search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி உதவி"

    • திடீர் மரணமடைந்த ராஜபாளையம் போலீசார் குடும்பத்துக்கு நிதி உதவியை டி.எஸ்.பி. பிரீத்தி வழங்கினார்.
    • 1993-ம் ஆண்டு பேஜ் காவலர்களின் காக்கும் கரங்கள் சார்பாக வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    1993-ம் ஆண்டு பேஜ் காவலர்களின் காக்கும் கரங்கள் சார்பாக உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை மரணமடைந்த ராஜபாளையம் தெற்கு காவல்நிவையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் நாகராஜ் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பந்தப்புளி கிராமத்தை சேர்ந்த இவ ரது மனைவி ஆண்டாள் (வயது49), ஜெயப்பிரகாஷ் (22), அபிநேஸ் (14) என்ற 2 மகன்களும் உள்ளனர். அவரது குடும்பத்திற்கு உதவிடும் வகையில் 1993 பேஜ் காவல்துறையினர் சார்பில் அனைவரும் சேர்ந்து ரூ.7லட்சத்து 4 ஆயிரத்து 500 பணத்தை திரட்டினர். இதில் அவரது தாயாருக்கு ரூ.1 லட்சமும், மீதி தொகையை அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடம் ராஜபாளையம் டி.எஸ்.பி பிரீத்தி வழங்கி ஆறுதல் கூறினார். இதில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ராஜ், மனோகரன், வடக்கு காவல் நிலையம் முத்து கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், மணி கண்டன் சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் காவலர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    • கொடைக்கானலில் நடைபெற்ற யோகா போட்டியில் மகேந்திரன் ஸ்மித் வெற்றி பெற்றார்.
    • கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., தன்னுடைய பங்களிப்பாக ரூ. 25 ஆயிரம் ரொக்கமாக மாணவனிடம் வழங்கி வாழ்த்தினார்.

    செங்கோட்டை:

    கடையநல்லூர் அருகே உள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் 12 வயதான மகேந்திரன் ஸ்மித். இவர் கொடைக்கானலில் நடைபெற்ற யோகா போட்டியில் வெற்றி பெற்றார். இதனையடுத்து தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கு பெற மகேந்திரன் ஸ்மித் தகுதி பெற்றார்.

    இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக அதில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் சிறுவனின் தந்தை சந்திரசேகர் தமிழக அரசுக்கு நிதி உதவி அளிக்க கோரிக்கை வைத்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில் சர்வதேச போட்டிக்கு செல்ல தேவையான செலவிற்கு தன்னுடைய பங்களிப்பாக ரூ. 25 ஆயிரம் ரொக்கமாக மாணவனிடம் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியின் போது மாணவனின் தந்தை சந்திரசேகர், யோகா பயிற்சி ஆசிரியா் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
    • முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் கடந்த 14-ந் தேதி அன்று சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், மாவட்ட தி.மு.க செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

    பின்னர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.உடன் ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் ஆகியோர் உள்ளனர்.

    • கலெக்டர் வழங்கினார்
    • மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டைமாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட் டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற் றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, வேலைவாய்ப்பு, கடன்உதவி, இலவச வீடுகள், குடிநீர் வசதி வேண்டி மனு கொடுத்தனர். மொத்தம் 283 மனுக்களை பொது மக்களி டம் இருந்து பெற்று, சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களி டம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற் கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவ டிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும், கலெக்டர் தனது விருப்ப நிதியில் இருந்து இருளர் இன மக்கள் 12 நபர்க ளுக்கு நலிந்தோர் நிதியுதவி, குடிசை வீடு மாற்று நிதியுதவி, சுய தொழில் நிதியுதவி, திரு நங்கை சுயதொழில் நிதியுதவி என ரூ.64 ஆயிரம் வழங்கி னார்.

    கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) முரளி, சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் ஸ்ரீ வள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், நேர்முக உதவி யாளர் (நிலம்) கலைவாணி, கலால் உதவி ஆணையாளர் வரதராஜ். மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் சரவணகு மார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கை.முருகன் உருப்படத்தினை தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
    • ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஆலடி எழில்வாணன் ஆகியோர் கை.முருகன் படத்திற்கு மாலை அணிவித்தனர்.

