என் மலர்
உள்ளூர் செய்திகள்

7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் நிதி உதவி
- மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 302 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் ஈமச்சடங்கு நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது.
இதில் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 302 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.17 ஆயிரம் வீதம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் ஈமச்சடங்கு நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






