search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழுது"

    • சாமி புறப்பாடு செய்து சோமவார மடத்தில் இருந்து அன்னதானம் செய்வது வழக்கம்.
    • கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்ட அனுமதி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யேஸ்வர சுவாமிக்கு தெற்கு வீதியில் சோமவார மடம் இருந்து வருகிறது.

    இந்த மடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பூண்டி சைவ செட்டியார்கள் 4வது சோமவாரத்தில் உபயங்கள் செய்து, சாமி புறப்பாடு செய்து அந்த சோமவார மடத்தில் இருந்து அன்னதானம் செய்வது வழக்கம்.

    இந்த இடத்திற்கு திருப்பூண்டி சைவ செட்டியார்கள் சார்பில் கோவிலுக்கு முறையாக குத்தகை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து குடியிருந்து வருகிறார்தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்ததால் அந்த கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்கள் அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி கோரினர்.

    இந்த கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறையினர் அந்த கட்டித்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர் இந்த நிலையில் தற்சமயம் அந்த கட்டிடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வரும் தனி நபருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு, அதன் நகல் கதவில் ஒட்டப்பட்டது.

    அந்த ஆக்கிரமிப்புதாரர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் அறநிலையத்துறை சார்பில் அந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    இதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுபடி நாகை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, வேதாரண்யம் கோவில் நிர்வாக அதிகாரி கவியரசு மற்றும் வருவாய்துறையினர், கோவில் பணியாளா்கள் ஜே.சி.பிஇயந்திரம் மூலம் கட்டிடத்தை வேதாரண்யம்காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் ஆய்வாளர்கள்குணசேகரன் கன்னிகா, பசுபதி, மற்றும் போலிசார், பாதுகாப்புடன் பழுதடைந்த ஓட்டுவீட்டைஇடித்து அகற்றினர்

    பின்பு திருக்கோயில் வசம் இடம் எடுக்கப்பட்டது. அக்கிரமிப்பில் இருந்து மீட்க பட்டசொத்தின் மதிப்பு சுமார்ரூ. 1 கோடி என கூறப்படுகிறது.

    • பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டவில்லை.
    • கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்–குட்பட்ட கீழத்தென்பாதி 17-வதுவார்டில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற கவுன்சிலர் ரம்யாதனராஜ் தலைமை வைத்தார்.

    துணைத்தலைவர் சுப்பராயன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், கணக்கர் ராஜகணேஷ் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் ஆணையர் வாசுதேவன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து பின்பு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    கூட்டத்தில் பொதுமக்கள் கீழத்தென்பாதி நகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்தும் புதிய கட்டிடம் கட்டவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் சமுதாயக் கூடத்தில் கல்வி கற்கும் நிலை இருந்து வருகிறது.

    மாணவ- மாணவிகளின் நலன் கருதி புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும். 17 வது வார்டில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிசை பகுதி நிறைந்த இப்பகுதியில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் வார்டு குழு உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு வெவ்வேறு பேருந்துகளில் ஏற்றிவிடப்பட்டனர்.
    • சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி:

    தக்கலையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கல்லங்குழியில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் பயணிகள் கூட்டம் படிக்கட்டு வரை நின்று கொண்டு பயணம் செய்தனர். பஸ் குமாரகோவில் அருகே வரும்போது அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் டிவைடர் அருகே சாலையில் உள்ள ஒரு பெரிய பாதாள குழியில் டயர் இறங்கியது. பஸ்சின் படிக்கட்டுகள் தரையில் தட்டியது. இதனால் பஸ்சின் பட்டைகள் ஒடிந்தது.

    திடீரென பஸ் ஒருபுறமாக சரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். டிரைவரின் மிதமான வேகத்தாலும், சாதுரியத்தாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பின்னர் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு வெவ்வேறு பேருந்துகளில் ஏற்றிவிடப்பட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு சென்றவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செய்யாமங்கலம் பள்ளி கட்டிடம் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்பட்டு வருவதால் இன்னும் இடித்து அகற்றப்படவில்லை.
    • மழை காலம் தொடங்குவதற்குள் பழுதான பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் தாலுக்கா செய்யாமங்கலம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.

    இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிக்கென புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    பள்ளியின் பழைய கட்டிடம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் எந்த நேரத்தில் இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளது.

    இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை வற்புறுத்தி வந்துள்ளனர்.

    மேலும் கடந்த ஆண்டு பருவ மழை காலத்தில் அரசு அறிவுறுத்தலின் பேரில் பூதலூர் தாலுகாவில் பழுதான பல்வேறு பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. ஆனால் செய்யாமங்கலம் பள்ளி கட்டிடம் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்பட்டு வருவதால் இன்னும் இடித்து அகற்றப்படவில்லை.

    பழுதான பள்ளி கட்டடத்தின் அருகில் வீடுகளும் ஆற்றுக்கு செல்லும் சாலையும் உள்ளதால் அந்த வழியாக ஆற்றுக்கு செல்பவர்களும் வீடுகளும் வீடுகளில் இருப்பவர்களும் எந்த நேரத்திலும் பயத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    வரும் பருவ மழை காலம் தொடங்குவதற்குள் பூதலூர்தாலுகாவில் உள்ள செய்யாமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் பழுதான பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    இது குறித்து பூதலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத்தேர்தல் நடைபெற்றது.
    • வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

     பல்லடம் :

    தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத்தேர்தல் நடைபெற்றது இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    அவற்றில் பழுதடைந்த 68 மின்னனு எந்திரங்கள் மற்றும் 60 மின்னணு கட்டுப்பாட்டு எந்திரங்கள்( கண்ட்ரோல் யூனிட்), 206 வி.வி.பேட் ஆகியவை பழுதுநீக்கி சரி செய்வதற்காக பெங்களூரூவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், வட்டாட்சியர் நந்தகோபால், தேர்தல் வட்டாட்சியர் தங்கவேல் மற்றும் அனைத்து கட்சியினர் பார்வையிட்டனர்.

    • வாக்குவாதத்தில் ஈடுபட்ட நகர்மன்றத் தலைவர் பொன். ஆசை தம்பி
    • தரமாக சீரமைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலையை தற்காலிகமாக செப்பனிட ரூ. 14.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் குழித் துறை முதல் களியக்காவிளை வரையிலான பகுதிகளில் சாலை அமைக்காமல் சேதமடைந்த பகுதிகளை மட்டும் சீரமைக்கபடுவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதனை கண்டித்து அவர்கள் திடீரென அதிகாரி கள் மற்றும் ஒப்பந்ததாரரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபர ப்பும் பதட்டமும் நிலவி யது. இதனையடுத்து சாலை போடும் பணி நிறுத்த ப்பட்டது.

    இந்நிலையில் திடீரென பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களுடன் அங்கு வந்த குழித்துறை நகர்மன்றத் தலைவர்பொன். ஆசைத் தம்பி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ் சாலை பணி தொடங்கிய நிலையில் தனக்கு தகவல் தரவில்லை என்றும் சேதமடைந்த பகுதியை மட்டும் சரி செய்து விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாலை செப்பனிடும் பணியை தடுத்து அதிகாரிகளிடம் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    மேலும் முறையாக தரமாக சாலை போட வேண்டுமென்றும், சாலை முறையாக உடைத்து சீரமைக்க வேண்டும் என்றும், மேலோட்டமாக சாலையை செப்பனிட கூடாது எனவும், இரவு நேரங்களில் சாலை போட கூடாது எனவும் அவர் கூறினார்.

    இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.இதையடுத்து அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி தரமான முறையில் சாலை செப்பனிடவும், சேதமடைந்த பகுதிகள் சீரமைப்பு முடிந்தவுடன் அனைத்து பகுதிகளும் முறையாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து நகர்மன்றத் தலைவர்பொன். ஆசைத் தம்பி போராட்டத்தை கை விட்டார்.இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தற்போது எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த த்தின் அடிப்படையில் சேதமடைந்த பகுதிகளை மட்டும் சீரமைத்து வரு கிறோம்.

