search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலம்"

    • உழவு செய்து நிலத்தை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.
    • ஆழமாக உழுவதால் களைகள் வேரோடு வெளியேற்றப் படுகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெய்த கோடை மழையால் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, சாயல்குடி, அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கோடை உழவு செய்து வருகின்றனர்.

    கோடைகாலத்தில் வயல்களில் உழவு செய்வ தன் மூலம் ஆழமாகவும், வயலை சாய்வு மற்றும் குறுக்காக உழுவதால் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண்கட்டிகள் உடைந்து மண் அரிப்பு தடுக்கப்பட்டு சத்துக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மழைகாலத்தில் பெய்யும் மழைநீர் வடிந்து வீணாகாமல் மண்ணுக்குள் செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடைமழை பெய்ததால் கோடை உழவு செய்ய வாய்ப்பிருக்கிறது. கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் அதிக ரிப்பதுடன் மண்ணின் வளமும் அதிகரிக்கிறது.இதனால் பருவகாலத்தில் ஒரளவு மழை பெய்தாலும் நெல் உள்பட அனைத்து பயிர்களும் பயன்தரும் என்றார்.மேலும் இதுகுறித்து வேளாண்மை துறையினர் கூறியதாவது:-

    கோடைகாலத்தில் நிலத்தை உழுவதால் மண்ணின் காற்றோட்டம் அதிகரிக்கிறது. களைக்கொல்லி' பூச்சிக்கொல்லி, எச்சம் மற்றும் முந்தைய பயிர்களின் வேர், களைகள் மூலம் வெளிப்படும் தீங்கான ரசாயனம் விரைவாக சிதைவ டைகிறது. மண்ணின் மூலம் பரவும் பூச்சி, முட்டை, புழு மற்றும் கூட்டுப்புழுக்கள் அழிந்து விடுகிறது. அடுத்தடுத்த பயிர் சாகுபடியில் பூச்சி களால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது. பூச்சிக் கொல்லி களை பயன்ப டுத்துவதும் குறைவதால் விவசாயிகளுக்கு செலவும் குறைகிறது. கோடை உழவின் காரண மாக தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா வித்துக்கள் மற்றும் பூஞ்சை நுண்ணு யிரிகள் இறக்கின்றன. கோடை உழவு, பயிர் சுழற்சி ஆகியவை புழுக்களை கட்டுப்படுத்தும். ஆழமாக உழுவதால் களைகள் வேரோடு வெளியேற்றப் படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    • சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ், வேல்கேர் மருத்துவமனை டாக்டர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
    • விழாவில் 80 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே விஸ்வநாதபேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் வருவாய்த்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ், வேல்கேர் மருத்துவமனை டாக்டர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ், டாக்டர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர் சங்கரவடிவு, தலையாரி வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன் ஆகியோர் சுமார் 80 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் வார்டு கவுன்சிலர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சங்கரவேலு நிலத்தை, மற்றொரு சங்கரவேலு வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
    • மீட்கப்பட்ட நிலம் போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் சங்கரவேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தென்காசி:

    சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரவேலு (வயது81). இவருக்கு சொந்தமான ரூ. 25 லட்சம் மதிப்பிலான 64.5 செண்ட் நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சங்கரவேலு என்பவர் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மோசடி செய்து மற்றொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சங்கரவேலு கடந்த 2-ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் டி.எஸ்.பி. முத்துப்பாண்டி அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் உமா மகேஸ்வரி, மாரியப்பன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து போலி ஆவணம் ரத்து செய்து, மீட்கப்பட்ட நிலத்தை போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் முன்னிலையில் சங்கரவேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பாராட்டுகளை தெரிவித்தார்.

    • கோயிலில் பத்திரங்களை ஆய்வு செய்த போது 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தானது என உறுதி செய்யப்பட்டது.
    • அந்நிலத்தில் அர்ச்சகர்கள் வசித்து வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோயில் பின்புறம் உள்ள 10 சென்ட் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த சிதம்பரம் செட்டியார் மனைவி வள்ளியம்மாள் கோவில் கட்டளை பயன்பாட்டுக்காக 1963ல் தானமாக வழங்கியுள்ளார்.

