search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள்"

    • தற்போது பண்டிகைக்கு ஒருவாரம் முன்னதாக மட்டுமே போனஸ் வழங்கப்படுகிறது.
    • நவம்பர் முதல் வாரத்தில் இருந்து போனஸ் பட்டுவாடாவை துவக்க திட்டமிட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழில் பிரதானமாக உள்ளது. பாத்திர உற்பத்தி, விசைத்தறி, கோழிப்பண்ணை, அரிசி உற்பத்தி, எண்ணெய் மில்கள், விவசாயம் உள்ளிட்ட தொழில்களும் அதிக அளவில் நடக்கிறது.

    தீபாவளி என்றாலே திருப்பூர் பின்னலாடை தொழிலாளருக்கு போனஸ் கிடைக்கும் என்பது மகிழ்ச்சி. கடந்த காலங்களில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் நாளிலேயே போனஸ் பட்டுவாடா துவங்கிவிடும்.

    தற்போது பண்டிகைக்கு ஒருவாரம் முன்னதாக மட்டுமே போனஸ் வழங்கப்படுகிறது. தொழிற்சங்க கூட்டு கமிட்டி, தொழிலாளருக்கு விரைவான போனஸ் வழங்க வேண்டு மென தெருமுனை பிரசாரம் நடத்த துவங்கிவிட்டன.விலைவாசி உயர்வால், தொழிலாளர்கள் நெருக்கடியை சந்தித்து வருவதால் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உட்பட, தொழில் அமைப்புகளுக்கு, கூட்டுக்கமிட்டி, போனஸ் நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.

    ஒவ்வொரு தொழிலாளரும் ஜவுளி, பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், மொபைல்போன் என ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய போனஸ் கைக்கு வர வேண்டும் என காத்திருக்கின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் இருந்து போனஸ் பட்டுவாடாவை துவக்க திட்டமிட்டுள்ளனர்.திருப்பூர் நகரப்பகுதியில் இயங்கும், முன்னணி பர்னிச்சர் கடைகள், ஜவுளிக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகள், மொபைல் போன் ேஷாரூம்கள், சரஸ்வதி பூஜைக்கு முன்னதாகவே, அதிரடி சலுகை அறிவிப்புகளுடன், தீபாவளி விற்பனையை தொடங்கி உள்ளன.

    • மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை புதூரில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. திட்ட தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார்.

    சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் தெய்வராஜ், அரவிந்தன் மற்றும் முத்துலட்சுமணன், செல்வராஜ், அறிவழகன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணை தலைவர் குருவேல் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    மின்வாரியத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக இ-டெண்டர் முறையில் பணியாளர்கள் நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியை நேரடியாக வழங்க வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மேலசங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் அறிவிப்பு
    • கட்டுமான பொருட்கள் விலை உயர்வு

    ராஜாக்கமங்கலம் :

    குமரி மாவட்டம் மேல சங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்துசரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் கட்டுமான பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சிமெண்ட் ஒரு மூடைக்கு சுமார் 100 ரூபாய் வரை அதிக ரித்துள்ளது. கம்பி விலை யும் கணிசமாக மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

    இயற்கையிலிருந்து எடுக் கப்படும் கல்லை உடைத்து கொண்டு வரும் எம்.சாண்டுக்கு அரசாங்கம் ஒரு யூனிட்டுக்கு ரூ.1000 என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சந்தையில் அது ரூ.8 ஆயி ரத்துக்கு விற்கப்படு கிறது. இவ்வாறு கட்டுமான பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளதால் கட்டிடம் கட்டுபவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு ஏழை தொழிலாளர்கள் வேலையின்றி பரிதவித்து வருகின்றனர்.

    இதனால் வீடு கட்டுவது மட்டுமல்லாமல் பல ஏழை மக்கள் தங்கள் குழந்தை களின் திருமணம், படிப்பு, மருத்துவ சேவை போன்ற அத்தியாவசிய பணியை கூட செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

    கடந்த 2 வருடங்களாக குமரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் தென்னை மரங்கள் ஏராள மாக பட்டுப்போய் உள்ளது. இதனால் தென்னை விவசா யிகள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க தமிழக அரசினை கோரியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இதனால் அரசை கண்டித்து நவம்பர் 7-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவ லகம் முன்பு பொதுமக்களை திரட்டி போராட்டம் நட த் தப்படும்.

    போராட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் ( நான்) தலைமை தாங்குகிறேன். துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகிக்கிறார். எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., போராட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பின்னலாடைத் தொழிலாளா்களின் போனஸ் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டன.
    • அந்தந்த நிறுவன உரிமையாளா்கள் தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிஐடியூ., பனியன் தொழிற்சங்க அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சிஐடியூ., பனியன் சங்க பொதுச் செயலாளா் ஜி.சம்பத் தலைமை வகித்தாா்.கூட்டத்தில், திருப்பூா் பின்னலாடைத் தொழிலாளா்களின் போனஸ் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டன.

