search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Confidence"

    • வாழ்க்கையில் ஒருசில பழக்கவழக்கங்களை தொடர்ந்து பலன் தரும்.
    • நேர்மறையான எண்ணங்களை மனதில் விதையுங்கள்.

    அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க ஒருசில பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுவது பலன் தரும்.

    1. நட்பு வட்டம் உங்கள் நலனில் அக்கறை கொள்வதாக அமைய வேண்டும். உங்களுடைய செயல்பாடுகளை நேர்மறையாக விமர்சித்து நல்வழிப்படுத்தும் நல் உள்ளங்களுடன் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் ஊக்குவித்து நிறை, குறைகளை தவறாமல் சுட்டிக்காட்டுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.

    2. மற்றவர்கள் உங்களிடம் கருத்து கேட்டாலோ, உதவி கேட்டாலோ உங்கள் மனதில் எழும் எண்ணங்களை தயங்காமல் வெளிப்படுத்திவிடுங்கள். உங்கள் மனம் `இல்லை' என்று சொல்ல நினைக்கும். அதன் விருப்பத்துக்கு மாறாக `ஆம்' என்று சொல்லாதீர்கள். நீங்கள் விரும்பாத விஷயங்களை செய்தால் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வதாக அமைந்துவிடும். அது தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் குலைத்துவிடும்.

    3. தினமும் உறுதிமொழி எடுங்கள். `இன்று என்னால் முடிந்ததை செய்துள்ளேன்' என்பது போன்ற மந்திரமாக அது அமையட்டும். பிறருக்கு உங்களால் இயன்ற உதவிகளை தயங்காமல் செய்யுங்கள். அது உங்களுக்கு நேர்மறை உணர்வைத் தரும்.

    4. கடினமான காலங்களில் உங்களுக்கு பக்கபலமாக இருந்தவர்களுக்கு நன்றியுடன் இருங்கள். பிறர் செய்யும் சின்னச்சின்ன உதவிகளுக்கு கூட நன்றி சொல்ல மறக்காதீர்கள். நேர்மறையான எண்ணங்களை மனதில் விதையுங்கள். அது மன வலிமையை தரும்.

    5. இசை கூட ஒரு வகையான சிகிச்சை முறைதான். அதற்கு மனதை சாந்தப்படுத்தி மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும் சக்தி உண்டு. வேகமான, உற்சாகமான வரிகள் கொண்ட பாடல்கள் நேர்மறை உணர்ச்சிகளை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    6. கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள். எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக சிந்தித்தும் கவலை கொள்ளாதீர்கள். தற்போது கிடைத்ததை சிறப்பாகப் பயன்படுத்துங்கள். வாழ்க்கையை மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் அனுபவிக்கும் திருப்தியை அது தரும்.

    7. எப்போதும் நண்பர்களிடம் ஆலோசனை கேட்பது ஏற்புடையதாக இருக்காது. உங்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் முடிவுகளை எடுங்கள். அது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சிறப்பாக செயல்பட வழிகாட்டும்.

    • தன்னம்பிக்கை இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்று எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார்.
    • ஏற்பாட்டை மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

    மதுரை

    மதுரையின் அட்சய பாத்திரம் அமைப்பு மூலம் ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு 710 நாளை எட்டியது.

    இதையொட்டி மதுரை சொக்கிகுளம் ஜே.சி அரங்கில் கொடை யாளர்களுக்கு அட்சய சேவா ரத்னா விருது வழங்கும் விழா நடந்தது. டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். ரோட்டரி முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ஆடிட்டர் சேது மாதவா முன்னிலை வகித்தார்.

    எஸ்.வி.எஸ். கடலை மாவு நிறுவன நிர்வாக பங்குதாரர் சூரஜ் சுந்தர சங்கர் வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 18 பேருக்கு அட்சய சேவா ரத்னா விருதை வழங்கினார்.