    அந்நிலத்தில் அர்ச்சகர்கள் வசித்து வந்தனர். அதன்பின் அவர்களை அப்புறப்படுத்தி தனியார் ஆக்கிரமித்தனர். பின் பயன்பாடு இன்றி புதர்மண்டிய நிலமாக இருந்து வந்தது. கோயிலில் பத்திரங்களை ஆய்வு செய்த போது 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தானது என உறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவில் நிர்வாகம் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டு கோவில் சுவாதீனத்துக்கு நிலத்தை எடுத்துள்ளது.

    • காட்டாம்பூர் கண்மாய் நடுவே நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைக்க முயற்சி செய்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • கிராம மக்கள் ஆக்கிரமிப்பு செய்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் நுராம்பட்டி ஏந்தல் உள்ளது. இந்த கண்மாயின் மூலம் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்கள் பாசனம் பெற்று விவசாயம் நடந்து வருகிறது.

    இந்த கண்மாயின் அருகில் தனி நபர் ஒருவரால் வீட்டுமனை போடப்பட்டு உள்ளது. அதற்கு பாதை இல்லாத காரணத்தினால் கண்மாயின் நடுவே அவர் சாலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் மற்றும் வருவாய் துறையினரிடமும் புகார் செய்தனர்.

    அதன்பேரில் சேர்மன்சண்முக வடிவேல், மாவட்ட கவுன்சிலர் ரவி மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு செய்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    இதைத்தொடர்ந்து சேர்மன் சண்முக வடிவேல் சாலை அமைக்கும் பணியை நிறுத்த அரசு அலுவலர்களின் மூலமாக நடவடிக்கை எடுத்தார். இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகள் தற்காலி கமாக நிறுத்தப்பட்டது.

    திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடேசன் கண்மாயில் ஆய்வு செய்து கண்மாய் நடுவே சாலை அமைக்க முயன்ற தனி நபர் மீது புகார் செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்மாயில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பாதை அமைக்கப்பட்டதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.

    • கோவில் மனை, மடம், நிலங்களில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர்.
    • அறநிலையத்துறைக்கு பகுதிக்கு பதிலாக வாடகை செலுத்த வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் கோவில் மனை, மடம், நிலங்களில் குடியிருப்போர் சங்க கூட்டம் நாகை செல்வராஜ் எம்.பி. தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சந்திரராமன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் முருகையன், சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, நகர செயலாளர் மார்க்ஸ், வி.தொ.ச ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், கோவில் மனை, மடம், நிலங்களில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர்.

    தற்போது அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் பகுதி என்பதை மாற்றி வாடகை என்ற பெயரில் மிக அதிகமான தொகை நிர்ணயம் செய்து, அறநிலையத்துறைக்கு பகுதிக்கு பதிலாக வாடகை செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் செய்து வருகிறார்கள்.

    அவ்வாறு நிர்ணயம் செய்த தொகையை கட்ட தவறினால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீடு கட்ட மற்றும் எந்த சலுகைகளும் கிடைக்காது என்றும், இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் சொல்லி வருவதை கைவிட வேண்டும். எனவே, தமிழக முதல்-அமைச்சரும், அறநிலையத்துறை அமைச்சரும் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் யோகநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிலூர் ரவி, அமைப்பின் பொறுப்பாளர்கள் ஆடிட்டர் கருணாநிதி, மங்கலூர் பிரபாகரன், முஜிபூர் ரஹ்மான், ரெத்தினம், மருதுராஜேந்திரன், திருமலை உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கோவில் மனை மடம் நிலங்களில் குடியிருக்கும் சுமார் 300-க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நிர்வாகி அன்பன் நன்றி கூறினார்.

    • நில உரிமையாளர்கள் தங்களது ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
    • 15-ந்தேதி மேலச்செவல் உள்ளிட்ட ஊர்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, கருமேனி ஆறு, நம்பியாறு இணைப்பு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நில உரிமையாளருக்கு இழப்பீடு

    நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டு உள்ள நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் நில உரிமையாளர்கள் தங்களது பட்டா நகல், வில்லங்கச் சான்று, கிரைய ஆவணம், மூல ஆவணம், வாரிசு அடிப்படையில் பெற்ற நிலமெனில் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

    சிறப்பு முகாம்கள்

    இன்று (செவ்வாய்க்கிழமை) கொழுமடை, தோட்டாக்குடி, தருவை, ராமகிருஷ்ணாபுரம் ஆகிய ஊர்களில் முகாம் நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) புதுக்குடி, மேலத்திடியூர், கஸ்தூரிரங்கபுரம் ஆகிய ஊர்களிலும், 9-ந் தேதி கேசவசமுத்திரம், அ.சாத்தான்குளம், புதுக்குளம், காடன்குளம், திருமலாபுரம், விஜயநாராயணம் பகுதி-1, உறுமன்குளம் ஆகிய கிராமங்களிலும், 10-ந் தேதி பத்தமடை, கோவன்குளத்திலும் முகாம்கள் நடைபெறுகின்றன.

