search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்
    X

    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்

    மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்

    • மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை புதூரில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. திட்ட தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார்.

    சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் தெய்வராஜ், அரவிந்தன் மற்றும் முத்துலட்சுமணன், செல்வராஜ், அறிவழகன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணை தலைவர் குருவேல் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    மின்வாரியத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக இ-டெண்டர் முறையில் பணியாளர்கள் நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியை நேரடியாக வழங்க வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×