search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி"

    • பெண் நீதிபதிகளுக்கான 53 ஆண்டு கால ஆடைவிதியில் மாற்றம் செய்ய வேண்டும்.
    • கேரள பெண் நீதிபதிகளின் முறையீட்டை கேரள ஐகோர்ட்டு கவனிக்க உள்ளதாக தெரிகிறது.

    திருவனந்தபுரம் :

    தற்போது பெண் நீதிபதிகள், கோர்ட்டில் சேலை, வெள்ளை கழுத்துப் பட்டை, கருப்பு நிற மேலங்கி (கவுன்) அணிய வேண்டியிருக்கிறது.

    ஆனால் இந்த ஆடைமுறை அசவுகரியமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக, தற்போதைய கோடைகாலத்தில், நெரிசல் நிறைந்த கோர்ட்டுகளில் இவ்வாறு இறுக்கமாக ஆடை அணிந்து பல மணி நேரம் அமர்ந்திருப்பது மிகவும் சிரமமாக உள்ளது, அதிலும் பல சமயங்களில் மின் தடை ஏற்படும்போது வியர்த்து வழிய வேண்டியுள்ளது என்பது பல பெண் நீதிபதிகளின் மனக்குறை.

    இந்நிலையில் கேரள கோர்ட்டு பெண் நீதிபதிகள் சுமார் 100 பேர் கேரள ஐகோர்ட்டு பதிவாளரை நாடியுள்ளனர். அவரிடம், பெண் நீதிபதிகளுக்கான 53 ஆண்டு கால ஆடைவிதியில் மாற்றம் செய்ய வேண்டும். கோர்ட்டில் பணியின்போது சுடிதார் அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

    தெலுங்கானா ஐகோர்ட்டு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    அந்த சுற்றறிக்கையில், பெண் நீதிபதிகள் பணியின்போது வழக்கமான சேலையுடன், சல்வார், சுடிதார், நீளமான பாவாடை, பேண்ட் அணியலாம். அவை வெள்ளை, வெளிர் மஞ்சள், சாம்பல், கருப்பு வண்ணத்திலோ, அவற்றின் கலவையிலோ இருக்கலாம் என தெரிவித்திருந்தது.

    கடந்த 1970-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்த, நீதிபதிகளுக்கான ஆடைவிதியின்படி, பெண் நீதிபதிகள் மிதமான வண்ணத்திலான பிராந்திய ஆடை, மேலங்கியுடன், வெண்ணிறத்திலான கழுத்துப் பட்டை அணிய வேண்டும். அதேபோல ஆண் நீதிபதிகள், கருப்புநிற 'ஓபன் காலர்' கோட்டு, வெண்ணிற சட்டை, வெள்ளை நிறத்திலான கழுத்துப் பட்டையுடன், மேலங்கி அணியலாம்.

    கேரள பெண் நீதிபதிகளின் முறையீட்டை கேரள ஐகோர்ட்டு கவனிக்க உள்ளதாக தெரிகிறது. அதன்பின்தான், இந்த 53 ஆண்டுகால ஆடைவிதியில் மாற்றம் வருகிறதா என்பது தெரியவரும்.

    • பள்ளிகளில் போக்சோ குழு அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் மாணவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பள்ளிக்கல்வித் துறை, பெண்கள்நலக் கல்வி அறக்கட்டளை ஆகியன இணைந்து, புகையிலை ஒழிப்பு மற்றும் பள்ளிகளில் போக்சோ குழு அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச் செல்வி வரவேற்றார்.

    ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் பேசியதாவது:-

    புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் மாணவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது. மேலும், பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் மோசமான சூழலும் உள்ளது. சமீப காலமாக போதையில் வாகனம் ஓட்டுதல்,போக்சோ வழக்குகள் அதிகளவில் பதிவாகிறது.

