search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழுது"

    • பல ஆண்டுகளாக சத்துணவு கூடம் பழுதடைந்து காணப்பட்டது.
    • ரூ.15 ஆயிரம் மதிப்பீட்டில் சத்துணவு கூடம் பழுது நீக்கம் செய்து சீரமைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகளாக சத்துணவு கூடம் பழுதடைந்து காணப்பட்டது.

    இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தாஹிர் வேண்டுகோளை ஏற்று, நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை சார்பில் ரூ.15,000 மதிப்பீட்டில் சத்துணவு கூடம் பழுது நீக்கம் செய்து சீரமைக்கப்பட்டது. இந்த பணிகளை பெற்றோர் ஆசிரியர் தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் இணைந்து செய்து முடித்தனர்.

    • கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் ெரயில்வே கேட் உள்ளது.
    • திடீரென்று ெரயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டதால் சரியான முறையில் ெரயில்வே கேட் மூடவில்லை.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் ெரயில்வே கேட் உள்ளது. இதன் அருகில் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையம் உள்ளன. ெரயில்கள் வந்து செல்லும் நேரத்தில் கம்பியம் பேட்டை ெரயில்வே கேட் மூடப்படும். ெரயில்வே கேட் மூடும் சமயத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வழக்கம். மேலும் கம்மியம்பேட்டை ெரயில்வே கேட் அடிக்கடி பழுது ஏற்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை மன்னார்குடி - திருப்பதி எக்ஸ்பிரஸ் கடலூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் கம்மியம் பேட்டையில் ெரயில்வே கேட்டை மூடும் பணியில் ஊழியர் ஈடுபட்டு வந்தார். திடீரென்று ெரயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டதால் சரியான முறையில் ெரயில்வே கேட் மூடவில்லை. இதன் காரணமாக தண்ட வாளத்தில் சிக்னல் கிடைக்க வில்லை. சிக்னல் கிடைக்காத தால்ரெயில் டிரைவர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் ெரயிலை நிறுத்தினார். இதனை தொடர்ந்து ெரயில்வே கேட் கீப்பர் ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் ஊழி யர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ெரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுதை நீண்ட போராட்டத்திற்கு பிறகு சரி செய்தனர். அதன் பின்னர் மன்னார்குடி- திருப்பதி எக்ஸ்பிரஸ் ெரயில் சுமார் அரை மண நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது  ரெயில்வே கேட் பழுதானதால் கடலூர் கம்மியம்பேட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் சென்னை மற்றும் சிதம்பரத்தி லிருந்து வரக்கூடிய அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் வெளியூருக்கு செல்லக்கூடிய வாகனங்கள் ஜவான் பவன் சாலை, கம்மியம்பேட்டை பாலம், செம்மண்டலம் வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மாயூரநாதர் கீழவீதி பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும்.
    • பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்து மழைநீர் வடிகாலில் தேங்கி நிற்கிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகர்மன்ற கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

    பொறியாளர் சனல்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

    ஜெயலட்சுமி:

    அறுபத்தி மூவர் பேட்டை பகுதியில் பாதாளசாக்கடை மேனுவல் திரம்பியதால் வீடுகளில் கழிவுநீர் எதிர்க்கிறது.

    பாதாளசாக்கடை குழாய்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

    விஜய்:

    மினிபவர் டேங்க் பழுதுநீக்க கூறினால் ஒப்பந்தகாரரர் ஏற்கனவே செய்ததற்கு பணம் வரவில்லை என்கிறார். பழுதடைந்ததை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சதீஷ்:

    மாயூரநாதர் கீழவீதி பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்துகொடுக்க வேண்டும்.

    ரமேஷ்:

    வடக்குராமலி ங்கத்தெரு சாலை மிகவும் மோசமாக உள்ளதை சீரமைக்க வேண்டும்.

    காவிரி நடைபாலத்தில் கைப்பிடி சுவர் சேதமடைந்துள்ளதை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

    கணேசன்:

    திருவிழந்துார் பெருமாள் கோயிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.

