search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசோதனை"

    • மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து விரைவில் குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொ ண்டு வருகின்றன. இருந்த போதிலும் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ள நிலையில் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் டெங்கு காய்ச்சலால் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் 15 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிட த்தக்கதாகும். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறையினர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம், வீடுகளுக்கு நேரில் சென்று வேறு யாரும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உள்ளனரா? புகை கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளையும் மே ற்கொண்டு வருகின்றனர். இன்று காலை கடலூர் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தனி வார்டை கலெக்டர் அருண் தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு என்னெ ன்ன சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது? அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் தனிவார்டில் கொசுவலை, சுகாதாரமாக உள்ளதா? உரிய நேரத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கிறார்களா? மருந்து, மாத்திரை சரியா ன முறையில் வழங்க ப்படுகிற தா? என்பதனை கேட்டு அறிந்து ஆய்வு செய்தார். மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து விரைவில் குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். பின்னர் கலெக்டர் அருண் தம்புராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனிவார்டு அமைக்கப்பட்டு தற்போது 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் தடுக்கும் களப்ப ணியாளர்கள் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று அரசு நிபந்தனைக்கு உட்பட்டு பராமரிக்கப்படுகிறதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் தனி வார்டு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகை யால் பொதுமக்களுக்கு 5 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் உடனடி யாக அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று டெங்கு காய்ச்சல் உள்ளதா? என்பத னை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தற்போது மாவட்டத்தில் ஒரே பகுதியில் 3 ேபர்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களிடமும் பரிசோதனை மேற்கொ ண்டதில் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் 56 பேர் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க படுகின்றது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களில் அதிகரிப்புக்கு காரணம் என்னவென்றால் மாவட்டம் நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறையினர் அதிகளவில் பரிசோதனை மேற்கொள்வதால், தற்போது 56 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 15 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா செலின்பால், மருத்து வமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • வயலுக்கு அடிப்பதற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே திருப்புறம்பியம் உச்சிகட்டளை தெருவை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 58).

    விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில், இவருக்கு கடந்த சில வாரங்களாக வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அவர் வயலுக்கு அடிப்பதற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

    தகவலறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் பாக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்தனர்.
    • 103 பேர் அறுவை சிகிச்சைகாக புதுச்சேரி கண் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி விஜய் சுபம் பெனிபிட் பண்ட், லயன்ஸ் சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, ஜெயின் சங்கம் ஆகியன சார்பில் 30-வது ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு முன்னாள் மாவட்ட ஆளுனர் கியான்சந்த் தலைமை வகித்தார்.

    மாவட்ட தலைவர்கள் எஸ்.சக்திவீரன்,யுவாராஜ்குமார், ராம்குமார், சோமசுந்தரம் வேல்முருகன் ராஜ்குமார் மண்டல தலைவர் செந்தில் வைரவன் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்கத்தலைவர் சந்துரு வரவேற்றார். முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கே ற்று பரிசோதனை செய்துக்கொ ண்டனர்.

    இதில் 103பேர் அறுவை சிகிச்சைகாக இலவசமாக புதுச்சேரி கண் மருத்துவமனைக்கு பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

    லயன் சங்க செயலாளர் சரவணகுமார் பொருளாளர் ஆரிப் அலி உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் அரிமா சங்கத்தை சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிறைவில் சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி தாளாளர் சுதேஷ் நன்றிக்கூறினார்.

    • அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.
    • பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை- திட்டைக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவா ளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

    இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் குணசேகரன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெ க்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

    ஆனால் அவர் யார் ? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.

    இதனைத் தொடர்ந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரயிலில் அடிபட்டு அந்த முதியவர் இறந்தாரா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்ற பல்வேறு கோண ங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூத்த வேளாண்மை அலுவலர் தகவல்
    • விதை உறையின் நச்சுதன்மை காரணமாக நீர் உட்புக இயலாத காரணத்தினால் முளைவிடாமல் இருக்கும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    நாகர்கோவில் விதை பரிசோதனை நிலையத்தில் ஒவ்வொரு பயிருக்கும் முளைப்புதிறன் பரி சோதனை மேற்கொள்ளப்ப டுகிறது. முளைப்புத்திறன் என்பது விதையின் உயிரும், வீரியமும் கொண்டு இயங்கு வதை காட்டுவது ஆகும். நல்ல முளைப்புதிறன் கொண்ட விதை குவியல்க ளிலிருந்து விதைக்கப்படும் விதை மூலம் அதிக பயர் எண்ணிக்கையில் பயிர்கள் வயலில் செழித்து வளரும். ஆனால் முளைப்புதிறன் குறைந்த விதைகளை பயன்படுத்தினால் குறைந்த அளவிலேயே பயிர்கள் வளரும். அதனால் பயிர் மகசூல் பாதிக்கப்படும்.

