search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்சாலை"

    • காற்றாலை மற்றும் சோலார் எரிசக்தி உற்பத்தி செய்து தங்கள் நிறுவனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
    • சர்வதேச சந்தைகளில் 'வளம் குன்றா வளர்ச்சி என்ற அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமையும், கவுரமும் கிடைக்கிறது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கடந்த 2009-11 காலங்களில் ஏற்பட்ட மின்தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. காற்றாலை மற்றும் சோலார் எரிசக்தி உற்பத்தி செய்து தங்கள் நிறுவனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

    மத்திய, மாநில அரசுகளும் மின்சாரத்தை மட்டுமே சார்ந்து இயங்காமல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு மாற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. திருப்பூர் பனியன் தொழிலை பொறுத்தவரை, ஒட்டுமொத்த மின்தேவைக்கு அதிகமாகவே காற்றாலை மற்றும் சோலார் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

    சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மறுசுழற்சி தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. சர்வதேச சந்தைகளில் 'வளம் குன்றா வளர்ச்சி என்ற அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமையும், கவுரமும் கிடைக்கிறது.

    தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளும், காற்றாலை மற்றும் சூரியஒளி மின் உற்பத்தி செய்து, தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. இதனால், மின் கட்டண உயர்வு அவர்களை பாதிப்பதில்லை. மின்சார பயன்பாட்டுக்கான நிலை கட்டணத்தில் மட்டும் சலுகையை எதிர்பார்க்கி ன்றனர்.

    கோவையில் நடந்த தமிழக அரசின் தொழில்நுட்ப குழு கூட்டத்தில் புதுப்பித்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, பசுமை சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். அதனால் சர்வதேச சந்தைகளில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு உயரும் என்று தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர் சங்க (டாஸ்மா) தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:-

    தமிழகத்தில் காற்றாலை மற்றும் சோலார் கட்டமைப்பு வாயிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், நூற்பாலைகளின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு உள்ளது. காற்றாலையில் மட்டும் 3,500 மெகாவாட் கொள்திறன் அளவுக்கு மின்சாரம் உற்பத்தியாகிறது. இதேபோல் சோலார் மூலமாகவும், அதிக அளவு மின்சாரம் உற்பத்தியாகிறது.

    வெளிநாட்டு சந்தைகளில் பசுமை சான்றிதழ் பெற்ற நிறுவனங்களுக்கு அதிக முன்னுரிமையும், வர்த்தக வாய்ப்புகளும் கிடைக்கிறது. தமிழக அரசு காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, பசுமை சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

    கட்டண அடிப்படையில் வழங்கினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என தொழில்நுட்ப குழு கூட்டத்தில் வலியுறுத்தினோம். கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் காந்தி மற்றும் அரசு செயலர்கள் விரிவான அறிக்கையாக வழங்கினால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

    சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி செய்து வரும் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் பசுமை சான்று வழங்குவது மிகுந்த பயனளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • தீக்காயங்களுடன் ஐந்து பேர் மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏறு்பட்டது. அம்பர்நாத் எம்ஐடிசியில் உள்ள தொழிற்சாலையில் நைட்ரிக் ஆசிட் டேங்க் அருகே மாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக குடிமை அதிகாரி தெரிவித்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து அம்பர்நாத், ஆனந்த் நகர் மற்றும் உல்லாஸ் நகரில் இருந்து தலா இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர் சூர்யகாந்த் ஜிமாட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தீக்காயங்களுடன் ஐந்து பேர் மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தானே குடிமை அமைப்பின் பேரிடர் கட்டுப்பாட்டு பிரிவு தலைவர் யாசின் தத்வி கூறினார்.

    மேலும், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அச்சன்புதூர் செவகாட்டு பகுதியில் செய்யது முகமதுவின் தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது.
    • நேற்று இரவு திடீரென தேங்காய் நார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் செவகாட்டு பகுதியில் அச்சன்புதூரை சேர்ந்த செய்யது முகமது என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற் சாலை உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தேங்காய் வாங்கி அதன் கூந்தல் நார்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென தேங்காய் நார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு கடையநல்லூர், செங்கோட்டை, சுரண்டை ஆகிய பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க உதவினர். தேங்காய் நார் தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்கள், தேங்காய் நார் தும்பைகள் அனைத்தும் சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் ஆகும் என கூறப்படுகிறது. 

    • தொழிற்சாலை சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தொழிற்சாலை சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி தமிழ் மாநில குழு சார்பில் இன்று காலை தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம், அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநிலச் செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார்.

    தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தினை தொடக்கி வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்ப ட்டன. முடிவில் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் சேவையா ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து பேசினார்.