    பள்ளிக் கல்வித்துறை, தன்னார்வ அமைப்புகள் இணைந்து இதற்கு தீர்வு காணும் விதமாக குழுக்கள் அமைத்து இயங்க வேண்டும். தொடர்ந்து கண்காணித்தல், சட்ட விழிப்புணர்வு, மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    மகிளா கோர்ட்டு நீதிபதி பாலு பேசுகையில், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் நிகழும் மாற்றங்கள் குறித்து கண்காணிக்க வேண்டும். அனைத்து மாணவர்களையும் தங்கள் சொந்த குழந்தைகள் போன்று, பாதுகாப்பான முறையில் வளரும் விதமாக செயலாற்ற வேண்டும் என்றார்.

    • ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உத்தரவின்படி கீழ்கண்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
    • சென்னை சிட்டி சிவில் கோர்ட்டுகளில் பணியாற்றிய நீதிபதிகள், சென்னையில் உள்ள கோர்ட்டுகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை :

    ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உத்தரவின்படி கீழ்கண்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் (ஆய்வு) எம்.ஜோதிராமன், சென்னை ஐகோர்ட்டின் ஜூடிசியல் பதிவாளராகவும், கடலூர் தொழிலாளர் கோர்ட்டு நீதிபதி எம்.சுபா அன்புமணி, சென்னை ஐகோர்ட்டின் பதிவாளராகவும் (மாவட்ட நீதித்துறை), சென்னை வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகாடமி இயக்குனராகவும், திருவள்ளூர் மாவட்ட லோக் அதாலத் நீதிபதி ஏ.ரமேஷ்பாபு, சென்னை ஐகோர்ட்டு சட்ட இதழ் தலைமை எடிட்டராகவும், தமிழ்நாடு ஜூடிசியல் அகாடமி இயக்குனர் டி.லிங்கேஷ்வரன், சென்னை முதலாவது (தடா) செசன்சு கோர்ட்டு நீதிபதியாகவும், அந்த கோர்ட்டில் நீதிபதியாக இருந்த வி.தங்கமாரியப்பன், 2-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாகவும், 3-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, சென்னை நிரந்த லோக் அதாலத் நீதிபதியாகவும், சிதம்பரம் மாவட்ட கூடுதல் நீதிபதி பா.யு.செம்மல், காஞ்சீபுரம் மாவட்ட 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதியாகவும், விழுப்புரம் குடும்பநல கோர்ட்டு நீதிபதி வி.தேன்மொழி, எழும்பூர் பொருளாதார குற்றவியல் 1-வது கோர்ட்டு நீதிபதியாகவும், புதுக்கோட்டை மகளிர் கோர்ட்டு நீதிபதி ஆர்.சத்தியா, திருவள்ளூர் 1-வது கூடுதல் மாவட்ட செசன்சு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை சிட்டி சிவில் கோர்ட்டுகளில் பணியாற்றிய நீதிபதிகள், சென்னையில் உள்ள கோர்ட்டுகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், சென்னை 19-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக ஏ.ரமேஷ், 18-வது கோர்ட்டு நீதிபதியாக எஸ்.சுஜாதா, 17-வது கோர்ட்டுக்கு நீதிபதியாக எல்.ஆபிரகாம் லிங்கன், 16-வது கோர்ட்டுக்கு நீதிபதியாக ஜி.புவனேஷ்வரி, 15-வது கோர்ட்டுக்கு நீதிபதியாக பி.சுரேஷ்குமார், 7-வது கோர்ட்டு நீதிபதியாக வி.பாண்டியராஜ், 6-வது கோர்ட்டு நீதிபதியாக எஸ்.டாஸ்னீம், 5-வது கோர்ட்டு நீதிபதியாக எஸ்.முருகநாதன், 4-வது கோர்ட்டு நீதிபதியாக ஜெ.சந்திரன், 3-வது கோர்ட்டு நீதிபதியாக டி.வி.ஆனந்த் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு சட்டத்துறை செயலாளராக பணியாற்றிய நீதிபதி பி.கார்த்திகேயன், சென்னை வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதியாகவும், சென்னை 4-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதி ஏ.