    அதன்அருகே உள்ள மினி பவர்டேங்க் மோட்டார் பழுதடைந்து தண்ணீர் வசதி இன்றி உள்ளது அதனை சீரமைக்க வேண்டும்.

    சர்வோதயன்:

    ஸ்டேட்பாங்க் ரோடு, டவுன்க்ஸ்டன்ஷன், பஜனமடைத்தெரு பகுதியில் பாதாளசாக்கடை கழிவுநீர் வழிந்து மழைநீர் வடிகாலில் தேங்கி நிற்கிறது.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    ரத்தின வேல்:

    சனிக்கிழமை நகராட்சி 36 வார்டுகளிலும் மாஸ்கிளீனிங் என்று துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணியில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது.

    சம்பத்:

    ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் 11 மினிபவர் டேங்குகள் உள்ளது.

    அனைத்தும் பழு தாகி உள்ளதால் அவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

    ஜெயந்தி:

    பழுதடைந்ததாக கூறி 2 மினிபவர்டேங்க் மோட்டார்கள் கழற்றி சென்று ஒரு வருடத்திற்குமேலாகியும் அதனை சீர்செய்து பயன்பாட்டிற்கு விடவில்லை.

    கல்யாணி:

    ஆனந்ததாண்டவபுரம் சாலையில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள வாய்க்காலில் கழிவுநீர் குளம்போன்று தேங்கிநின்று அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

    அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.

    கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கபட்டது.

    முடிவில் துணைத் தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

    • சில மாதங்களுக்கு முன்பு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
    • வெளிச்சம் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே கொல்லம், குண்டாறு அணை,தென்காசி பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் பிரியும் இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது மக்களின் பயன்பாட்டிற்காக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியினர், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலை யில் தற்போது அந்த உயர்கோபுர மின்விளக்கு பழுத டைந்துள்ளது.

    இதனால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். மேலும் வெளிச்சம் இல்லாத காரணத்தால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்து காணப்படும் உயர்கோபுர மின்விளக்குகளை உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகள் சிரமைக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னையில் இ ருந்து அரசு பஸ் 48 பயணிகளை ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு வந்து கொண்டிருந்தபோது, திடீரென டீசல் டியூப் கட் ஆகி அரசு பஸ் நடுரோட்டில் நின்றது.
    • பஸ்சில் பயணம் செய்த மேல்மலையனூருக்கு செல்லும் பயணிகள் 48 பேர் நடுரோட்டில் இறக்கிவிடப்பட்டனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இ ருந்து அரசு பஸ் 48 பயணிகளை ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு வந்து கொண்டிருந்தது. திண்டிவனம் அடுத்த மேல் பேட்டை அருகே அரசு பேருந்து வரும்போது திடீரென டீசல் டியூப் கட் ஆகி அரசு பஸ் நடுரோட்டில் நின்றது. இதனால் பஸ்சில் பயணம் செய்த மேல்மலையனூருக்கு செல்லும் பயணிகள் 48 பேர் நடுரோட்டில் இறக்கிவிடப்பட்டனர்.

    அரை மணி நேரத்துக்கு மேலாக மாற்று பஸ் வர வைக்கப்படாமல் நடுரோட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிகள் காத்திருந்து அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    • மயான கொட்டகையின் ஆறு தூண்களும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
    • மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் இறந்தால் அருகில் உள்ள மயானத்துக்கு கொண்டு இறுதி சடங்கு செய்வது வழக்கம்.

    இந்நிலையில், அங்குள்ள மயான கொட்டகையின் ஆறு தூண்களும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    இதனால் மழைகாலங்களில் பிணத்தை எரியூட்டும்போது கொட்டகை இடிந்து விழுந்துவிடுமோ என அச்சத்துடன் செயல்பட வேண்டிய நிலை உள்ளது.

