search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து முதியவர் தற்கொலை
    X

    விஷம் குடித்து முதியவர் தற்கொலை

    • வயலுக்கு அடிப்பதற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே திருப்புறம்பியம் உச்சிகட்டளை தெருவை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 58).

    விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில், இவருக்கு கடந்த சில வாரங்களாக வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அவர் வயலுக்கு அடிப்பதற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

    தகவலறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் பாக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×