search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தூர்"

    • முத்தூர் - கொடுமுடி சாலை சிவகங்கா திருமண மண்டபத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனுநீதி நாள் முகாம் முத்தூர் - கொடுமுடி சாலை சிவகங்கா திருமண மண்டபத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முகாமிற்கு கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்குகிறார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, பஸ் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.

    மேலும் முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வருவாய் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சூதாட பயன்படுத்திய சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ .52 ஆயிரத்து100 ஐ கைப்பற்றினர்.
    • வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

      வெள்ளகோவில்  : 

    திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே உள்ள மேட்டுக்கடை டாஸ்மாக் அருகே காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது காசு வைத்து சூதாடி கொண்டிருந்த ஆறுமுகம் (வயது 56), ராமசாமி (59), பாலகிருஷ்ணன் (61), சதீஷ்குமார்(34), மணிகண்டன் (44), சரவணன் (45),சிவக்குமார் (46), காங்குசாமி (67), வேலுசாமி ,மற்றொரு மணிகண்டன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்திய சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ .52 ஆயிரத்து100 ஐ கைப்பற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 20 ஆண்டுகளுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் கந்தசாமி.
    • மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், முத்தூர், முத்துமங்கலம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் கந்தசாமி (வயது57) . இவர் வழக்கம் போல் நேற்று 16ந் தேதி தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று சனிக்கிழமை காலை வந்து பார்க்கும்போது கடையின் மேல் உள்ள சிமெண்ட் சீட்டை பிரித்து உள்ளே இறங்கி கடையில் இருந்த ரொக்கம் ரூ. 5 ஆயிரம் மற்றும் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது முத்தூர் -வெள்ளகோவில்-காங்கயம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் காவல்துறையினர் ரோந்து பணி மற்றும் வாகனத் தணிக்கையை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பீரோவில் வைத்திருந்த 14.3/4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் திருட்டு போனது.
    • வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    முத்தூர் சின்னமுத்தூர் ரோட்டில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது69). பர்னிச்சர் கடை வைத்துள்ளார். இவரும் அவரது மனைவி விஜயலெட்சுமி நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலாயுதம்பாளையத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டு பிறகு மாலை வீட்டிற்கு வந்துள்ளனர்.

    அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 14.3/4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 2 லட்சத்து 22 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வெள்ளக்கோவில் சாலையிலுள்ள ஓடைப்பாலம் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.
    • பொதுமக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    வெள்ளகோவில் :

    முத்தூா்- வெள்ளக்கோவில் சாலையிலுள்ள நம்பகவுண்டன்பாளையம் கரையூரைச் சோ்ந்தவா் கிரி (வயது 40). இவா் முத்தூரிலுள்ள ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் மேஸ்திரியாக வேலை செய்து வந்தாா்.

    இந்நிலையில், வெள்ளக்கோவில் சாலையிலுள்ள ஓடைப்பாலம் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.அப்போது, முத்தூா் நோக்கி வந்த காா் கிரி மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.உயிரிழந்த கிரிக்கு மனைவி சுவேதா, குழந்தைகள் முகிலன் (10), அகிலன் (7) ஆகியோா் உள்ளனா்

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும்.
    • முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

    வெள்ளகோவில் :

    தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வு மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கொரோனா வைரஸ் பரவுதல் தடுக்கும் பொருட்டு 34-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதன்படி முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முத்தூர் அரசு மருத்துவமனை வளாகம், மேட்டாங்காட்டுவலசு, மேட்டுப்பாளையம், ஊடையம், வீரசோழபுரம் ஆகிய துணை சுகாதார நிலையங்கள், முத்தூர் கடைவீதி, வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது.

    இம்முகாமில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், பணியாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் கலந்து கொண்டு அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 12 வயதுக்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசியை இலவசமாக போடுகின்றனர்.

    • கடந்த 10 ஆண்டுகளாக லெட்சுமணன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
    • மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்தார்.