சரவணகுமார், சென்னை விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதிபதியாகவும், சேலம் குடும்பநல கோர்ட்டு நீதிபதி சி.ஜெயஸ்ரீ, சென்னை 7-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதியாகவும், 7-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதி எஸ்.எழில்வளவன், சென்னை 8-வது சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு துணைச் செயலாளராக இருந்த டி.ஜெயஸ்ரீ, செங்கல்பட்டு தலைமை மாஜிஸ்திரேட்டாகவும், மயிலாடுதுறை தலைமை மாஜிஸ்திரேட்டு எம்.எஸ்.மணிமேகலை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதியாகவும், இந்த கோர்ட்டில் பணியாற்றிய நீதிபதி ஜெ.ஓம்பிரகாஷ், முதலாவது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாகவும், எழும்பூர் 2-வது குற்றவியல் கோர்ட்டு நீதிபதி யஷ்வந்த்ராவ் இங்கர்சால், திருவள்ளூர் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதியாகவும், சென்னை 7-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி பி.சுந்தரராஜன், சென்னை 5-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாகவும், காட்பாடி சார்பு கோர்ட்டு நீதிபதி எஸ்.தமிழ்செல்வி, 9-வது சிறுவழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டு நீதிபதியாகவும், ஊட்டி சார்பு கோர்ட்டு நீதிபதி சி.சுரேஷ்குமார், சென்னை 9-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை 13-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக என்.சச்சிதானந்தன், சென்னை சைதாப்பேட்டை 23-வது கோர்ட்டு நீதிபதியாக ஆர்.வேல்ராஜ், 15-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக சி.அசோக்குமார், 17-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக ஆர்.காரல்மார்க்ஸ், 19-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக எஸ்.ஜீவபாண்டியன், 22-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக இ.தாமோதரன், 26-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக எம்.ஜியாவூர் ரகுமான், 27-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக எஸ்.சிவசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை எழும்பூரில் உள்ள நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி டி.ராஜேஷ் ராஜூ, பூந்தமல்லி 2-வது மாஜிஸ்திரேட்டாகவும், சிவகங்கை மாவட்ட முன்சீப் நீதிபதி இனிய கருநாகராஜன், காஞ்சீபுரம் முதலாவது மாஜிஸ்திரேட்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 189 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசியல் புனிதமானது. ஆனால் தற்போது அரசியலில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை.
    • ஷாபி தனது முகவர் மூலம் புத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று நிறைவடைகிறது. பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி தாலுகா சங்கதாலா கிராமத்தை சேர்ந்த சுபாஷ்சந்திரா ராத்தோடு. நீதிபதியான இவர் கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தாலுகா கோர்ட்டில் 4 ஆண்டுகளும், விஜயாப்புராவில் 2 ஆண்டுகளும் பணியாற்றி இருந்தார். கடந்த ஒரு ஆண்டாக கதக்கில் அவர் பணியாற்றினார்.

