என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே குளத்தில் மூழ்கி பெண் பலி
- தினமும் குளிப்பதற்கு வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குளிக்க செல்வது வழக்கம்
- டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது சார்லெட் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே ஆறாம்விளாகம், கண்ணணூர் பகுதியை சேர்ந்தவர் நேசைய்யன் (வயது 63). இவருக்கு சார்லெட் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
சார்லெட்டுக்கு கடந்த 5 ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பு இருந்தது. இதற்காக இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் தினமும் குளிப்பதற்கு வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குளிக்க செல்வது வழக்கம்.
நேற்றும் சார் லெட் வழக்கம் போல் குளத்தில் குளிக்க சென்றவர் கால் தவறி குளத்தில் விழுந்து விட்டார். இதனை அந்த வழி யாக சென்ற வர்கள் பார்த்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் சார்லெட்டை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது சார்லெட் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.]