    இதில் மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், விவசாய தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர் மணிமூர்த்தி, மின்வாரிய சம்மேளன மாநிலத் துணைத் தலைவர் பொன்.தங்கவேல், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாத்துரை, கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் தாமரைச் செல்வன், கட்டுமான சங்க மாவட்ட துணைத்தலைவர் செல்வம், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் செந்தில்நா தன், உடலுழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் சுதா, உழைக்கும் பெண்கள் அமைப்பு செயலாளர் பரிமளா, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், நுகர்பொருள் வாணிபக்கழக சங்க மாவட்ட பொருளாளர் தியாகராஜன், தஞ்சை நகர தொழிற்சங்க தலைவர் பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பேராவூரணியில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
    • சத்துணவு திட்டத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சங்கத் தலைவர் காந்தி தலைமை வகித்தார்.

    கௌரவ தலைவர் வேலுச்சாமி, துணை தலைவர் கோவிந்தசாமி, பொருளாளர் பன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் ராம்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 25க்கு விற்ற தேங்காய் தற்போது ரூபாய் பத்துக்கு கீழ் விற்கப்படுகிறது.

    உற்பத்தி செலவுக்கு கூட கட்டுபடி ஆகாத விலையில் தேங்காய் விற்பதால், விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பொதுமக்கள் அனைவரும் சமையல் உள்ளிட்ட அனைத்து தேவைக்கும் தேங்காய் எண்ணையை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    பேராவூரணி தொகுதி சென்னைக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தும், புவிசார் குறியீடு பெறுவதற்கு ஆதாரங்களை திரட்டி தருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    சத்துணவு திட்டத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். அனைத்து அங்காடிகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்னை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், நாம் உழவர் இயக்க தலைவர் பிரபு ராஜா, மதுரை வேளாண் கல்லூரி முன்னாள் முதல்வர் வைரவன், தென்னை உற்பத்தியாளர் சங்க மாநிலச் செயலாளர் அறந்தாங்கி செல்லத்துரை, வடகாடு மிளகு உற்பத்தி அறிமுக விவசாயி பாலுச்சாமி, கீரமங்கலம் நக்கீரர் தென்னை மைய நிறுவனர் காமராசு, திருச்சி வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் இலக்குவணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    முடிவில் இணைச் செயலாளர் முகமது சமீர் நன்றி கூறினார்.

    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. முயற்சியால் ராஜபாளையத்தில் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.
    • ராஜபாளையம் தொகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியடைவார்கள்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. ராஜபாளையம் தொகுதியில் விவசாயிகளின் 50 வருட கோரிக்கையான மாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மாழ்பழக்கூழ் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் மற்றும் சிறு-குறு நடுத்தர தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை விடுத்திருந்தேன்.

    இதையடுத்து முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் அன்பரசனால் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் சின்மயா பள்ளி செல்லும் சாலையில் தென்காசி மெயின்ரோட்டில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் புதிய தொழிற்பேட்டை அமைய உள்ளது என்ற அறிவிப்பு சட்டபேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதை ராஜபாளையம் தொகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜபா ளையம் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற காரணமாக இருந்து தொடர்ந்து வலியுறுத்திய வருவாய்த்துறை அமைச்சர் , தொழில்துறை அமைச்ச ருக்கு எனது சார்பிலும், விவசாயிகளின் சார்பிலும் ராஜபாளையம் தொகுதி பொதுமக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் அன்பரசன், அந்த துறையின் நிர்வாக இயக்குநர் மதுமதி ஆகியோரை ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டலூர் அடுத்த பெரியபட்டில் தனியார் எண்ணெய் சுத்திகரிக்கும் தொழிற்சாலை உள்ளது‌.
    • இந்த தொழிற்சாலை இயங்காத காரணத்தினால் தொழிற்சாலைகளில் இருந்து டன் கணக்கில் இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக திருடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த பெரியபட்டில் தனியார் எண்ணெய் சுத்திகரிக்கும் தொழிற்சாலை உள்ளது. தற்போது இந்த தொழிற்சாலை இயங்காத காரணத்தினால் தொழிற்சாலைகளில் இருந்து டன் கணக்கில் இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக திருடி வருகின்றனர்இந்த நிலையில் இன்று அதிகாலை தனியார் தொழிற்சாலையில் இரும்பு பொருட்களை 3 பேர் கொண்ட கும்பல் திருடிக் கொண்டிருந்தது. அப்போது தொழிற்சாலை நிர்வாகி சாமிநாதன் என்பவர் பார்வையிட்டு 3 பேரை பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    மேலும் அவர்களிடமிருந்து 150 கிலோ இரும்பு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் ஆலப்பாக்கம் சேர்ந்த தீனதயாளன் (வயது 36), தீர்த்தனகிரி சேர்ந்தவர்கள் தட்சிணாமூர்த்தி (50), குமார் (40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாகும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    • விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தை சேர்ந்த தமிழக வைகை பாசன சங்கத்தலைவர் பாக்யநாதன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை விவசாயம் நிறைந்த பூமியாகும். எனது முன்னோர்கள் காலத்திலும் சரி, பல நூற்றாண்டு காலமாக மிளகாய் சாகுபடி செய்வதே இந்த பகுதியில் நிரந்தர விவசாயமாக இருந்து வருகின்றன.