    இந்நிலையில் அரசியலில் ஈடுபட நீதிபதி சுபாஷ் சந்திரா முடிவு செய்தார். இதையடுத்து, தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜனதாதளம்(எஸ்) கட்சியில் அவர் இணைந்தார். அவருக்கு கட்சியில் சித்தாப்புரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதுபற்றி அவர் கூறுகையில், அரசியல் புனிதமானது. ஆனால் தற்போது அரசியலில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை. ஜனநாயகத்தின் முக்கிய தூண் சரிந்து கொண்டே வருவதை பார்த்து கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

    அரசியல் மூலமாக சமூகத்தில் மாற்றங்களையும், பலதரப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவும் முடியும். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையில், என்னுடைய நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன்' என்றார்.

    தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் பகுதியை சேர்ந்த பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகி பிரவீன் நெட்டார் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி நடந்தது. இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஷாபி என்பவர் உள்பட 8 பேரை என்.ஐ.ஏ. கைது செய்தது. அனைவரும் சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் விசாரணை கைதியாக சிறையில் உள்ள ஷாபி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    அதைத்தொடர்ந்து நேற்று ஷாபி தனது முகவர் மூலம் புத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். 

    • பள்ளிகுழந்தைகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
    • பெண்களின் முக்கியத்துவத்தை ஆண் குழந்தைகளுக்கு உணா்த்த வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழக சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்படி தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

    இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆதியன் பேசியதாவது:-

    குழந்தைகள்தான் வருங்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள். சமுதாயம் என்பது ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் என அனைவருக்குமானதாகும். பெண்களின் முக்கியத்துவத்தை ஆண் குழந்தைகளுக்கு உணா்த்த வேண்டும். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் வன்முறைகள் குறித்து தைரியமாக புகாா் அளிக்க முன்வர வேண்டும். சமுதாயத்தில் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் உயா்ந்த நிலைக்குச் செல்ல கல்வியறிவு மட்டுமின்றி அனுபவ அறிவும் அவசியமானதாகும் என்றாா்.

    • மத்திய சிறை நூலகத்துக்கு நீதிபதி புத்தகங்கள் வழங்கினார்.
    • இதுகுறித்து பொது மக்களுக்கு உதவும் வகையில் 0452-2360031 தொலைபேசி எண்ணும் தரப்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மத்திய சிறையில் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய நூலகம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக பலர் புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு சுமார் 1 லட்சம் புத்தகங்களை நன்கொடையாக பெறுவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சிறை டி.ஐ.ஜி. பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் இலக்கியம், கவிதை, நாவல், புராணம் போன்ற பல்வேறு புத்தகங்களை நன்கொடையாக பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை புத்தகக் கண்காட்சியில் பிரத்யேக ஸ்டால் அமைக்கப்பட்டு புத்தகங்கள் அன்பளிப்பாக பெறப்பட்டன. சிவகங்கை புத்தக கண்காட்சியில் கலெக்டர் உதவியுடன் பொது மக்களின் பங்களிப்பாக 1000 புத்தகங்கள் வந்து சேர்ந்தது. ராமநாதபுரம் புத்தக கண்காட்சியில் சிறப்பு ஸ்டால்கள் மூலம் புத்தகங்கள் பெறப்பட்டு வருகிறது.

    மதுரை கூடல்நகரை சேர்ந்த 92 வயது முதியவர் பாலகிருஷ்ணன் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இலவசமாக வழங்கினார். ஈரோடு பகுதியைச் சேர்ந்த இலஞ்சி சமூக நல அமைப்பைச் சேர்ந்த ஜானகி சுமார் 1000 புத்தகங்களை மதுரை சிறை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மதுரை மத்திய ஜெயின் நூலகத்தில் இதுவரை சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

    மதுரை மத்திய சிறை நூலகத்துக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்க விரும்புவோர் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருது நகர் மாவட்ட கிளைச்சிறைகளிலும் நேரடியாக கொண்டு வந்துதரலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொது மக்களுக்கு உதவும் வகையில் 0452-2360031 தொலைபேசி எண்ணும் தரப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மத்திய சிறை நூலகத்துக்கு மதுரை மாவட்ட நீதிபதி ஏ.கே.கே. ரஜினி ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வழங்கியுள்ளார். இது குறித்து நீதிபதி ரஜினி கூறுகையில், மதுரை மத்திய சிறை நூலகத்துக்கு முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. சிறைவாசிகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு மேலும் புத்தகங்கள் பெற்று வழங்கப்படும் என்றார்.

    • விக்டோரி கவுரி பேசுகையில் நாட்டின் முன்னேற்றத்துக்கு விவேகானந்தர் கூறிய கருத்துக்களை ஏற்று அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    • நீதித்துறையில் வக்கீல்களும், நீதிபதிகளும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பார்கள்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.சி.திலகவதி ஆகியோரை நிய மித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்.

    இதையடுத்து இவர்கள் 5 பேரும் இன்று காலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

    இவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆர்.சண்முக சுந்தரம் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினார்.

    இவரை தொடர்ந்து தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வக்கீல் சங்க நிர்வாகிகளான கமலநாதன், செங்கோட்டுவேல் உள்ளிட்டோரும் வரவேற்று பேசினர். அனைவருக்கும் நன்றி தெரிவித்து புதிய நீதிபதிகள் பேசினார்கள்.