    அடுத்து உடனடியாக நிரந்தரமாக சீரமைக்க நட வடிக்கை மேற்கொள்ள ப்படும் என்றனர். ஆனால் பொதுமக்கள் இதில் சமாதானம் அடையாமல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால்சிங், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திவாகர் ஆகியோ ரும் போராட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் ராஜா மற்றும் கவுன்சிலர்களும் சாலையை பார்வையிட்டு தரமாக சீரமைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

    • எரிவாயு தகண மேடை டென்டர் குறித்து உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும் நிலை தலைகுணிவாக உள்ளது.
    • பழைய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறையில் கழிவு நீர் வெளியேறி தேங்கி நிற்கிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அவை கூடத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபாலன், மேலாளர் காதர்கான், சுகாதார ஆய்வாளர் செந்தில் ராம்குமார், நகர அமைப்பு ஆய்வாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர். மன்ற பொருள்களை கணக்கர் ராஜகணேஷ் வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    உறுப்பினர் ரம்யாதன்ராஜ் பேசுகையில், எனது வார்டில் கடந்த ஐந்து மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

    கவுன்சிலர் வள்ளிமாரிமுத்து: மேட்டு தெருவில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். கவுன்சிலர் வேல்முருகன்: சீர்காழி தீயணைப்புநிலையத்திற்கு தீயணைப்பு வாகனம் எளிதாக சென்று வரும் வகையில் சாலை அமைத்திடவேண்டும்.

    கவுன்சிலர் ராஜசேகர்: நகரில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில் எரிவாயு தகண மேடை டென்டர் குறித்து உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும் நிலை தலைகுணிவாக உள்ளது என்றார். குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி கோரூபவர்களுக்கு டெண்டர் கொடுப்பதுதான் முறையாகும்.

    கவுன்சிலர் முழுமதி இமயவரம்பன்: எனது வார்டில் பள்ளி கட்டிடம் பழுதாய் உள்ளது. இதை போல் சத்துணவு கூடமும் பழுது அடைந்துள்ளது இதனை சரி செய்ய வேண்டும். பனமங்கலம் பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    கவுன்சிலர் சுவாமிநாதன்: பழைய பஸ் நிலையத்தில் கட்டணக் கழிப்பறையில் கழிவு நீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

    கவுன்சிலர் ரமாமணி : முன்பு எரிவாயு தகணமேடை நடத்திவந்தவரிடம் பணியாற்றி தற்போது டென்டர் கோரூம் பாபு கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக சேவை செய்ததால் அவருக்கு டென்டர் விடவேண்டும்.

    நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகையில், சீர்காழி நகராட்சி பகுதியில் பொது நிதியின் மூலம் மின்விளக்குகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வடிகால் வசதி விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து நகராட்சி கூட்டத்தில் ஈசானிய தெருவில் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு கீழ் சேவை அமைப்பால் நடத்தப்பட்டு வரும் எரிவாயு தகணமேடை டென்டர் விடுவது தொடர்பாக நகர்மன்ற உறுப்பினர்கள் இடையே கட்சி பாகுபாடு இல்லாமல் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாக்குவாதம் ஏற்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் நகர்மன்ற தலைவர் மேஜையை சூழ்ந்துக் கொண்டு மேஜையை தட்டி ஆட்சேபனை செய்து விவாதத்தில் ஈடுப்பட்டனர்.

    குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்த காமராஜர் மக்கள் நலசேவை அறக்கட்டளைக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என தலைவர் துர்காபரமேஸ்வரி அறிவித்தார். இதனால் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது. டென்டரை நேசக்கரங்கள் அமைப்பிற்கு தரவலியுறுத்தி நகர்மன்ற உறுப்பினர்கள் பாலமுருகன், முழுமதி இமயவரம்பன், ராமு, ராஜேஷ், நித்யாதேவி, வள்ளி, கலைசெல்வி, ரம்யா, ரேணுகாதேவி ஆகிய 9 உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் முழங்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.

    • ரெயில்வே சாலை மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக சேதம் அடைந்திருந்தது.
    • 300 மீட்டர் நீளத்தில், 8 மீட்டர் அகலம் கொண்ட புதிய ஈரடுக்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    பாபநாசம்:

    பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பாபநாசம் ரயில்வே சாலை மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக சேதம் அடைந்திருந்தது.