    விதைச்சட்டம் 1966 பிரிவு 7 (பி)-ன்படி ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச முளைப்புதிறன் தரம் நிர்ணயம் செய்து அறிவிக்கப் பட்டுள்ளது. நெல், எள், கொள்ளு 80 சதவீதம், மக்காச்சோளம் 90 சதவீதம், சோளம், கம்பு, கேப்பை, பயறு வகைகள் 75 சதவீதம், நிலக்கடலை, சூரியகாந்தி 70 சதவீதம், பருத்தி 65 சதவீதம், மிளகாய் 60 சதவீதம் ஆகும்.

    பயிர்களுக்கு ஏதுவான சூழ்நிலையில் விதைகள் ஒரு முளையிட்டு பின்னா வளர்ச்சிக்கு அத்தியாவசி யமான பாகங்கள் உருவாகி இயல்பான செடியாவதற்குரிய திறனே முளைப்புதிறன் ஆகும். முளைப்புதிறன் சோதனையின்போது இயல்பானது. இயல்பற்றது. கடினமானது. உயிரற்றது என 4 வகைப்படுத்தி சோதனை முடிவுகள் அறிவிக்கப்படும். அவற்றின் கடின விதை என்பது விதை உறையின் நச்சுதன்மை காரணமாக நீர் உட்புக இயலாத காரணத்தினால் முளைவிடாமல் இருக்கும்.

    பயறு விதைகள் மற்றும் வெண்டை விதைகளில் இவை தனியாக எடுத்து கணக்கிடப்படும். இவைகள் வயல்களில் முளைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதால் முளைப்புதிறன் கணக்கி டும்போது இயல்பான விதைகளுடன் சேர்த்துக் கணக்கிடப்படும்.

    இந்த முறைகளின்படி முளைப்புதிறன் பரி சோதனைகள் மேற் கொள்ளப்பட்டு குறிப்பிட்ட கால அளவுகளில் பயிர்க ளின் முளைப்புதிறன் கணக்கி டப்பட்டு சோதனை முடிவுகள் அறிவிக்கப்படும். எனவே விவசாயிகள் தங்கள் சொந்த விதைகளை விதைக்கும்போது தங்களின் விதைகளின் முளைப்புதிறன் அறிந்து விதைத்திட தங்கள் விதைக்குவியலில் மாதிரி ஒன்று எடுத்து அதில் பயிர், ரகம் மற்றும் தேவைப்படும் பரிசோதனை விவரம் எழுதி விதை கட்டணமாக ரூ.80 செலுத்தி நாகர்கோவில் விதைப்பரிசோதனை நிலை ளளளளளயத்தில் விதை களின் முளைப்புதிறன் தெரிந்து விதைக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • இதில் ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • 77 சதவீத சலுகையில் மூத்தகுடி மக்களுக்கு சிறப்பு உடல் பரிசோதனை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம் தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.

    நிகழ்ச்சியில் மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர்.சரவணவேல், நரம்பியல் சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர். காமேஷ் அருண், மேலாளர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    மேலும், 77-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மருத்துவமனையில் 77 சதவீத சலுகையில் மூத்தகுடி மக்களுக்கு சிறப்பு உடல் பரிசோதனை இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • ஒரு நபருக்கு ரூ.30 வீதம் வசூல் செய்து 40 பேருக்கு பரிசோதனை செய்தனர்.
    • சிறைபிடிக்கப்பட்ட 4 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த சோழபுரம் மகாராஜபுரத்தில் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற 4 நபர்கள், நாங்கள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம்.

    உங்களது கிராமத்திலும் முகாம் நடத்த உள்ளோம். குறைந்த அளவு பணம் செலுத்தினால் சிகிச்சை அளிக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர்.

    இதை நம்பிய 80 குடும்பத்தினருக்கு 2 நாட்களுக்கு முன்பு டோக்கன் கொடுத்து சென்றுள்ளனர்.

    அவர்கள் கூறியது போல் அந்த 4 பேரும் நேற்று ஊராட்சி தலைவரை சந்தித்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தில் மருத்துவ முகாம் நடத்த அனுமதி கேட்டுள்ளனர்.

    அவர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமில் ஒரு நபருக்கு ரூ.30 வீதம் வசூல் செய்து 40 பேருக்கு பரிசோதனை செய்தனர்.

    இந்நிலையில், முகாமில் கலந்து கொண்டு மாத்திரை வாங்கி சாப்பிட்ட பெண் ஒருவர் தனது வீட்டுக்கு சென்றதும் மயக்கம் அடைந்துள்ளார்.

    அவரை உடனடியாக அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவ முகாம் நடந்த இடத்துக்கு கொண்டு வந்து அங்கிருந்தவர்களிடம் என்ன மாத்திரை கொடுத்தீர்கள்? என கேட்டுள்ளனர்.