    அதில், தற்போது கடுமையாக உயா்ந்து இருக்கும் விலைவாசி உயா்வுக்கு ஏற்ப அனைத்து தொழிலாளா்களுக்கும் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் தொகையை அந்தந்த நிறுவன உரிமையாளா்கள் தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும். தொழிலாளா்களின் போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபா் 17-ந்தேதி முதல் 26 -ந்தேதி வரை திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில், ஏஐடியூசி பனியன் சங்க பொதுச் செயலாளா் என்.சேகா், எல்.பி.எப். பனியன் சங்கத் தலைவா் ஜி.பாலசுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி. செயலாளா் அ.சிவசாமி, எம்.எல்.எஃப். பனியன் சங்க செயலாளா் மனோகரன், எச்.எம்.எஸ். செயலாளா் ஆா்.முத்துசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். 

    • 100 நாள் வேலையை 200 நாளாக அதிகரித்து தினம் ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும்.
    • பல தொழிலாளர்கள் சரியாக வேலை பார்க்காமல் உள்ள தாக கூறுவது முற்றிலும் பொய்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது சங்கத்தின் மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் இப்போது ஆண்டுக்கு 100 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்ப டுகிறது.

    இதனை 200 நாட்க ளாக மாற்றி தினந்தோறும் ஊதியமாக ரூ.600 வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்கு தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தமிழகத்தில் பல இடங்களில் சராசரியாக 40 முதல் 42 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.

    அதிலும் 1 கோடியே 31 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 80 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.

    இதனை முறைப்படுத்தி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ஊதிய த்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

    இந்த வேலை திட்டத்தில் பல தொழிலாளர்கள் சரியாக வேலை பார்க்காமல் உள்ள தாக கூறுவது முற்றிலும் பொய்.

    அவர்கள் தினமும் பார்க்கும் வேலையை சரியாக அளவீடு செய்து அதன் அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் தினமும் மொபைல் மூலம் வருகை பதிவு செய்ய வேண்டும் என்பதை கைவிட வேண்டும்.

    மேலும் பல இடங்களில் குறிபிட்ட தேதியில் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இந்த குறைபாட்டை களைந்து சரியான தேதியில் ஊதியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநில பொருளாளர் சந்திரகுமார், சங்கத்தின் மாநில துணை தலைவர் மாரிமுத்து எம்.எல்.ஏ, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்துஉத்ராபதி, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் மகேந்திரன், பழனிச்சாமி ,தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராமமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க சார்பில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
    • 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலர் பேபியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு 11 வாரங்கள் வழங்கப்படாமல் உள்ள கூலியை உடனே வழங்க வேண்டும்.

    100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    சில ஊராட்சிகளில் வாரம் விட்டு வாரம் வேலை வழங்குவதை நிறுத்திவிட்டு, முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதில் மாவட்டத் தலைவர் நாகராஜ், மாநில குழு உறுப்பினர் செல்வம், விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டதா என ஆய்வு நடை பெற்றது.
    • 131 நிறுவனங்களில் தொழிலாளா் துணை ஆய்வா்கள், உதவி ஆய்வா்கள் ஆய்வு செய்தனா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கமலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, தொழிலாளா்களின் சம்மதத்துடன் இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என கடைகள், நிறுவன ங்கள், உணவு நிறுவ னங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 131 நிறுவ னங்களில் தொழிலாளா் துணை ஆய்வா்கள், உதவி ஆய்வா்கள் ஆய்வு செய்தனா்.

    இதில், சட்ட விதிகளி ன்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 68 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 44 முரண்பாடுகளும், மோட்டாா் நிறுவன ங்களில் 6 முரண்பாடுகளும் என மொத்தம் 118 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மே ற்கொள்ள ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு சில தொழிலாளர்கள் கடை பின்பு தூங்கிக் கொண்டிருந்தனர்.
    • காலை நேரத்தில் விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஒழுங்கினசேரி பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை முன்பு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று இரவு படுத்து தூங்கினார்கள். இன்று காலையில் கண்விழித்து ஒரு சில தொழிலாளர்கள் டீ குடிக்க சென்றனர். ஒரு சில தொழிலாளர்கள் கடை பின்பு தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது கேரளாவில் இருந்து அப்டா மார்க்கெட் நோக்கி வந்த டெம்போ ஒன்று, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது. அப்போது கடையின் முன்பு படுத்திருந்த தொழிலாளர்கள் அலறி அடித்தபடி ஓடினார்கள். இதில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார்.

    படுகாயம் அடைந்த அவரைமீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் படுகா யம் அடைந்தவர் மதுரை சேர்ந்த கண்ணன் என்பது தெரிய வந்துள்ளது. விபத்தில் சிக்கிய டெம்போ நாகர்கோவில் பகுதியில் உள்ள பன்றிபண்ணைக்கு கேரளாவில் இருந்து தீவனத்தை கொண்டு வந்த போது பிரேக் பிடிக்காததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது தெரிய வந்துள்ளது.

