முத்தூரில் காா் மோதி கட்டிட மேஸ்திரி பலி

வெள்ளக்கோவில் சாலையிலுள்ள ஓடைப்பாலம் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.பொதுமக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வெள்ளகோவில் :

முத்தூா்- வெள்ளக்கோவில் சாலையிலுள்ள நம்பகவுண்டன்பாளையம் கரையூரைச் சோ்ந்தவா் கிரி (வயது 40). இவா் முத்தூரிலுள்ள ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் மேஸ்திரியாக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், வெள்ளக்கோவில் சாலையிலுள்ள ஓடைப்பாலம் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.அப்போது, முத்தூா் நோக்கி வந்த காா் கிரி மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.உயிரிழந்த கிரிக்கு மனைவி சுவேதா, குழந்தைகள் முகிலன் (10), அகிலன் (7) ஆகியோா் உள்ளனா்

X

Maalai Malar
www.maalaimalar.com