண்ருட்டி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீ சார் சிரஞ்சிவி, ராகுல், தேவா, லோகேஷ்வ ரன், யோகேஷ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களி டையே அடிக்கடி மோதல் வருவது குறிப்பிடத்தக்க தாகும்.

    • மேயர் மகேஷ் ஆய்வு செய்து உத்தரவு
    • ரோட்டின் ஆக்கிரமிப்பு பகுதி இடத்தில் பஸ் நிறுத்தம் அமைக்க தேவையான நடவடிக்கை

    நாகர்கோவில், நவ.6-

    நாகர்கோவில் மாநகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட சுங்கான்கடை பகுதியில் மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அங்கு அரசு தொடக்கப்பள்ளியில் சேதமடைந்த சுற்றுச்சுவரை பார்வையிட்ட அவர், அதனை சரி செய்யவும், பாலிடெக்னிக் கல்லூரி முன்புள்ள மழைநீர் வடிகால் ஓடையில் மண் அடைப்பு ஏற்பட்டுள்ளதை சீரமைக்கவும் உத்தரவிட்டார். மேலும் பழுதுபட்டுள்ள குடிநீர் வால்வை மாற்றி அமைக்கவும், பொதிகை நகர் தெருவில் ஊற்று தண்ணீர் சாலையில் செல்வதால் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ள பாசியை அகற்றி சரி செய்யவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பொதுபணித்துறைக்கு சொந்தமான குளத்தில் விழுந்து கிடக்கும் மரத்தை அதற்றவும், ரோட்டின் ஆக்கிரமிப்பு பகுதி இடத்தில் பஸ் நிறுத்தம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேயர் மகஷே் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி 41-வது வார்டு ஹவ்வா நகரில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை சீரமைப்பு பணி, 34 -வது வார்டு பார்க் ரோடு காமராஜர் தெரு மற்றும் என.பி. காலனி பகுதிகளில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம் அமைக்கும் பணி, 16-வது வார்டு பரமேஸ்வரன் தெரு, கே.பி. ரோடு குறுக்கு சாலை, எம்.எஸ் ரோடு குறுக்கு சாலை பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம் அமைக்கும் பணி போன்றவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர நல அலுவலர் டாக்டர் ராம் குமார், நகரமைப்பு ஆய்வாளர் சந்தோஷ், சுகாதார ஆய்வாளர் சத்தியராஜ், மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், கவுன்சிலர்கள் அணிலா, தினகரன், பகுதி செயலாளர் ஷேக்மீரான், வட்ட செயலாளர் ராஜேஷ் மாநகராட்சி தொழில்நுட்ப உதவியாளர்கள் ரவி, மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், அணிகளின் நிர்வாகிகள் சரவணன், வட்டச் செயலாளர் அப்துல் கரீம், ஜானகிராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் இறங்கிய உறவி னர்கள் சேஷாத்திரிக்கு போன் செய்தனர்.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சேஷாத்திரி (வயது 30). முடி வெட்டும் தொழிலாளி. இவர் புதுவை யில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது தாத்தா கடந்த மாதம் இறந்துவிட்டார். அவருக்கு 30-ம் நாள் வழிபாடு நேற்று நடைபெற்றது. இதற்காக இவரது உறவி னர்கள் டி.குமாரமங்க லத்திற்கு வந்திருந்தனர். வழி பாடு முடிந்து சென்னையை சேர்ந்த உறவினர்கள் நேற்று நள்ளிரவு ஊருக்கு புறப்பட்டனர். அவர்கள் சேஷாத்திரி வீட்டிலேயே செல்போனை வைத்து விட்டு சென்றனர். இதனால் விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் இறங்கிய உறவி னர்கள் சேஷாத்திரிக்கு போன் செய்தனர். செல்போ னை கொண்டு வந்து தரு மாறு கோரினர். 

    இதையடுத்து இன்று அதிகாலை 4.30 செல்போனை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கி ளில் சேஷாத்திரி சென்றார். அப்போது திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பேங்கியூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பான தகவலின் பேரில் திரு வெண்ணைநல்லூர் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சேஷாத்திரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இத்தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த சேஷாத்திரியின் உறவி னர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • சேலத்தில் இருந்து நெல்லைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நெல்லை கிளை சார்பில் காலை 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.
    • தென் மாவட்டங்களுக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும் களியக்காவிளை பஸ் மட்டும் நேரடி பஸ்சாக இயங்கியது.

    சேலம்:

    சேலத்தில் இருந்து நெல்லைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நெல்லை கிளை சார்பில் காலை 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.

