என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பஸ் நிலையத்தில் பயன்பாடின்றி இருக்கும் தண்ணீர் தொட்டி
- புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
- பயணிகளின் தாகத்தை தீர்க்க அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி பயனற்று காட்சி பொருளாக உள்ளது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடு துறை மற்றும் சென்னை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் சீர்காழியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் நகரபேருந்துகள் இயக்கப்ப ட்டுவருகின்றன.
இதனால் புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி கள், வியாபாரிகள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பயணிகளின் தாக த்தை தீர்க்க தனியார் அமைப்பு மூலம்தண்ணீர் தொட்டி சுமார் 10ஆண்டு களுக்கு முன்னர் கட்ட ப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த தண்ணீர் தொட்டி பயனற்று காட்சி பொரு ளாக உள்ளது.இதனால் பயணிகள் தாகம் தணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
முன்பு புதிய பஸ் நிலையத்தில் அம்மா வாட்டர் விற்பனை ரூ10க்கு இருந்துவந்ததால் ஏழை, எளியோரும் அவரசதாகத்திற்கு அம்மா வாட்டர் வாங்கி பயன்படுத்தி வந்தநிலையில் அவையும் கடந்த பல மாதங்களாக விற்பனை இல்லாமல் மூடப்பட்டுகிடப்பதால் ரூ.20க்கு கொடுத்து தண்ணீர் பாட்டில் பயணிகள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
ஆகையால் பொதும க்களுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை பழுது நீக்கி மீண்டும் பயன்பாட்டிற்கு கொ ண்டுவர வலியுறுத்த ப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்