    13-ந்தேதி பிரான்சேரி, குறவர்குளம், திருவெம்பலாபுரம், 14-ந்தேதி தெற்கு வீரவநல்லூர் பகுதி -2, பருத்திப்பாடு, செங்குளம், முனைஞ்சிப்பட்டி.

    மூலைக்கரைப்பட்டி- விஜயநாராயணம்

    15-ந்தேதி மேலச்செவல், பொன்னாக்குடி, இலங்குளம், 16-ந்தேதி புதுக்குடி, ஆழ்வானேரி, தருவை, ராமகிருஷ்ணாபுரம், விஜயநாராயணம், உறுமன்குளம், 17-ந்தேதி தெற்கு வீரவநல்லூர் பகுதி -1, மூலைக்கரைப்பட்டி, மேலத்திடியூர், கோவன்குளம் ஆகிய ஊர்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

    20-ந்தேதி கொழுமடை, தோட்டாக்குடி, புதுக்குளம் திருவலாபுரம் 21-ந் தேதி பிரான்சேரி, அ.சாத்தான்குளம், குறவர்குளம், காடன்குளம், திருவெம்பலாபுரம், விஜயநாராயணம் பகுதி -1, கஸ்தூரிரங்கபுரம்,

    23-ந்தேதி பத்தமடை, பருத்திப்பாடு, ராமகிருஷ்ணாபுரம், விஜயநாராயணம் பகுதி-1, இலங்குளம், தெற்கு வீரவநல்லூர் -2 ஆகிய ஊர்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆக்கிரமிப்பில் இருந்த 1.60 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டன.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு ஒருங்கிணைந்த வளாகம் கட்டும் பணி தொடங்கப்படும்

    சோழவந்தான்

    வாடிப்பட்டி யூனியனுக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.40லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம், சேவை மையம் என ஒருங்கி ணைந்த வளாகம் கட்ட கடந்தாண்டு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது.

    இதற்காக காடுபட்டி கிராமத்தில் சர்வே எண் 566/37 மற்றும் 293/2-ல் அமைந்துள்ள அரசு நத்தம் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளதால் வருவாய் துறை மூலம் சர்வே பணி செய்து கொடுக்க காடுபட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாடிப்பட்டி தாலுகா அலுவலத்தில் உள்ள வட்ட அளவையர் பிரிவில் சர்வே பணிக்குறிய தொகையான ரூ.1600-ஐ இ-சலான் மூலம் கடந்தாண்டு நவம்பர் 14-ல் செலுத்தப்பட்டது.

    ஆனால் இதுவரை அரசு நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெறா மல் 4 மாதங்களாக சர்வே பிரிவினர் இழுத்தடிப்பு செய்து வந்தனர். இந்த நிலையில் தென்கரை குறுவட்ட அளவையர் சந்திரா தலைமையில் காடுபட்டி அரசு நத்தம் சர்வே எண். 566/37 மற்றும் வடகாட்டுபட்டி மந்தைகளம் சர்வே எண் 293/2-ல் உள்ள 1 ஏக்கர் 60 செண்ட் நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கல் ஊன்றி நிலத்தை மீட்டனர்.

    அப்போது ஊராட்சி தலைவர் ஆனந்தன், யூனியன் பொறியாளர் பூம்பாண்டி, மேற்பார்வை யாளர் கருப்பையா, கிராம நிர்வாக அலுவலர் மணிவேல் ஆகியோர் உடனி ருந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், முத்துபாண்டி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு ஒருங்கி ணைந்த வளாகம் கட்டும் பணி தொடங்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • நாமக்கல் 50 சதவீத மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மற்றவர்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் அரசு தாட்கோ மூலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
    • 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்–குறிப்பில் கூறியிருப்ப–தாவது:-

    நாமக்கல் 50 சதவீத மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மற்றவர்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் அரசு தாட்கோ மூலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    நடப்பாண்டில் மானிய கோரிக்–கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடையும் விதமாக சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டார்.