    அதேபோல அரசு போக்குவரத்து கழகம் நெல்லைக்கோட்டம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் 2001 ஜனவரி 14 முதல் தினமும் மாலை 4.15 மணிக்கு சேலத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைக்கு பஸ் இயக்கப்பட்டது. இதேபோல் மறு மார்க்கத்திலும் பஸ் இயக்கப்பட்டது.

    அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகம் 2014-ம் ஆண்டு பகலில் நெல்லைக்கு இயக்கிய பஸ் சேவையை நிறுத்திவிட்டது. 2021 இல் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓசூர் கிளை தொடங்கப்பட்ட நிலையில் சேலத்தில் இருந்து நெல்லைக்கு இயங்கிய பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு நீட்டிக்கப்பட்டது .

    இதனால் சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும் களியக்காவிளை பஸ் மட்டும் நேரடி பஸ்சாக இயங்கியது. இந்த பஸ்சிற்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முதல் நெல்லைக்கோட்ட நிர்வாகம் எந்த அறிவிப்பு இல்லாமல் சேலம் கலியக்காவிளை பஸ் சேவையை நிறுத்தியது. இதனால் சேலத்தில் இருந்து மதுரை, விருதுநகர், நெல்லை, நாகர்கோவில் செல்லும் பயணிகள் போதிய பஸ் வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    எனவே சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மீண்டும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மீண்டும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நிழற்குடை அருகே உள்ள முட்புதருக்குள் வீசப்பட்டு பயனற்று கிடக்கிறது.
    • உலகநாதபுரம் மெயின் ரோட்டில் மழைநீர் கால்வாய் பணிக்காக பஸ்நிறுத்த நிழற்குைடயை அகற்றினர்.

    திருவொற்றியூர்:

    எண்ணூர் உலகநாதபுரம் மெயின் ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் பணி நடைபெற்றது. இதற்காக அங்கிருந்த பஸ் நிறுத்த நிழற்குடையை தற்காலிகமாக அதிகாரிகள் அகற்றினர்.

    கடந்த 3 மாதத்துக்கு முன்பு மழைநீர் வடிகால் பணி முடிந்த நிலையில் பஸ் நிறுத்த நிழற்குடையை அதே இடத்தில் வைக்கப்படவில்லை. இதையடுத்து அந்த நிழற்குடை அருகே உள்ள முட்புதருக்குள் வீசப்பட்டு பயனற்று கிடக்கிறது.

    நிழற்குடை இல்லாததால் அப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயில் மற்றும் மழை நேரத்தில் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் அவர்கள் பஸ்சுக்காக பஸ்நிறுத்தம் இல்லாத இடத்தில் சாலையோரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    மழைநீர் வடிகால்வாய் பணி முடிந்து நிலையில் அப்பகுதியில் மீண்டும் பஸ்நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து எண்ணூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, உலகநாதபுரம் மெயின் ரோட்டில் மழைநீர் கால்வாய் பணிக்காக பஸ்நிறுத்த நிழற்குைடயை அகற்றினர்.

    இந்த பணி முடிந்தும் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த நிழற்குடை முட்புதரில் வீசப்பட்டு கிடக்கிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள். சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் பயணிகள் பயன்பாட்டிற்கு அதே பகுதியில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
    • முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா சத்யநாராயணன் நன்றி கூறினார்.

    கூடுவாஞ்சேரி:

    வண்டலூர் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பிரதான சாலையை ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கவும், வண்டலூர்- வாலாஜாபாத் நோக்கி செல்லும் மேம்பாலம் கீழ்பகுதியில் காஞ்சிபுரம் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைப்ப தற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா காட்டாங் கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான வி.எஸ்.ஆராமுதன் தலைமையில் நடைபெற்றது. வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி விஜயராஜ், தி.மு.க. கிளை செயலாளர்கள் சத்ய நாராயணன், வாசு, காசி, லோகநாதன், குணசேகரன், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் செல்வம் எம்.பி., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக பூமி பூஜை போட்டு, அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினர்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ட ராகவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கெஜலட்சுமி சண்முகம், நெடுங்குன்றம் வனிதா ஸ்ரீசீனிவாசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வண்டலூர் குணசேகரன், காரணைப் புதுச்சேரி பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா சத்யநாராயணன் நன்றி கூறினார்.

    • சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவுக்காக தாணிப்பாறையில் தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது.
    • துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 6 நாட்க ளுக்கு பக்தர்கள் கோவி லுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்படவுள்ள தற்காலிக பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குப் படுத்தவும் போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் குடிநீர், சுகாதார வசதிகள் செய்து தரப்படும். வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப் படும்.

    மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழு அமைக்கப் பட உள்ளது. ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக், போதை பொருட்களை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

    தாணிப்பாறை அடி வாரத்தில் சேரும் குப்பை களை அகற்றுவதற்கு போதுமான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    வெளியூர் பஸ்கள், தனி நபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்க ளையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது. சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது துணை இயக்குநர் மேகமலை புலிகள் காப்பகம் (ஸ்ரீவில்லி புத்தூர்) திலீப்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஸ்ரீவில்லி புத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை வாழ் மக்களுடன் பிரிக்க முடியாத அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த மின்சார ரெயில் சேவையை போலவே பஸ் போக்குவரத்தும் உள்ளன.
    • போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவையும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

    'பெருநகரம்' என்ற அந்தஸ்தை பெற்ற சென்னை மாநகராட்சி சுமார் 90 லட்சம் மக்கள் தொகையை கொண்டதாகும். சென்னை நகரத்தோடு புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் கொண்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

    சென்னை வாழ் மக்களுடன் பிரிக்க முடியாத அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த மின்சார ரெயில் சேவையை போலவே பஸ் போக்குவரத்தும் உள்ளன. 620 வழித்தடங்களில் 3 ஆயிரம் மாநகர பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. அதில் 30 லட்சம் மக்கள் தினமும் பயணம் செய்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களை அன்றாடம் மாநகர பஸ்கள் சுமந்து செல்லும் சேவையை செய்து வருகிறது.

    இதற்கிடையில் சென்னையை சிங்கார சென்னையாக மாற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகிறது. தூய்மை, பசுமையான எழில்மிகு நகரமாக உருவாக்குவதற்கான பல்வேறு திட்டப்பணிகள் கடந்த 2 வருடமாக முழு வீச்சில் நடைப்பெற்று வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவையும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. மெட்ரோ ரெயிலில் தினமும் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

    சென்னையில் நாளுக்கு நாள் வாகன பெருக்கமும், மக்கள் நெருக்கமும் அதிகரித்து வரும் நிலையில் அதனை கண்காணித்து அதற்கேற்றவாறு புதிய மேம்பாலங்களும், ரெயில்வே மேம்பாலங்களும் கட்டும் பணியும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வருகிறது. இலவசமாக பயணம் செய்யலாம் என்பதால் தினமும் 10 லட்சம் பேருக்கு மேல் பஸ்களை மகளிர் ஆக்கிரமிக்கிறார்கள்.இதனால் பஸ் நிறுத்தங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் மாநகர பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்லும் நிறுத்தங்களில் கடந்த சில மாதங்களாக கூட்டமாக உள்ளது.

    மாதவரம், மூலக்கடை, பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, மாத்தூர், கொளத்தூர், திருமங்கலம், அண்ணாநகர், முகப்பேர், மதுரவாயல், பாடி, அம்பத்தூர், திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாய்பேட்டை, அடையார், திருவான்மியூர், மயிலாப்பூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், வடபழனி, அசோக்நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் நெரிசலில் பயணம் செய்கின்றனர். பஸ் நிறுத்தங்களில் பயணிகள் கும்பல் கும்பலாக காத்து நிற்பதை காண முடிகிறது.

    ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தப்படும் சென்னை நகரத்தில் பஸ் நிழற்கூடங்கள் ஒரு சில இடங்களில் அவலமாக காட்சி அளிக்கின்றன. மேற்கூரை உடைந்தும், இருக்கைகள் சேதம் அடைந்தும் இருப்பதால் பயணிகள் உட்கார முடிவதில்லை. சில இடங்களில் இருக்கைகள் மாயமாகி உள்ளன.

    மழை காலங்களில் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடம் போதவில்லை. குறுகிய அளவில் இந்த நிழற்கூடங்கள் இருப்பதால் பயணிகள் மழையிலும் வெயிலிலும் நின்று கஷ்டப்படுகிறார்கள். சென்னையில் 2 ஆயிரம் பஸ் நிழற் கூடங்கள் தற்போது உள்ளன. இதில் 730 நிழற்கூடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அதில் விளம்பரங்கள் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.

