search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்கோபுர மின்விளக்கு"

    • கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது
    • பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டும். இதற்கிடையே பல்லடம் பஸ் நிலையம் அருகே கொசவம்பாளையம் நால்ரோடு பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. அதில் இருந்த 6 விளக்குகளும், ஒவ்வொரு விளக்காக பழுதடைந்து தற்போது விளக்குகள் எரிவதில்லை. இதனால் அந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்குகின்றனர்.

    மேலும் அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மின் கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சில மாதங்களுக்கு முன்பு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
    • வெளிச்சம் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே கொல்லம், குண்டாறு அணை,தென்காசி பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் பிரியும் இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது மக்களின் பயன்பாட்டிற்காக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியினர், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலை யில் தற்போது அந்த உயர்கோபுர மின்விளக்கு பழுத டைந்துள்ளது.

    இதனால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். மேலும் வெளிச்சம் இல்லாத காரணத்தால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்து காணப்படும் உயர்கோபுர மின்விளக்குகளை உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகள் சிரமைக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×