    முதலில் லலிதாம்பிகை அம்மனுக்கும், மாதா அமிர்தானந்தமயிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குமரி மாவட்டத்தில் குக்கிராமத்தில் பிறந்த எனக்கு இந்த பதவி கிடைப்பதற்கு காரணமான எனது பெற்றோர் லட்சுமி சந்திரா-சரோஜினி சந்திரா, மாமனார் தங்கமணி, கணவர் துளசி முத்துராம் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்னை நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்த ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாட்டின் முன்னேற்றத்துக்கு விவேகானந்தர் கூறிய கருத்துக்களை ஏற்று அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு விக்டோரி கவுரி பேசினார்.

    நீதிபதி பி.பி.பாலாஜி: நீதித்துறையில் வக்கீல்களும், நீதிபதிகளும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பார்கள். ஆனால் இருவரும் தினமும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். நாணயத்தின் இரு பக்கங்களும் எப்போதும் சந்திக்க முடியாது. அதனால் அந்த கருத்தை ஏற்க முடியாது.

    பல்வேறு வழக்குகளை விவரங்களுடன் தாக்கல் செய்யும் வக்கீல்களை கம்ப்யூட்டரின் இன்டிட்டி வைஸ் என்றும், தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை அவுட்புட்டிவைஸ் என்றும் அழைக்கலாம். குழந்தையின் முதல் நடை போல நீதித்துறையில் எனது பயணத்தை தொடங்குகிறேன்.

    நீதிபதி கே.கே.ராம கிருஷ்ணன்: திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் விவசாய கூலி குடும்பத்தில் நான் பிறந்தேன். நான் பிறந்த 6-வது மாதத்தில் எனது தந்தை காலமானார். தாயார் மற்றும் தாய் மாமன், சகோதரர் வருமானத்தில் பள்ளி படிப்பையும், சட்ட படிப்பையும் முடித்தேன்.

    இந்த பொறுப்புக்கு வருவதற்கு பலர் காரணமாக இருந்துள்ளனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேபோல நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.

    • மத்திய அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
    • சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி :

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் நடந்து வருகிறது.

    நீதிபதிகள் அடங்கிய 'கொலீஜியம்' சிபாரிசு செய்வதற்கு ஒப்புதல் அளிக்காமல், மத்திய அரசு தாமதம் செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு குற்றம் சாட்டி வந்தது. கொலீஜியம் முறைக்கு எதிராக மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கருத்து தெரிவித்து வந்தார்.

    இதற்கிடையே, கடந்த டிசம்பர் 13-ந்தேதி, சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக 5 நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் சிபாரிசு செய்தது. ஆனால் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் தாமதித்தது.

    கடந்த வாரம் ஒரு வழக்கு விசாரணையின்போது, இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். உடனே அட்டார்னி ஜெனரல், அந்த நியமனத்துக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    அதையடுத்து, கடந்த 4-ந்தேதி, மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, 5 நீதிபதிகள் நியமனத்தை அறிவித்தார்.

    ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.வி. சஞ்சய் குமார், பாட்னா ஐகோர்ட்டு நீதிபதி அசானுதீன் அமானதுல்லா, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 5 புதிய நீதிபதிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் புதிய நீதிபதிகளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    இத்துடன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆகும்.

    மீதியுள்ள 2 இடங்களுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால், குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரவிந்த குமார் ஆகியோரை நியமிக்க கொலீஜியம் கடந்த மாதம் 31-ந்தேதி சிபாரிசு செய்தது. அதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

    • சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
    • சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ள நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 17-ந் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.

    இவர்களில், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும், வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீல கண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வக்கீல்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.

    இவர்களில் வக்கீல்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ள நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது.

    • கோவிலில் பூசாரியாக இருப்பவர் மஞ்சுநாத்திடம் மனைவியை பிரிந்து வாழும்படி கூறியுள்ளார்.
    • மனைவியுடன் சேர்ந்து வாழ்வதுதான் சிறந்தது என்று மஞ்சுநாத்திற்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா அத்தனகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி பார்வதம்மா. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் மஞ்சுநாத் அப்பகுதி கோவிலில் சென்று குறி கேட்டுள்ளார்.