    டாக்டர் உஷா கிம், மின்வாரிய முன்னாள் கூடுதல் தலைமை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.என்.எல். முன்னாள் உதவி பொது மேலாளர் கிருஷ்ண மூர்த்தி, காந்தி பொட்டல் சிலை பராமரிப்பு கமிட்டி தலைவர் சாமிக் காளை, நானோ சொல்யூ ஷன்ஸ் நிர்வாக இயக்குநர் முகமது உமர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க துணைத் தலைவர் இளங்கோவன், அமுதா அக்சயா டிரஸ்ட் நிர்வாகி அமுத லட்சுமி, ஆச்சார்யா எஜுகேஷன் நிர்வாக இயக்குனர் கண்ணன், எஸ்.எஸ். காலனி செல்வி கிளினிக் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுவாமிநாதன். சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, ஆன்மா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகி ரத்தினவேல்சுவாமி, எஸ்.வி.எஸ். கடலை மாவு நிர்வாக பங்குதாரர் சூரஜ் சுந்தர சங்கர், உசிலம்பட்டி தமிழ் ஒளி தொலைக்காட்சி நிறுவனர் தமிழரசன், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் நாகரத்தினம், மதுரை பாண்டியன் ரோட்டரி சங்க செயலாளர் சலீம் உள்பட 15 பேர் அட்சய சேவா ரத்னா விருதை பெற்றனர்.

    விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசியதாவது:-

    உங்களைச் சுற்றி உங்களை தாழ்வாக கருது பவர்களை விட உங்களை ஊக்கப்படுத்தும் நல்லவர்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மனிதனுக்கு இரு சந்தர்ப் பங்களில் வேகம் வர வேண்டும். ஒன்று உங்களை குட்டுகிற போது மற்றொன்று தட்டிக் கொடுக்கும் போது. இந்த இரு சந்தர்ப்பங்களிலும் வேகம் வராவிட்டால் மனிதன் சாதிப்பது கடினம்.

    தன்னம்பிக்கை ஒவ்வொரு மனிதனுக்கும் மூச்சுக்காற்று. தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் உலகில் எதையும் சாதிக்கலாம். பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பிலேயே வரவேண்டும். குழந்தைகளுக்கு பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை இளமையிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

    மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் உழைத்து மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என நீதிபதி பேசினார்.
    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் 25-வது ஆண்டு விழா நடந்தது. முதல்வர் குணசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக துறையூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவர் கல்வியில் சிறந்த விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

    மாணவர்கள் தன்னம்பி க்கையுடன் உழைத்து, மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். சட்ட திட்டங்களை மதித்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். அரசுப்பணிகளுக்கு செல்ல படிக்கும் காலத்தில் இருந்தே கடினமான பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.  

    மாணவிகள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் டைரியில் நீங்கள் என்ன வேலைக்கு செல்லவேண்டும் என்பதை குறித்து வைத்து தினமும் வாசித்து அதற்கு ஏற்ப உழைக்க வேண்டும். 


    பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. மற்றும் காவலர் தேர்வுகளுக்கு அதிக மாணவர்களை அனுப்பிய பெருமையுடைய இந்த கல்லூரி மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, நகர்மன்ற உறுப்பினர் ஜீவரத்தினம், வேந்தோணி, ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை ராணி துரைராஜ், துறைத்தலைவர்கள் ரேணுகாதேவி, அறிவழகன், கண்ணன், ஆயிஷா, மும்தாஜ் பேகம், விஜயகுமார் கிருஷ்ணவேணி, ஹரிநாராயணன், உடற்கல்வி இயக்குனர் பிரசாத் மற்றும் பேராசிரி யர்கள், அலுவலக பணியா ளர்கள், மாணவ- மாணவி கள் கலந்து கொண்டனர். 
    தன்னம்பிக்கையை உறுதிபடுத்துங்கள். நீங்கள் எப்படி ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே ஆவீர்கள். மனோதைரியமும், தன்னம்பிக்கையும்தான் நம்மை வாழ வைக்கும் உயிர்நாடி.
    மனிதன் மனிதனாக வாழ்ந்து தனது கடமைகளை செவ்வனே செய்து முடிப்பது. மனிதநேயத்துடன் வாழ்வது, குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவேற்றுவது, ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நடப்பது, பூமியில் பிறந்த பயனை அடைந்து மற்றவர்கள் போற்ற வாழ்வது, மேலும் சொல்லப்போனால் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனே‘ வெற்றியின் லட்சியத்தை அடைந்தவன் என்று சொல்லலாம்.