    அதற்கு அவர்கள் சரியாக பதில் கூறாததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், அந்த நபர்களிடம் நீங்கள் உண்மையிேலயே டாக்டர்கள் தானா? உங்களது சான்றிதழை காண்பியுங்கள் என்று கேட்டு அவர்களை பள்ளியிலேயே சிறைபிடித்தனர்.

    பின்னர், இதுகுறித்து சோழபுரம் போலீசாருக்கு தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட 4 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று மக்களுக்கு என்ன மருந்து கொடுத்தீர்கள்? என்றும் அவர்கள் உண்மையான டாக்டர்கள் தானா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
    • இலவச பாஸ் கிடைப்பதற்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இன்று தஞ்சை மேம்பாலம் அரசு செவித்திறன் குறையுடையார் பள்ளியில் மத்திய மாவட்ட தி.மு.க மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதற்கு மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் டாக்டர் மோகன்ராஜ், மாவட்ட அமைப்பாளர் டாக்டர் வசந்தகுமார், மாவட்டத் தலைவர் டாக்டர் ராஜ் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த மருத்துவ முகாமை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் செவித்திறன் குறையுடைய மாணவ -மாணவிகளுக்கு பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து செவித்திறன் குறையுடைய மாணவ- மாணவிகள் பஸ், ரயில்களில் இலவசமாக பயணம் செய்வதற்கும், டோல்கேட்டில் செல்லும் போது உடன் செல்பவர்களுக்கு இலவச கட்டணம் ஆகியவற்றிற்கான இலவச பாஸ் கிடைப்பதற்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகர செயலாளரும் மேயருமான சண் ராமநாதன், அவைத்தலைவர் இறைவன், செயற்குழு உறுப்பினர் செல்வம், பகுதி செயலாளர்கள் நீலகண்டன், சதாசிவம், கார்த்தி, ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, நிர்வாகி தர்மராஜ், மருத்துவர் அணி நிர்வாகிகள் டாக்டர்கள் சதீஷ், சுரேஷ், ராஜா, விக்னேஷ், பாஷா, ராஜராஜன், காயத்ரி, பிரகாஷ், புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மனு கொடுக்க வருபவர்களை பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுமதித்து வருகிறார்கள்.
    • கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கி ழமை தோறும் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப் பட்டு வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக வருகிறார்கள்.

    இதில் சிலர் தீக்குளித்து தற்கொலைக்கு முயலும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலக வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் மனு கொடுக்க வருபவர்களை பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுமதித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திங்கள் கிழமையான இன்றும் மனு அளிப்பதற்கு ஏராள மானோர் வந்திருந்தனர். அதில் முதியவர் ஒருவர் திடீரென கலெக்டர் அலுவ லக வாசலில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி மயங்கி விழுந்தார். அப்போது கலெக்டர் அலுவ லகத்தில் நடந்த வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் அந்த நபரை பிடித்து காப்பாற்றினார்கள். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.

    போலீசார் முதியவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பூதப்பாண்டி அருமநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுவிசேஷமுத்து (வயது 72) என்பது தெரியவந்தது. அவரது தோட்ட பயிருக்கு வேலி அமைத்து இருந்ததாகவும், அதை 2 பேர் தீ வைத்து எரித்து விட்டதாகவும், இது தொடர்பாக உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இதுதொடர்பாக சம்பந் தப்பட்ட போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீ சார் உறுதி அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
    • ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    அதிராம்பட்டினம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மீனாட்சி மருத்துவமனையில் இருந்து வருகை தந்த டாக்டர்கள், செவிலியர்கள் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை என உடல் முழு பரிசோதனை செய்தனர்.

    இம்முகாமில் அதிராம்பட்டினம் நகர் மன்ற தலைவர் தாகிராஅம்மாள் அப்துல்கரீம், நகர் மன்ற துணைத் தலைவர் ராமகுணசேகரன், ஆணையர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு உடல் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

    • தினமும் குளிப்பதற்கு வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குளிக்க செல்வது வழக்கம்
    • டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது சார்லெட் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே ஆறாம்விளாகம், கண்ணணூர் பகுதியை சேர்ந்தவர் நேசைய்யன் (வயது 63). இவருக்கு சார்லெட் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

    சார்லெட்டுக்கு கடந்த 5 ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பு இருந்தது. இதற்காக இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் தினமும் குளிப்பதற்கு வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குளிக்க செல்வது வழக்கம்.

    நேற்றும் சார் லெட் வழக்கம் போல் குளத்தில் குளிக்க சென்றவர் கால் தவறி குளத்தில் விழுந்து விட்டார். இதனை அந்த வழி யாக சென்ற வர்கள் பார்த்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் சார்லெட்டை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது சார்லெட் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.]

    • விக்கிரவாண்டி அருகே பூச்சி மருந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே உள்ள வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். டிராக்டர் டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அடிக்கடி வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலத்தில் அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயக்கமாகி கிடந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அன்பழகனை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×