search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருளர் இன மக்களுக்கு நிதி உதவி
    X

    இருளர் இன மக்களுக்கு நிதி உதவி

    • கலெக்டர் வழங்கினார்
    • மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டைமாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட் டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற் றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, வேலைவாய்ப்பு, கடன்உதவி, இலவச வீடுகள், குடிநீர் வசதி வேண்டி மனு கொடுத்தனர். மொத்தம் 283 மனுக்களை பொது மக்களி டம் இருந்து பெற்று, சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களி டம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற் கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவ டிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும், கலெக்டர் தனது விருப்ப நிதியில் இருந்து இருளர் இன மக்கள் 12 நபர்க ளுக்கு நலிந்தோர் நிதியுதவி, குடிசை வீடு மாற்று நிதியுதவி, சுய தொழில் நிதியுதவி, திரு நங்கை சுயதொழில் நிதியுதவி என ரூ.64 ஆயிரம் வழங்கி னார்.

    கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) முரளி, சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் ஸ்ரீ வள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், நேர்முக உதவி யாளர் (நிலம்) கலைவாணி, கலால் உதவி ஆணையாளர் வரதராஜ். மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் சரவணகு மார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×