    இந்த அறிவிப்பின்படி இந்த ஆண்டு 200 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த விவசாயத்தொழில் செய்பவர்களில் நில உடமைகளை அதிகரிக்கும் பொருட்டும், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயத்தில் வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    முத்திரை தாள் கட்டணத்தில் விலக்கு இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நிலம் வாங்க உத்தேசியுள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

    வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய தாட்கோ இணையதளமான www.tahdco.com-ல் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 70 ஏக்கர் விவசாய நிலங்கள் பத்திரப்பதிவு செய்ய இயலவில்லை.
    • நில உரிமையாளர்கள், குடியிருப்போர், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் உள்ள நிலங்களை வக்பு வாரிய நிலம் என கூறி ஊத்துக்குளி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய உள்ள தடையை நீக்க கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஊத்துக்குளி சார்பதிவாளரிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வடுகபாளையம் கிராமத்தில் ராமமூர்த்தி நகர், கே.கே.நகர், செந்தில் நகர், சரசுவதி நகர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் 70 ஏக்கர் விவசாய நிலங்கள் பத்திரப்பதிவு செய்ய இயலவில்லை. இந்த பிரச்சினையால் நில உரிமையாளர்கள், குடியிருப்போர், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதற்கான தடையை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை விமான நிலைய விரிவாத்தில் தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை.
    • டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்திய மந்திரி வி.கே.சிங் இன்று மதுரை வந்தார்.

    அவனியாபுரம்

    மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்திய மந்திரி வி.கே.சிங் இன்று மதுரை வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை. 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் இயங்கு வதற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் வெளி நாட்டு விமானங்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அதிகமான விமான சேவைகள் வந்ததும் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். இதன் மூலம் மதுரை விமான நிலையத்தில் நள்ளிரவு சேவைக்கான விமானங்கள் வந்தால் ஏற்பாடுகள் செய்ய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தயாராக உள்ளது.

    மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே சுங்கஇலாகா சேவை இயங்கி வருகிறது. இதனால் மதுரை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் கூடுதலாக விமானங்கள் வந்து சென்றால் அதுகுறித்து பரிசீலனை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.

    கொரோனா விதி முறைகள் குறித்து மத்திய அரசு விதிகளை பின்பற்ற அறிவித்துள்ளது. அதனை அனைத்து விமான நிலை யங்களிலும் கடை பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை கடைபிடிக்க வேண்டியது பொது மக்களின் கடமை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜ.க. நிர்வாகி பேரா சிரியர் சீனிவாசன்,மாவட்ட செயலாளர் சசிகுமார், கதலி நரசிங்க பெருமாள், ராஜரத்தினம், ஏர்போட் கார்த்திக், கோல்டன் ரவி, அவனி கருப்பையா,சடாச்சாரம், பெருங்குடி முத்துமாரி, முத்துகுமார், சுந்தர் வெற்றி செல்வி, தமிழ்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

    • மலைவாழ் கிராமங்களில் பல துறைகள் மூலம் மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டு வருகிறது என்றாா்.
    • மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.

    உடுமலை :

    மலைவாழ் மக்களுக்கு நில உரிமை ஆவணம் வழங்கும் நிகழ்ச்சி உடுமலை அருகே உள்ள குழிப்பட்டி செட்டில்மெண்டில் நடைபெற்றது. 389 மலைவாழ் மக்களின் விவசாய நிலங்களுக்கு நில உரிமை ஆவணங்களை (பட்டா) தமிழக செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

    நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக மலைவாழ் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவ முகாம், நியாய விலைக்கடைகள், கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகள் மூலம் மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டு வருகிறது என்றாா்.

    நிகழ்ச்சியில் ஆதி திராவிட நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது :- ஆதி திராவிடா்கள், பழங்குடியினரின் பொருளாதார நிலையை மேம்படுத்த தாட்கோ மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2005 வன உரிமை சட்டத்தின்படி விவசாய நிலங்களுக்கு வன உரிமை ஆவணம் வழங்கப்படுகிறது என்றாா்.விழாவில் மலைவாழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் வழங்கினா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத், பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் அண்ணாதுரை, மாவட்ட அலுவலா் ரவிசந்திரன், மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ., இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், தி.மு.க. நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

    ×