    பொதுவாக, வெற்றி என்பது ஒரு நல்ல செயலின் ஒட்டுமொத்த வெளிப்பாடு என்றே எடுத்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்களை விட அப்படி ஒன்றும் பிரமாதமான திறமை படைத்தவர்கள் இல்லை. அவர்கள் வெற்றி பெற, தோல்வி அடைந்தவர்களுக்கு காரணமாகிறார்கள். ஆனால் தோல்விகள் நிரந்தரமில்லை. “நாமும் ஜெயிக்க முடியும்“ என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

    அவமானங்கள் வெற்றியின் அஸ்திவாரம்


    இன்று வாழ்க்கையில் பலர் பலவிதமான அவமானங்களை சந்திக்கின்றனர். அதை சகிக்க முடியாமல் சிலர் தவறான முடிவு கூட எடுத்து விடுகின்றனர். அவமானத்தை அவமானமாக எடுத்து கொள்ளாமல் லட்சியத்தை அடைவதற்கான வெறியாக மாற்றி கொள்ள வேண்டும். கிரேக்க நாட்டில் ஒரு சிறுவன் ‘திக்குவாயன்‘ என்று அவமானப்படுத்தப்பட்டான்.

    பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட அவனுக்கு பேச்சு வரவில்லை. எல்லோரும் ஏளனம் செய்தனர். அப்போது அவனுக்குள் ஒரு வெறி பிறந்தது. கூழாங்கற்களை வாயில் போட்டு பேசிப் பழகு என்று அவன் தாய் சொன்னபடி செய்தான். நாளடைவில் அவன் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டது. வார்த்தைகள் சரளமாக வந்தன. சொற்பொழிவில் ஒரு ஈர்ப்பு இருந்தது. கூட்டம் கூடியது. உலக புகழ்பெற்ற பேச்சாளர் ஆனார். அவர்தான் டெமாஸ்தனிஸ் என்ற பேச்சாளர். அவமானங்கள் வெற்றியின் அஸ்திவாரம்.

    தன்னம்பிக்கை

    தன்னம்பிக்கை உள்ளவர்களை யாராலும் வெற்றி காண முடியாது. மருத்துவமனையில் உள்ள நோயாளியை நண்பர்களும், உறவினர்களும் சென்று பார்க்கிறார்கள். ஏன்? அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டத்தான். மிகவும் கடுமையான வியாதியாக இருந்தாலும் மற்றவர்கள் கொடுக்கும் ஆறுதலான வார்த்தைகள்தான் அவரது வியாதியை பாதியாக குறைக்க காரணமாகிறது. நமது எண்ணங்களும், நிலைப்பாடுகளும், உளம் சார்ந்தது என்றாலும், தன்னம்பிக்கைதான் உயிர் சார்ந்தவை.

    ஆகவே, தன்னம்பிக்கையை உறுதிபடுத்துங்கள். வெற்றிதரும் சிந்தனைகளை மட்டும் உயிர்மூச்சாக கொள்ளுங்கள். நீங்கள் எப்படி ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே ஆவீர்கள். மனோதைரியமும், தன்னம்பிக்கையும்தான் நம்மை வாழ வைக்கும் உயிர்நாடி. 
    ×