    மேலும், அப்பகுதி மக்களுக்கு வேற மயானம் கிடையாது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயான கொட்டகையை சீரமைத்து தர வேண்டும் எனவும், மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 17 ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.
    • திட்டை செல்லும் சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது.

    சீர்காழி,:

    சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது.ஒன்றிய க்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன் தலைமை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன் சரவணன் ஒன்றிய குழு துணை தலைவர் உஷாநந்தினி பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

    இளநிலை உதவியாளர் சரவணன் மன்ற தீர்மான ங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு: கவுன்சிலர் ரிமா பேசுகையில் சீர்காழி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளில்17 ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்றார்.

    கவுன்சிலர் விஜயகுமார் பேசுகையில் திட்டை செல்லும் சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது.

    இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் தென்னரசு பேசுகையில் எடக்குடி வட பாதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க முயற்சி எடுத்த ஒன்றிய குழு தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் பேசுகையில் தமிழக முதல்-அமைச்சர் டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளார் இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    முடிவில் மேலாளர் சுலோசனா நன்றி கூறினார்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெள்ள மடம் அருகே உள்ள குலசேகரன்புதூர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட் சில சமயம் பழுதாகி திறக்கமுடியாத நிலை ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சரக்கு ரெயில் ஒன்று சென்றது. இதற்காக குலசேக ரன்புதூர் ரெயில்வே கேட் மூடப்பட்டன. ரெயில் சென்றதும் ஊழியர் ரெயில்வே கேட்டை திறக்க முயற்சித்தார்.

    ஆனால் கேட் பழுதாகி திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஊழியர், எவ்வளவு முயற்சித்தும் ரெயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்தார்கள்.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நீண்ட நேரமாகியும் கேட் திறக்கப் படாததால், மாணவர்கள் சிலர் வாகனங்களில் இருந்து இறங்கி பள்ளி, கல்லூரிக்கு நடந்தே சென்றார்கள். வாகன ஓட்டிகள் பலரும் மாற்று பாதை வழியாக சென்றனர். இதற்கிடையே ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள், ரெயில்வே கேட் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பின்னர் ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து பொது மக்கள் கூறுகையில் இந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட் பழுதாவது அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த ரயில்வே கேட் பகுதியில் சுரங்க பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பழுதடைந்த பள்ளி கட்டிடம் மற்றும் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
    • சம்பந்தப்பட்ட வார்டு ஒன்றிய கவுன்சிலர்களின் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக ஒப்புதல் வழங்கல்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரிஅசோக்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, சூர்யநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நாகக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளதால் இடித்து அப்புறப்ப டுத்தப்பட்டுள்ளது.

    அந்த பள்ளியில் படிக்கும் 95 மாணவ- மாணவிகளின் நலனுக்காக 2 வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம் ஒன்றிய பொதுநிதி மற்றும் கல்வி நிதியில் இருந்து மேற்கொள்வது, சுந்தரபெருமாள்கோவில், சேஷம்பாடி, சோழபுரம் பேரூராட்சி, திருவலஞ்சுழி, கடிச்சம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள பழுதடைந்த பள்ளிகட்டிடம் மற்றும் சாலைகளை சீரமைத்தல் என்பது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டம் நடந்து கொண்டிருந்த போது 504-வது மன்ற பொருளில், 2022-23-ம் ஆண்டுக்கான 15-வது நிதிக்குழு பணிகள் ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட வார்டு ஒன்றிய கவுன்சிலர்களின் ஆலோசனை பெறாமல், தன்னிச்சையாக ஒப்புதல் வழங்கியதை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதைப்போல தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கணேசன், கும்பகோணம் ஒன்றியத்தில் ஒன்றியக்குழுத் தலைவியின் கணவரின் தலையீடு அதிகமாக உள்ளது. என கூறி தனது ஆதரவு உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாலைகளின் நடுவிலும், ஓரங்களிலும் ஆங்காங்கே சாலை பெயர்ந்து பள்ளங்கள் உருவாகி உள்ளன.
    • விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    திருவையாறு:

    திருவையாறு நகரத்தில் நான்கு திசைகளிலும் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் நடுவிலும் ஓரங்களிலும் ஆங்காங்கே சாலை பெயர்ந்து பள்ளங்கள் உருவாகி உள்ளன.

