என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பர்னிச்சர் கடை"
- ஒரு சில தொழிலாளர்கள் கடை பின்பு தூங்கிக் கொண்டிருந்தனர்.
- காலை நேரத்தில் விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஒழுங்கினசேரி பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை முன்பு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று இரவு படுத்து தூங்கினார்கள். இன்று காலையில் கண்விழித்து ஒரு சில தொழிலாளர்கள் டீ குடிக்க சென்றனர். ஒரு சில தொழிலாளர்கள் கடை பின்பு தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது கேரளாவில் இருந்து அப்டா மார்க்கெட் நோக்கி வந்த டெம்போ ஒன்று, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது. அப்போது கடையின் முன்பு படுத்திருந்த தொழிலாளர்கள் அலறி அடித்தபடி ஓடினார்கள். இதில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார்.
படுகாயம் அடைந்த அவரைமீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் படுகா யம் அடைந்தவர் மதுரை சேர்ந்த கண்ணன் என்பது தெரிய வந்துள்ளது. விபத்தில் சிக்கிய டெம்போ நாகர்கோவில் பகுதியில் உள்ள பன்றிபண்ணைக்கு கேரளாவில் இருந்து தீவனத்தை கொண்டு வந்த போது பிரேக் பிடிக்காததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது தெரிய வந்துள்ளது.
காலை நேரத்தில் விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதிகாலை நேரத்தில் நடந்திருந்தால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். விபத்தில் சிக்கிய டெம்போவை போக்குவரத்து போலீசார் கடைக்குள் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பீரோவில் வைத்திருந்த 14.3/4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் திருட்டு போனது.
- வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் :
முத்தூர் சின்னமுத்தூர் ரோட்டில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது69). பர்னிச்சர் கடை வைத்துள்ளார். இவரும் அவரது மனைவி விஜயலெட்சுமி நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலாயுதம்பாளையத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டு பிறகு மாலை வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 14.3/4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 2 லட்சத்து 22 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்