    கோவிலில் பூசாரியாக இருப்பவர் மஞ்சுநாத்திடம் மனைவியை பிரிந்து வாழும்படி கூறியுள்ளார். அதன்படி, தனது மனைவியை பிரிய மஞ்சுநாத் முடிவு செய்தார். அத்துடன் மனைவியுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றும், விவாகரத்து வழங்கும்படியும் துமகூரு மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் மஞ்சுநாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    நீதிபதியின் தொடர் விசாரணையில் பூசாரி கூறியதாலே மஞ்சுநாத் மனைவியை பிரிந்து வாழ விவாகரத்து கேட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து நீதிபதி தம்பதியை சேர்த்துவைக்கும் பொருட்டு மஞ்சுநாத், பார்வதம்மாவை அழைத்து தனித்தனியாக பேசினார்.

    மூட நம்பிக்கையால் மனைவியை பிரிந்து வாழ முடிவு செய்திருப்பது சரியில்லை. மூட நம்பிக்கையை நம்ப வேண்டாம், மனைவியுடன் சேர்ந்து வாழ்வதுதான் சிறந்தது என்று மஞ்சுநாத்திற்கு நீதிபதி அறிவுரை வழங்கினார். இதையடுத்து, தனது மனைவி பார்வதம்மாவுடன் சேர்ந்து வாழ மஞ்சுநாத் சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து கோர்ட்டிலேயே நீதிபதி முன்னிலையில் மஞ்சுநாத்தும், பார்வதம்மாவும் மாலை அணிவித்து கொண்டனர்.

    • இந்த ஆண்டு அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோ்த்துள்ளாா்.
    • மகனை அரசு பள்ளியில் சோ்த்து வரும் நீதிபதிக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

    அவினாசி

    திருப்பூா் மாவட்டம் அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வருபவா் வடிவேல் (வயது40). இவா் தனது மகன் நிஷாந்த் சக்தியை 1, 2ம் வகுப்புகளை கோவை மாவட்டம், பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும்,3 முதல் 5ம் வகுப்பு வரை திருச்சி, மதுராபுரி அரசு நடுநிலைப் பள்ளியிலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஈரோடு குமலன்குட்டை அரசு உயா்நிலைப்பள்ளியிலும் படிக்கவைத்துள்ளாா்.இதைத்தொடா்ந்து இந்த ஆண்டு அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சோ்த்துள்ளாா். தொடா்ந்து தனது மகனை அரசுப் பள்ளியில் சோ்த்து வரும் நீதிபதிக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

    மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் உழைத்து மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என நீதிபதி பேசினார்.
    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் 25-வது ஆண்டு விழா நடந்தது. முதல்வர் குணசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக துறையூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவர் கல்வியில் சிறந்த விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

    மாணவர்கள் தன்னம்பி க்கையுடன் உழைத்து, மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். சட்ட திட்டங்களை மதித்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். அரசுப்பணிகளுக்கு செல்ல படிக்கும் காலத்தில் இருந்தே கடினமான பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.  

    மாணவிகள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் டைரியில் நீங்கள் என்ன வேலைக்கு செல்லவேண்டும் என்பதை குறித்து வைத்து தினமும் வாசித்து அதற்கு ஏற்ப உழைக்க வேண்டும். 


    பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. மற்றும் காவலர் தேர்வுகளுக்கு அதிக மாணவர்களை அனுப்பிய பெருமையுடைய இந்த கல்லூரி மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, நகர்மன்ற உறுப்பினர் ஜீவரத்தினம், வேந்தோணி, ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை ராணி துரைராஜ், துறைத்தலைவர்கள் ரேணுகாதேவி, அறிவழகன், கண்ணன், ஆயிஷா, மும்தாஜ் பேகம், விஜயகுமார் கிருஷ்ணவேணி, ஹரிநாராயணன், உடற்கல்வி இயக்குனர் பிரசாத் மற்றும் பேராசிரி யர்கள், அலுவலக பணியா ளர்கள், மாணவ- மாணவி கள் கலந்து கொண்டனர். 
    ×