    இதனால் இருசக்கர வாகனங்கள், கார்கள் முதலிய இலகு ரக வாகனங்கள், பஸ், லாரி முதலிய கனரக வாகனங்கள் ஆகியவற்றின் டயர்கள் அந்தப் பள்ளங்களில் இறங்கி மேலே ஏறும் போது வாகன அச்சு சாலையில் மோதி பழுதாகவும், விபத்துகள் நேரவும் வாய்ப்புள்ளது.

    மேலும், சைக்கிள் முதலிய இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அப்பள்ளங்களில் வாகனத்தை இறக்கி ஏற்றும் போது பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்படுகிறது,

    எனவே, திருவையாறு நகரப் போக்குவரத்து சாலைகளில் உள்ள கிடுகிடு பள்ளங்களை தரமான தார் மற்றும் ஜல்லிக் கலவையினால் நிரப்பி சமன்படுத்தி உதவுமாறு வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது.
    • கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழப்ப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூரில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு கீழப்பூதனூர், மேலப்பூதனூர், பெருநாட்டாந்தோப்பு பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இந்த கட்டிடம் 640 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2000 வாக்காளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

    இந்த கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில் தற்போது இந்த அலுவலகம்எந்தவித பராமரிப்பும்இன்றி பழுதடைந்து காணப்ப டுகிறது.

    இதனால் கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. மேலும் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.மழைக்காலத்தில் கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது.இதில் பணிபுரியும் அலுவலர்கள் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

    இந்த அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டிடம் இடிந்து விழுமோ என அஞ்சுகின்றனர்.இந்த பழுதான ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், மனுக்கள் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    • சாமி புறப்பாடு செய்து சோமவார மடத்தில் இருந்து அன்னதானம் செய்வது வழக்கம்.
    • கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்ட அனுமதி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யேஸ்வர சுவாமிக்கு தெற்கு வீதியில் சோமவார மடம் இருந்து வருகிறது.

    இந்த மடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பூண்டி சைவ செட்டியார்கள் 4வது சோமவாரத்தில் உபயங்கள் செய்து, சாமி புறப்பாடு செய்து அந்த சோமவார மடத்தில் இருந்து அன்னதானம் செய்வது வழக்கம்.

    இந்த இடத்திற்கு திருப்பூண்டி சைவ செட்டியார்கள் சார்பில் கோவிலுக்கு முறையாக குத்தகை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து குடியிருந்து வருகிறார்தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்ததால் அந்த கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்கள் அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி கோரினர்.

    இந்த கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறையினர் அந்த கட்டித்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர் இந்த நிலையில் தற்சமயம் அந்த கட்டிடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வரும் தனி நபருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு, அதன் நகல் கதவில் ஒட்டப்பட்டது.

    அந்த ஆக்கிரமிப்புதாரர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் அறநிலையத்துறை சார்பில் அந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    இதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுபடி நாகை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, வேதாரண்யம் கோவில் நிர்வாக அதிகாரி கவியரசு மற்றும் வருவாய்துறையினர், கோவில் பணியாளா்கள் ஜே.சி.பிஇயந்திரம் மூலம் கட்டிடத்தை வேதாரண்யம்காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் ஆய்வாளர்கள்குணசேகரன் கன்னிகா, பசுபதி, மற்றும் போலிசார், பாதுகாப்புடன் பழுதடைந்த ஓட்டுவீட்டைஇடித்து அகற்றினர்

    பின்பு திருக்கோயில் வசம் இடம் எடுக்கப்பட்டது. அக்கிரமிப்பில் இருந்து மீட்க பட்டசொத்தின் மதிப்பு சுமார்ரூ. 1 கோடி என கூறப்படுகிறது.

    ×