search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண் பரிசோதனை முகாம்
    X

    கண் பரிசோதனை முகாம் நடந்தது.

    கண் பரிசோதனை முகாம்

    • 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்தனர்.
    • 103 பேர் அறுவை சிகிச்சைகாக புதுச்சேரி கண் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி விஜய் சுபம் பெனிபிட் பண்ட், லயன்ஸ் சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, ஜெயின் சங்கம் ஆகியன சார்பில் 30-வது ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு முன்னாள் மாவட்ட ஆளுனர் கியான்சந்த் தலைமை வகித்தார்.

    மாவட்ட தலைவர்கள் எஸ்.சக்திவீரன்,யுவாராஜ்குமார், ராம்குமார், சோமசுந்தரம் வேல்முருகன் ராஜ்குமார் மண்டல தலைவர் செந்தில் வைரவன் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்கத்தலைவர் சந்துரு வரவேற்றார். முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கே ற்று பரிசோதனை செய்துக்கொ ண்டனர்.

    இதில் 103பேர் அறுவை சிகிச்சைகாக இலவசமாக புதுச்சேரி கண் மருத்துவமனைக்கு பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

    லயன் சங்க செயலாளர் சரவணகுமார் பொருளாளர் ஆரிப் அலி உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் அரிமா சங்கத்தை சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிறைவில் சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி தாளாளர் சுதேஷ் நன்றிக்கூறினார்.

    Next Story
    ×