search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேக்கம்"

    • நேற்று மாலை பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது.
    • அந்த வழியை பயன்படுத்துபவர்கள் மாற்று வழியில் சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை- நாகை சாலையில் மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் ஆடக்கார தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள தார் சாலை வழியாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து வருபவர்கள் கீழவாசல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கும் , அங்கிருந்து இந்த சாலை வழியாக மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தினமும் ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

    இது தவிர பள்ளி ,கல்லூரி மாணவ- மாணவிகள் அதிகமானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளது. இதனால் மழை பெய்யும் போதெல்லாம் சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி காணப்படும். இதனால் இந்த வழியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.

    நேற்று மாலை பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது. அப்போது பேரிகார்டு கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டது. இதனால் அந்த வழியை பயன்படுத்துவர்கள் மாற்று வழியில் சென்றனர். மழை பெய்யும் நேரம் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் சாலையில் உள்ள பள்ளங்களை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படு கின்றனர்.

    எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்ப டையில் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • மாயூரநாதர் கீழவீதி பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும்.
    • பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்து மழைநீர் வடிகாலில் தேங்கி நிற்கிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகர்மன்ற கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

    பொறியாளர் சனல்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

    ஜெயலட்சுமி:

    அறுபத்தி மூவர் பேட்டை பகுதியில் பாதாளசாக்கடை மேனுவல் திரம்பியதால் வீடுகளில் கழிவுநீர் எதிர்க்கிறது.

    பாதாளசாக்கடை குழாய்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

    விஜய்:

    மினிபவர் டேங்க் பழுதுநீக்க கூறினால் ஒப்பந்தகாரரர் ஏற்கனவே செய்ததற்கு பணம் வரவில்லை என்கிறார். பழுதடைந்ததை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சதீஷ்:

    மாயூரநாதர் கீழவீதி பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்துகொடுக்க வேண்டும்.

    ரமேஷ்:

    வடக்குராமலி ங்கத்தெரு சாலை மிகவும் மோசமாக உள்ளதை சீரமைக்க வேண்டும்.

    காவிரி நடைபாலத்தில் கைப்பிடி சுவர் சேதமடைந்துள்ளதை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

    கணேசன்:

    திருவிழந்துார் பெருமாள் கோயிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.

    அதன்அருகே உள்ள மினி பவர்டேங்க் மோட்டார் பழுதடைந்து தண்ணீர் வசதி இன்றி உள்ளது அதனை சீரமைக்க வேண்டும்.

    சர்வோதயன்:

    ஸ்டேட்பாங்க் ரோடு, டவுன்க்ஸ்டன்ஷன், பஜனமடைத்தெரு பகுதியில் பாதாளசாக்கடை கழிவுநீர் வழிந்து மழைநீர் வடிகாலில் தேங்கி நிற்கிறது.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    ரத்தின வேல்:

    சனிக்கிழமை நகராட்சி 36 வார்டுகளிலும் மாஸ்கிளீனிங் என்று துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணியில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது.

    சம்பத்:

    ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் 11 மினிபவர் டேங்குகள் உள்ளது.

    அனைத்தும் பழு தாகி உள்ளதால் அவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

    ஜெயந்தி:

    பழுதடைந்ததாக கூறி 2 மினிபவர்டேங்க் மோட்டார்கள் கழற்றி சென்று ஒரு வருடத்திற்குமேலாகியும் அதனை சீர்செய்து பயன்பாட்டிற்கு விடவில்லை.

    கல்யாணி:

    ஆனந்ததாண்டவபுரம் சாலையில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள வாய்க்காலில் கழிவுநீர் குளம்போன்று தேங்கிநின்று அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

    அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.

    கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கபட்டது.

    முடிவில் துணைத் தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

    • சரிவர தூர்வாராத காரணத்தாலும் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டது.
    • மழை நின்ற பிறகும் கழிவுநீர் அப்படியே தேங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே மேலவெளி பஞ்சாயத்துக்கு உட்பட்டது சுந்தர பாண்டியன் நகர், லாலி நகர், இ.எம்.ஜி. நகர். இந்த பகுதி ஜெபமாலைபுரம் அருகே அமைந்துள்ளது.

    இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் காலியிடங்களில் கழிவுநீர் தேங்கியது.

    ஆனால் உடனடியாக கழிவு நீர் வெளியே செல்லாமல் அப்படியே தேங்கியது. கடந்த 3 மாதங்களாக தேங்கி நிற்பதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    கழிவு நீரை வெளியேற்றி சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் மேலவெளி பஞ்சாயத்து மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது:-

    முறையான வடிகால் வசதி இல்லாததாலும், சரிவர தூர்வாராத காரணத்தாலும் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் பெய்த கனமழையால் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து தெருவில் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் மழை நின்ற பிறகும் கழிவுநீர் அப்படியே தேங்கியது.

    இந்த பகுதி வழியாக வரும் கழிவு நீர் இங்குள்ள கோவில் அருகே ஒரு ஆற்றில் கலக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் போதிய வடிகால் வசதி, சரிவர தூர்வாராததால் செல்ல வழி இல்லாமலும், அடைப்பு ஏற்பட்டதாலும் கழிவுநீர் தெருவுக்குள் புகுந்தது.

    நாட்கள் செல்ல செல்ல கழிவு நீரின் அளவும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    அனைத்து குடியிருப்புகளை சுற்றிலும் 3 மதங்களாக தேங்கி நிற்கிறது.

    இதனால் வீட்டில் வசிக்க கூட முடியவில்லை . துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி விடுமோ என அச்சத்தில் உள்ளோம்.

    இது தவிர விஷ பூச்சிகள் வீட்டிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளதால் அச்சத்தில் உள்ளோம். வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலும் உள்ளது.

    மேலும் போர் தண்ணீரும் நிறம் மாறி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக கழிவு நீரை அகற்ற வேண்டும்.

    இதுபோன்று கழிவுநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சரியான வடிகால் வசதி ஏற்படுத்தி வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும் என்றனர்.

    • சாலையில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
    • தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், மணக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நெல்லியடிக்காடு கிராமம், காளியம்மன் கோயில் தெருவில், சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

    இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    200 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வெள்ள நீர் வடிய ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்ட நிலையில், சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது.

    சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கண்டு கொள்ளாமல் அப்படியே விடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக சிறிது தூரம் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் தண்ணீரில் இறங்கி நடந்து செல்லும் அவலம் உள்ளது.

    மேலும், தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் குழந்தைகளுடன் உறங்க முடியாத சூழல் உள்ளது.

    தண்ணீர் தேங்கி நிற்பதால் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசமடைந்த இப்பகுதி பொதுமக்கள், சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வீ.கருப்பையா தலைமை வகித்தனர்.

    சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் சேகர், சீனிவாசன், முத்துக்குமார், பன்னீர் செல்வம், பாக்கியம், அஞ்சம்மாள், ராஜ்குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×