    இந்த சாலையினை புதுப்பிக்க வலியுறுத்தி பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம், தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் பாபநாசம் வர்த்தக சங்கம் ஆகியோர் தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் பாபநாசம் ரயில்வே சாலைக்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 300 மீட்டர் நீளத்தில், 8 மீட்டர் அகலம் கொண்ட ஈரடுக்கு புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    இப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்த ரயில்வே கோட்ட பொது மேலாளருக்கு திருச்சி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சரவணன், நெல்லை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் கிரி பாபநாசம் வர்த்தக சங்கத் தலைவர் குமார், தென்னக ரயில்வே கோட்ட முதல் நிலை ஒப்பந்தக்காரர் சுரேஷ் ரெட்டி ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    • கீழத்தெருவில் பல ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
    • பொதுமக்கள் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் மணலி ஊராட்சி, எம்.கே நகர் கீழத்தெருவில் பல ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் சூழலில் பொதுமக்கள் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொதுமக்கள் பழுதடைந்த சாலையில் நாற்று நடும் நூதன போராட்டத்தை நடத்தினர்.

    • முனிசிபல் பேட்டை சமுதாய கூடம் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படும்.
    • அங்கன்வாடி மையம் கட்டுவதற்குமான இடத்தை ஷா நவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம்நகராட்சி முனிசிபல் பேட்டை சமுதாயக் கூடம் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளது. அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், அப்பகுதியில், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையம் கட்டுவதற்குமான இடத்தை பார்வையிட்டு ஷா நவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். மேலும், டாடா நகர் மற்றும் சேவாபாரதி பகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரை வில் அப்பகுதிகளில் புதிய கட்டடப் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    • புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
    • பயணிகளின் தாகத்தை தீர்க்க அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி பயனற்று காட்சி பொருளாக உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடு துறை மற்றும் சென்னை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் சீர்காழியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் நகரபேருந்துகள் இயக்கப்ப ட்டுவருகின்றன.

    இதனால் புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி கள், வியாபாரிகள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பயணிகளின் தாக த்தை தீர்க்க தனியார் அமைப்பு மூலம்தண்ணீர் தொட்டி சுமார் 10ஆண்டு களுக்கு முன்னர் கட்ட ப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக இந்த தண்ணீர் தொட்டி பயனற்று காட்சி பொரு ளாக உள்ளது.இதனால் பயணிகள் தாகம் தணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    முன்பு புதிய பஸ் நிலையத்தில் அம்மா வாட்டர் விற்பனை ரூ10க்கு இருந்துவந்ததால் ஏழை, எளியோரும் அவரசதாகத்திற்கு அம்மா வாட்டர் வாங்கி பயன்படுத்தி வந்தநிலையில் அவையும் கடந்த பல மாதங்களாக விற்பனை இல்லாமல் மூடப்பட்டுகிடப்பதால் ரூ.20க்கு கொடுத்து தண்ணீர் பாட்டில் பயணிகள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

    ஆகையால் பொதும க்களுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை பழுது நீக்கி மீண்டும் பயன்பாட்டிற்கு கொ ண்டுவர வலியுறுத்த ப்பட்டுள்ளது.

    • வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீரை சரியான முறையில் பயன்படுத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது.
    • நீர் பாய்ச்சுவதற்கும், உபரி நீரை வெளியேற்றுவதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    நீடாமங்கலம்:

    தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகிலுள்ள விழிதியூர் என்ற கிராமத்திலிருந்து இரும்புத்தலை என்ற கிராமத்தின் வழியாக சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவளிவநல்லூர், குமாரமங்கலம், அரித்துவாரமங்கலம், கேத்தனூர், பெருங்குடி ஆகிய கிராமங்களுக்கு நீர் ஆதாரமாகவும் பல ஏக்கர் வயல்களுக்கு விவசாயம் செய்வதற்கு பயனுள்ளதாக விளங்கக்கூடிய வாய்க்காலின் நீரை ஒழுங்குபடுத்தும் நீர்த்தேக்கமானது திருவாரூர் மாவட்டம் பெருங்குடியில் அமைந்துள்ளது.

    அந்த நீர்த்தேக்கமானது பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீரை சரியான முறையில் பயன்படுத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது.

    மேலும் நீர் பாய்ச்சுவதற்கும் உபரி நீரை வெளியேற்றுவதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் தங்களின் சொந்த செலவில் சரி செய்து உள்ளனர். ஆனால் அது தற்காலிகமானது. அதுமட்டுமல்லாது வாய்க்காலை சரிவர தூர்வார வில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். எனேவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனடியாக சீர் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×