என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாளை சிறையில் இறந்த வாலிபர் குடும்பத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. நிதி உதவி
- சிறையில் அடைக்கப்பட்ட தங்கச்சாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
- ராஜா எம்.எல்.ஏ., உயிரிழந்த தங்கச்சாமியின் தாயார் கருப்பியை சந்தித்து ஆறுதல் கூறினார்.
புளியங்குடி:
புளியங்குடியில் மது பாட்டில் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்ட தங்கச்சாமி(வயது 26) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கடந்த 4 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா, உயிரிழந்த தங்கச்சாமியின் தாயார் கருப்பி மற்றும் சகோதரர் ஈஸ்வரன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் சட்டப்படி தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது புளியங்குடி நகர தி.மு.க. செயலாளர் அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன், பத்திரம் சாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் சுரேஷ், ஆசை கனி, மாரிசெல்வம், குகன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்