    1000 இடங்களில் உள்ள நிழற்கூடங்கள் மாநகராட்சி தற்போது கவனித்து வருகிறது. அவை கடந்த 5 வருடத்திற்கு முன்பு நிறுவப்பட்ட நிழற்கூடங்கள் ஆகும். இந்த நிழற்கூடங்களை தனியாருக்கு விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் அனைத்து நிழற்கூடங்களும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஆனால் தற்போது இந்த நிழற்கூடங்களில் சில பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தற்போது அமைக்கப்படுகின்ற நிழற்கூடங்கள் பெரும்பாலும் 30 அடி நீளம், 8 அடி அகலத்தில் உள்ளன. இவற்றில் மேல் பக்கவாட்டு பகுதி அடைக்கப்படாமல் திறந்து இருப்பதால் பயணிகள் மழையில் நனைகின்ற நிலை உள்ளது. மேலும் நீளமான இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 'ஸ்டெய்ன்லஸ்' இரும்பு குழாயால் போடப்பட்டு இருப்பதால் அதில் உட்கார முடியவில்லை என்ற குற்றச்சாட்டையும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் முக்கிய பிரதான சாலைகளில் உள்ள நிழற்கூடங்கள் அழகாக பளிச்சிடும் அதேவேளையில், உட்புற சாலைகளில் உள்ள நிழற்கூடங்கள் கேட்பாரற்று கிடக்கிறது. அதில் வியாபாரிகளும், சாலையோரத்தில் இருப்பவர்களும் நிரந்தரமாக ஆக்கிரமித்துள்ளனர். பயணிகள் நிற்பதை விட வியாபாரிகளின் வாகனங்களும், கடைகளும் தான் அங்கு உள்ளன.

    இதனால் பயணிகள் சாலையில் பஸ்சுக்கு காத்து நிற்கின்ற நிலை உள்ளது. நிழற்கூடங்களை மது அருந்தி விட்டு புகழிடமாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தனித்தனி இருக்கைகளாக போடாமல் நீளமான இருக்கையாக போடப்பட்டு உள்ளது. அதுவும் ஒரே வரிசையில் இடம்பெற்றுள்ளது. சிறிய பஸ் நிறுத்தங்களுக்கு அது போதுமானதாக இருந்தாலும் கூட மக்கள் அதிகளவில் நிற்கக் கூடிய நிறுத்தங்களில் நிழற்கூடங்களின் அளவை பெரிதுபடுத்தவோ, இருக்கைகளை அதிகப்படுத்தவோ செய்யலாம் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நிழற்கூடங்கள் சேதம் அடைந்து அமர முடியாமல் இருப்பதை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கண்காணித்து அவற்றை சரி செய்ய வேண்டும். நகரை அழகுப்படுத்தும் விதமாக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் சிறப்பாக இருக்கின்ற வேளையில் பஸ் நிழற்கூடங்கள் பயணிகளுக்கு பயன் இல்லாமல் வெறும் காட்சி பொருளாக இருப்பது சரியல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட நிழற்கூடங்கள் பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் உள்ளன. அதனை வணிக ரீதியாகவும், தங்கும் இடமாகவும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை எல்லாம் ஆய்வு செய்து முறையாக பராமரிக்க வேண்டும்.

    உடைந்து சேதம் அடைந்த நிழற்கூடங்களை உடனே சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாநகராட்சி கொண்டு வர வேண்டும். ஒரு சில பஸ் நிறுத்தங்களில் உள்ள நிழற்கூடங்களை விரிவுப்படுத்தலாம். இடவசதி இல்லாத இடங்களில் சிறியதாகவும், விசாலமான பகுதியில் மக்கள் அதிகம்பேர் நிற்கும் வகையில் பெரியதாகவும் நிழற்கூடங்களை அமைக்கலாம் என கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் நிழற்கூடங்களில் சிலர் நிரந்தரமாக ஆக்கிரமித்து இருப்பதால் பயணிகள் அதற்குள் செல்ல தயங்குகிறார்கள். அத்தகைய நிலையை மாற்றி அனைத்து நிழற் கூடங்களையும் பயணிகள் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    பகலில் மட்டுமின்றி இரவு நேரங்களில் பயணிகள் பாதுகாப்பாக நிற்கவும், இருள் சூழ்ந்த இடங்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவும் கோரிக்கை வைக்கின்றனர். ஒரு சில இடங்களில் நிழற்கூடங்களில் இரவில் பெண்கள் நிற்க முடியாத அளவிற்கு வெளிச்சமின்றி இருளாக உள்ளது. இதனால் அச்சத்துடன் காத்து நிற்கின்றனர். அதுபோன்ற இடங்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். நிழற்கூட விளம்பரங்கள் மூலம் வருவாயை ஈட்டும் மாநகராட்சி பயணிகளுக்கு அடிப்படையான சில வசதிகளை செய்து கொடுத்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    ×