    வெள்ளகோவில் :

    முத்தூர் அருகே உள்ள முத்துக்கமங்கலத்தில் வசிப்பவர் லெட்சுமணன் வயது (38,)இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு முத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில் நேற்று பகல் 1 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத போது லட்சுமணன் வீட்டின் விட்டத்தில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன லெட்சுமணனுக்கு புதன்செல்வி (33) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    • வெள்ளகோவில் போலீஸ் சம்பாம்பாளையத்தில் கண்காணித்தனர்.
    • தோட்டத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், முத்தூர் அருகே உள்ள சம்பாம்பாளையம் என்ற கிராமத்தில் பணம் வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய போலீஸ் தனிப்படையினர் முத்தூர் அருகே உள்ள சம்பாம்பாளையத்தில் கண்காணித்த போது ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1,43,700 பணத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அவசர கால மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார நிறுத்தம் செய்யப்படும்.

    காங்கயம் :

    காங்கயம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அவசர கால மின் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை காங்கயம் நகரம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம் உட்பட சுற்றுவட்டார பகுதிகள்.

    சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், படியூர், மொட்டரபாளையம், ராசாப்பாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர் வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசி பாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டு தோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம், ஆலாம்பாடி, நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்தி ரெட்டிபாளையம் நெய்க்காரன் பாளையம், கல்லேரி.

    முத்தூர் கடைவீதி, காங்கயம் சாலை, ஈரோடு சாலை, வெள்ளகோவில் சாலை, கொடுமுடி சாலை, ஈரோடு சாலை, நத்தக்காடையூர் சாலை, வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலாம்பாளையம், சக்கரபாளையம், புதுப்பாளையம், செங்கோடம்பாளையம், வேலாயுதம்பாளையம், மேட்டுக்கடை, கரட்டுப்பாளையம், மலையத்தாபாளையம், வேலம்பாளையம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் கூறி இருப்பதாவது:-

    தாராபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார்டேம், பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • 8 சேவல்களை வைத்து சூதாடி கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ. 560 கைப்பற்றினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையத்தில் சேவல் சண்டை நடப்பதாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது 8 சேவல்களை வைத்து சூதாடி கொண்டிருந்த சேலம் பகுதியைச் சேர்ந்த விமல் ( வயது 27), ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் (23) ,கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த கிஷோர் குமார் (23) , கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியை சேர்ந்த முகமது இம்ரான் கான் (32) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ. 560 கைப்பற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிவராஜ்க்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
    • வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    முத்தூர் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் . இவர் முத்தூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 35). இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சிவராஜ்க்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் செல்வி மனமுடைந்து இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளகோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 15 ஆயிரத்து 908 தேங்காய்களும் கொண்டு வரப்பட்டு டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.
    • கடந்த 14 வார காலமாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 17 சிவப்பு ரகம் அடங்கிய எள் மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் டெண்டர் முறையில் நடைபெற்ற ஏலத்தில் சிவப்பு ரக எள் அதிகபட்சமாக ரூ.115.09-க்கும், குறைந்தபட்சமாக ரூ.92.94-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 15 ஆயி–ரத்து 908 தேங்காய்களும் கொண்டு வரப்பட்டு டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. இதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.26.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.15-க்கும் ஏலம் விடப்பட்டது. மேலும் 44 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.85.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.57.70-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.

    மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 9 சிவப்பு ரக எள் மூட்டைகள் குறைவாகவும், 5 ஆயிரத்து 365 தேங்காய்கள் கூடுதலாகவும், 22 தேங்காய் பருப்பு மூட்டைகள் குறைவாகவும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் எள் ஒரு கிலோவிற்கு ரூ.11.80-ம், தேங்காய் 1 கிலோவிற்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் 35 பைசாவும், தேங்காய் பருப்பு 1 கிலோவிற்கு ரூ.1.39-ம் கூடுதலாகவே விவசாயிகளுக்கு கிடைத்தது. மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ.90-ஐ தாண்டி ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் கடந்த 14 வார காலமாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் மூட்டைகள் 9¼ டன் அளவில் மொத்தம் ரூ‌.3 லட்சத்து 65 ஆயிரத்து 426-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.இந்த தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்தார்.

    ×