search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலத்தரகர்"

    • ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் அங்கீகாரம் கொடுத்து அமைப்பு சாரா பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
    • சங்க கட்டிட திறப்பு விழாவில் தொழிலாளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் சங்க அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன் பிறந்த நாள் விழா மற்றும் சங்கத்துக்காக சொந்தமாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி டாக்டர் வி.என்.கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை சொந்தமாக நிலம் வாங்குவதற்கும், விற்பதற்கும் பாலமாக இருந்து செயல்படுபவர்கள். கூலி நிலத்தரகர் தொழிலாளர்கள் அவர்களுக்கு கமிஷன் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    ரியல் எஸ்டேட் தொழிலாளால் அரசுக்கும் வருமானம் வருகிறது. வேறு தொழிலாளர்கள் அமைப்பிற்கு அரசு அங்கீகாரம் கொடுத்து உள்ளது. அதுபோல் ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் அங்கீகாரம் கொடுத்து அமைப்பு சாரா பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

    தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பல நல்ல திட்டங்களை செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளம் கொண்டு கூலி நிலத்தரகர்கள் தொழிலுக்கு அங்கீகாரம் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நாளை மறுநாள் நடைபெறும் சங்க கட்டிட திறப்பு விழாவில் தொழிலாளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×