    ஆலங்குளம்:

    கீழப்பாவூர் யூனியன் கழுநீர்குளம் பஞ்சாயத்து தலைவரும், முன்னாள் தி.மு.க. மாவட்ட தொண்டரணி அமைப்பாளருமான கை.முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி கல்லூத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

    கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன் தலைமை தாங்கினார். கை.முருகன் உருப்படத்தினை தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு, கை.முருகனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவியினை நிர்வாகிகள் முன்னிலையில் கை.முருகன் குடும்பத்தினரிடம் வழங்கினார். பின்னர் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஆலடி எழில்வாணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எம்.ஏ.எம்.ஷெரீப், துணை செயலாளர்கள் தமிழ்செல்வன், கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, அன்பழகன், அழகு சுந்தரம், ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருள், ராஜேஸ்வரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் பொன்செல்வன், சமுத்திரபாண்டி, முத்துராஜ், பழனிசாமி, கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம். எஸ்.ராஜன், பெத்த நாடார்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், இளைஞரணி கோமு,மாவட்ட இளைஞரணி கிருஷ்ணராஜ், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தளபதி சிவராஜன், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்துபாண்டியன், குறும்பலாப்பேரி இளங்கோ, சுரேஷ் கண்ணா, தினேஷ், தங்கச்சாமி, தளபதி முருகேசன், தங்கேஸ்வரன், நாராயண சிங்கம், பாண்டி, காசிபாண்டி, சீனி நம்பியார், ராஜசேகர், ஜெகன், சீதாராமர், காளி முத்து, லிங்கம் திருமலைகுமார், அழகுதமிழ், மாறன், சுதன் ராஜா, ராம்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 2 மாணவர்களுக்கான செலவை அகத்தியம் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது.
    • தனது சொந்த நிதியின் மூலம் ரூ.4 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

    பல்லாவரம்:

    ரஷ்ய விண்வெளி மையத்தை பார்வையிட செல்லும் மாணவர்களுக்கு, பல்லாவரம் எம். எல். ஏ. இ.கருணாநிதி ரூ. 4 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

    கொரோனா காலத்தில், முடங்கிக் கிடந்த அரசு பள்ளி மாணவர்களை, செறிவூட்டும் விதமாகவும், அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் விதமாகவும், 'ராக்கெட் சைன்ஸ்' என்ற தலைப்பில் ஆன்-லைன் பயிற்சி திட்டம், 2022-ம் ஆண்டு, ஜனவரி 26-ந்தேதி நடத்தப்பட்டது.

    விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை தலைமையில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள, 56 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவர்கள் வாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், ஆன்-லைன் வகுப்பும் தொடர்ந்து கேள்வி நேரமும் நடத்தப்பட்டது.

    இதில் நிறைவாக 50 பேர் தமிழக அரசின் ஆதரவுடன் வருகிற ஆகஸ்டு 9-ந் தேதி ரஷ்ய நாட்டில் உள்ள யூரிக்காரின்' விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட செல்கிறார்கள்.

    இவர்களில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஜமீன் பல்லாவரம் மேல் நிலை பள்ளியை சேர்ந்த பிளஸ்- 2 மாணவர்ரோஹித், பிளஸ்-1 மாணவர் முகமதுசதிக், 10-ம் வகுப்பு மாணவர்கள், லத்தாஷா ராஜ் குமார், இலக்கியா, லித்திகா, ரக்க்ஷித் ஆகிய 6 மாணவர்களும் அடங்குவர்.

    ரஷ்யாவுக்கு செல்ல ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.2 லட்சம் செலவாகிறது. இதில் 2 மாணவர்களுக்கான செலவை அகத்தியம் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது. ஒரு மாணவருக்கு தனியார் நிறுவனமும், ஒரு மாணவருக்கு தமிழ் ஆர்வலர்களும் நன்கொடை வழங்கி உள்ளனர்.

    இந்நிலையில் 2 மாணவர்களுக்கு பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தனது சொந்த நிதியின் மூலம் ரூ.4 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். நிகழ்ச்சியில் பல்லாவரம் 2-வது மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, அறிவியல் பட்டதாரி ஆசிரியை விஜயலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, மாமன்ற உறுப்பினர் கலைச் செல்வி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இளங்கோவன் 3-ந் தேதி சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றார்.
    • இந்திய தூதரகத்துக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை செம்ப ருத்தி நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன் (51,) இவர் கடந்த மாதம் 3-ந் தேதி சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றார். அங்கு, கம்ப்யூட்டர் டிசை னிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார். அங்கு அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 23-ந் தேதி சவூதி அரேபியா நாட்டில் உயிரிழந்தார். பக்ரீத் பண்டிகை காரண மாக, சவூதி அரேபியாவில் அரசு விடுமுறை என்பதால் இளங்கோவன்ன் உடலை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல் இருந்தது.

    இந்த நிலையில், இளங்கோவன் உடலை மீட்டு தமிழ்நாட்டிற்கு எடுத்து வரவேண்டும் என அவரது உறவினர்கள், சிறுபான்மை யினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தா னிடம் கோரிக்கை வைத்த னர். இந்த கோரிக்கையை ஏற்று இந்திய தூதரகத்துக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது. இதன் காரணமாக, இளங்கோவனின் உடல் விமானத்தின் மூலம் சென்னை வந்தடைந்து, பின்னர், மங்கலம் பேட்டை யில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில், தமிழ்நாடு சிறுபான்மையி னர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன், ராதாகிருஷ்ணன்எம்.எல்.ஏ. ஆகியோர் மங்கலம் பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    பின்னர், இளங்கோ வனின் இறுதிச் சடங்கிற்காக அமைச்சர்கள் இருவரும் தனித்தனியாக நிதி உதவி வழங்கினர். அப்போது, விருத்தாசலம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் உடனி ருந்தனர். நிதி உதவியை பெற்றுக் கொண்ட இளங்கோவன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். உயிரிழந்த இளங்கோவ னுக்கு கவுரி என்கிற மனை வியும், காயத்ரி (வயது. 21) என்கிற மகளும், ஜீவன்ராஜ் (வயது.12) என்கிற மகனும் உள்ளனர்.

    • மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 302 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் ஈமச்சடங்கு நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது.

    இதில் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 302 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.17 ஆயிரம் வீதம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் ஈமச்சடங்கு நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சென்னை மாநகர காவல் துறை சார்பில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது.
    • மொத்த பணத்தையும் ரமேசின் மகன் திவ்யேசிடம் வழங்கும் நிகழ்ச்சி கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை மாநகர காவல் துறையில் தெற்கு மண்டலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் ஏட்டு ரமேஷ். உடல்நலக்குறைவு காரணமாக இவர் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.

    அவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பே உயரிழந்து விட்ட நிலையில் அவர்களது மகன் திவ்யேஷ், ரமேசின் சகோதரி கஸ்தூரி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அரும்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார்.

    உயிரிழந்த ஏட்டு ரமேசுடன் 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி திரட்டினர். "உதவும் உறவுகள் 99" என்ற வாட்ஸ்அப் குழு மூலம் ரூ.14 லட்சம் வரையில் (ரூ.13 லட்சத்து 93 ஆயிரம்) நிதி திரட்டினர். இந்த மொத்த பணத்தையும் ரமேசின் மகன் திவ்யேசிடம் வழங்கும் நிகழ்ச்சி கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த பணத்தை வழங்கினார். மேலும் சென்னை மாநகர காவல் துறை சார்பில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.15 லட்சத்து 32,300-க்கான காசோலை திவ்யேசிடம் வழங்கப்பட்டது.

    ஏட்டு ரமேசின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்கவும் கமிஷனர் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களின் இந்த உதவும் குணத்தை அனைவரும் பாராட்டினார்கள். 2,727 காவலர்கள் சேர்ந்து இந்த பணத்தை திரட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறையில் அடைக்கப்பட்ட தங்கச்சாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
    • ராஜா எம்.எல்.ஏ., உயிரிழந்த தங்கச்சாமியின் தாயார் கருப்பியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    புளியங்குடி:

    புளியங்குடியில் மது பாட்டில் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்ட தங்கச்சாமி(வயது 26) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கடந்த 4 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா, உயிரிழந்த தங்கச்சாமியின் தாயார் கருப்பி மற்றும் சகோதரர் ஈஸ்வரன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் சட்டப்படி தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது புளியங்குடி நகர தி.மு.க. செயலாளர் அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன், பத்திரம் சாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் சுரேஷ், ஆசை கனி, மாரிசெல்வம், குகன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • தெப்பகுளத்தில் விழுந்து உயிரிழந்த வாலிபர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது
    • அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே திருவரங்குளம் அரங்குளநாதர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தெப்ப திருவிழா நடைபெற்றது. தெப்பத் திருவிழாவின் போது திருக்கட்டளை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த செல்லமுத்து மகன் சுந்தர் என்பவர் எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்தார் இதனை தொடர்ந்து இறந்து போன சுந்தர் இல்லத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார். மேலும் அரசின் மூலம் கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகளை விரைந்து பெற்றுத்தர அவரது பெற்றோரிடம் உறுதியளித்தார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி தெற்கு ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
    • காசோலையினை தமிழக செய்தித்துறை அமைச்சர் இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி சாமுண்டி நகர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த இருதய லட்சுமி என்பவர் மூளைக் காசநோயினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தொடர் சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க சமூக பங்களிப்பு நிதியிலிருந்து நிதி உதவியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கினார்.

    இது குறித்து அமைச்சர் தெரிவித்ததாவது, திருப்பூர் மாநகராட்சி சாமுண்டி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், ராஜேஸ்வரி தம்பதியரின் மகள்இருதய லட்சுமி(வயது 28) மூளைக் காசநோயினால் பாதிக்கப்பட்டு உடல் செயல் இழந்து 8ஆண்டுகளாக பேசவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் இருந்து வந்த நிலையில் அவரின் பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்சங்க சமூக பங்களிப்பு நிதியிலிருந்து நிதி உதவியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலை பெற்றோர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அவரது உடல் நலம் வெகு விரைவில் பூரண குணமடைந்து அவரது லட்சியமான விஞ்ஞானியாக வேண்டும் என்கிற கனவு நிறைவேற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். அப்போது மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ், துணை மேயர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் மற்றும் சங்கத்தலைவர்சுப்பிரமணியன், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    ×