search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம், சிவன்மலை, முத்தூர் பகுதியில்  நாளை மின்தடை
    X

    கோப்புபடம்.

    காங்கயம், சிவன்மலை, முத்தூர் பகுதியில் நாளை மின்தடை

    • அவசர கால மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார நிறுத்தம் செய்யப்படும்.

    காங்கயம் :

    காங்கயம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அவசர கால மின் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை காங்கயம் நகரம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம் உட்பட சுற்றுவட்டார பகுதிகள்.

    சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், படியூர், மொட்டரபாளையம், ராசாப்பாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர் வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசி பாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டு தோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம், ஆலாம்பாடி, நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்தி ரெட்டிபாளையம் நெய்க்காரன் பாளையம், கல்லேரி.

    முத்தூர் கடைவீதி, காங்கயம் சாலை, ஈரோடு சாலை, வெள்ளகோவில் சாலை, கொடுமுடி சாலை, ஈரோடு சாலை, நத்தக்காடையூர் சாலை, வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலாம்பாளையம், சக்கரபாளையம், புதுப்பாளையம், செங்கோடம்பாளையம், வேலாயுதம்பாளையம், மேட்டுக்கடை, கரட்டுப்பாளையம், மலையத்தாபாளையம், வேலம்பாளையம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் கூறி இருப்பதாவது:-

    தாராபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார்டேம், பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×