    காலை நேரத்தில் விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதிகாலை நேரத்தில் நடந்திருந்தால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். விபத்தில் சிக்கிய டெம்போவை போக்குவரத்து போலீசார் கடைக்குள் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் அங்கீகாரம் கொடுத்து அமைப்பு சாரா பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
    • சங்க கட்டிட திறப்பு விழாவில் தொழிலாளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் சங்க அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன் பிறந்த நாள் விழா மற்றும் சங்கத்துக்காக சொந்தமாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி டாக்டர் வி.என்.கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை சொந்தமாக நிலம் வாங்குவதற்கும், விற்பதற்கும் பாலமாக இருந்து செயல்படுபவர்கள். கூலி நிலத்தரகர் தொழிலாளர்கள் அவர்களுக்கு கமிஷன் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    ரியல் எஸ்டேட் தொழிலாளால் அரசுக்கும் வருமானம் வருகிறது. வேறு தொழிலாளர்கள் அமைப்பிற்கு அரசு அங்கீகாரம் கொடுத்து உள்ளது. அதுபோல் ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் அங்கீகாரம் கொடுத்து அமைப்பு சாரா பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

    தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பல நல்ல திட்டங்களை செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளம் கொண்டு கூலி நிலத்தரகர்கள் தொழிலுக்கு அங்கீகாரம் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நாளை மறுநாள் நடைபெறும் சங்க கட்டிட திறப்பு விழாவில் தொழிலாளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    • சுதந்திர தின‌நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.
    • மொத்தம் 121 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தொழிலாளா் துறையின் தஞ்சாவூா் உதவி ஆணையா் (சட்ட அமலாக்கம்) கமலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூா், கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவ னங்களில், தொழிலாளா் துணை ஆய்வா்கள், தொழிலாளா் உதவி ஆய்வா்கள் தேசிய விடுமுறை நாளான சுதந்திர தினநாளன்று (ஆகஸ்ட்15) தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, அவா்களுடைய சம்மதத்துடன் இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என 133 நிறுவனங்களில் ஆய்வு செய்தனா்.

    இதில், சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 69 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 43 முரண்பாடுகளும், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் 9 முரண்பாடுகளும் என மொத்தம் 121 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    • உப்பள தொழிலாளர்கள் இரவு, பகலாக முழுவீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது.

    தற்போது, கடந்த ஒரு வாரமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுமார் ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் இரவு, பகலாக முழுவீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பை சேமித்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக லாரிகள் மூலம் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள உப்பை தார்ப்பாய் கொண்டு மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

    • கட்டிடத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சையது அமீர்ஜான் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டி உள்ளார்.
    • கட்டிடத்தை நகர்த்த 12 தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக ஜாக்கிகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள அந்தேதேவனப்பள்ளி கிராமத்தில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

    சாலை விரிவாக்கம் செய்யப்படுவதால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதியில் அளவீடுகள் மேற்கொண்டு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், கடைகள் மற்றும் வீடுகளை அதன் உரிமையாளர்கள் தாமாக அகற்றி கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.

    இதனையடுத்து அந்த கிராமத்தில் சாலையோரம் இருந்த கடைகள் கட்டிடங்கள் வீடுகள் ஆகியவை உரிமையாளர்கள் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையது அமீர்ஜான் (வயது52). இவர் அந்த கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். சாலையோரத்தில் இவருக்கு சொந்தமான ஒரு கட்டிடம் உள்ளது.

    இந்த கட்டிடத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சையது அமீர்ஜான் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டி உள்ளார். கீழ்த்தளம் மற்றும் இரண்டு மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் மொத்தம் 6 கடைகள் 2 வீடுகள் உள்ளது.

    800 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் முக்கால் பாகம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடமாகும், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினர் அவருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க மனம் இல்லாமல் அவர் இருந்துள்ளார்.

    இதனையடுத்து சையத் அமீர்ஜான் தனது நண்பர்கள் மூலம் கட்டடத்தை ஜாக்கிகள் மூலம் நகர்த்தும் தொழில்நுட்பத்தை அறிந்து தனது கட்டிடத்தையும் அந்த கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள தனக்கு சொந்தமான இடத்திற்கு நகர்த்த திட்டமிட்டார்.

    இதற்காக அரியானா மாநிலத்தை சேர்ந்த கட்டிடம் நகர்த்தும் ஒரு குழுவிடம் அவர் ஆன்லைன் மூலம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளார். கட்டிடத்தை நகர்த்துவதற்கு அந்த குழுவுக்கு 6 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளார்.

    கட்டிடத்தை நகர்த்த 12 தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக ஜாக்கிகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 300 முதல் 350 டன் எடையுள்ள இந்த கட்டிடத்தை இன்னும் ஒரு மாதத்தில் கட்டிடத்தின் பின்புறம் உள்ள இடத்திற்கு 25 அடி தூரம் நகர்த்த குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக கட்டிடத்தின் அடிப்பாகத்தில் துளையிட்டு 300 ஜாக்கிகளை அமைக்கும் பணிகளை தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். கட்டிடத்தை நகர்த்தி வைக்க கட்டிடத்தின் பின்புறம் 1500 சதுர அடி நிலத்தில் சிமெண்ட் கான்கிரீட் அடித்தளம் போடப்பட்டு தயாராக உள்ளது. இந்த பணிகளுக்காக அமீர்ஜான் நெடுஞ்சாலைத்துறையினரிடம் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டுள்ளார்.

    ×