    அதிலும் முண்டு மிளகாய் என்பது இன்று பன்னாட்டு வர்த்தக அளவில் வரவேற்பு பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை தரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.

    இந்த மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த முண்டு மிளகாய் பொருத்தவரை அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.

    இதனால் பொதுமக்கள் அதிக வரவேற்பை பெற்று மிளகாய் விற்பனையில் முன்னனியில் இருந்து வருகிறது. இத்தகைய மிளகாய்க்கு புவிசார் குறியீடு வேண்டி மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்து 100 ஆண்டு கால நினைவை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த மாதம் மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விவசாயிகளிடம் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தற்பொழுது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமாக மிளகாய் விளைச்சல் வரக்கூடிய இந்த மாவட்டத்திற்கு மிளகாய் மண்டலம் அறிவித்ததன் மூலம் 2 சாதனையும் ஒரே நேரத்தில் கிடைத்த பெருமையால் விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிய பயனுள்ளதாக அமையும்.

    இந்த திட்டத்தினால் மாவட்டத்திலேயே மிளகாய் பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாகும் நிலை மற்றும் மிளகாயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தல் என்ற நிலை உருவாகும். இது மட்டுமின்றி மாவட்டத்திற்கு பன்னாட்டு வணிகம் நிறுவனம் வர தொடங்குவார்கள்.

    இதன் மூலம் விவசாயி களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் காணும். மேலும் விவசாயிகள் மிளகாய் சாகுபடிக்கு அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். இத்தகைய சிறப்பான திட்டத்தை தந்த முதலமைசருக்கு அனைத்து மிளகாய் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கம் சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏர்பட்ஸ்களை தயாரிக்க ரூ.230 கோடியில் ஹேர்படம் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
    • தனியார் தொழிற்சாலை அமைவதன் மூலம் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரூ.1800 கோடியில் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. ஐபோன் உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்த தெலுங்கானா மாநில அரசு பர்சனான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.

    மேலும் ஏர்பட்ஸ்களை தயாரிக்க ரூ.230 கோடியில் ஹேர்படம் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக ஏர்பட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. தனியார் தொழிற்சாலை அமைவதன் மூலம் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டிலேயே ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளதால் ஐபோன்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பனிக்கட்டி தொழிற்சாலை அமைக்க மானியம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • ரூ.72 லட்சமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22 மற்றும் 2022-23 திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் பனிக்கட்டி தொழிற்சாலை அமைத்தல் திட்டத்தின் கீழ் 30 டன் (பொது-1, ஆதிதிரா விடர் பழங்குடியினர்-1, மகளிர்-1) மற்றும் 50 டன் (மகளிர்-1) கொள்ளளவில் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.

    30 டன் கொள்ளளவு கொண்ட ஒரு பனிக்கட்டி தொழிற்சாலை அமைப்ப தற்கான அலகு தொகை ரூ.120.00 லட்சம் என கணக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பி ரிவினருக்கு செலவினத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ.48 லட்சமும், மகளிருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.72 லட்சமும் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    50 டன் கொள்ளளவு கொண்ட ஒரு பனிக்கட்டி தொழிற்சாலை அமைப்ப தற்கான அலகு தொகை ரூ.150 லட்சம் என கணக்கீடு செய்யப்பட்டு, பொதுப் பிரிவினருக்கு செல வினத்தில் 40 சதவீதம் மானி யமாக ரூ.60 லட்சமும், மகளிருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.90 லட்சமும் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்ப டையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள மீனவ பயனாளிகள் சம்மந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ள கேட் டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலு வலகம், பட்டிணம்காத்தான் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
    • வணிக கட்டடத்தில் இயங்கி வரும் குறு, சிறு தொழில்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது. மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சுமதி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் ராமச்சந்திரன் முன்னிலையில் மின்வாரிய அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் குமார் நகர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் வணிக ரீதியான கட்டடங்களில் இயங்கும் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதில் உள்ள குளறு படியை களைய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுசெயலாளர் சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    குறு, சிறு பனியன் தொழில்கள், வணிக ரீதியான, கடைகளில் இயங்கி வருகின்றன. திருப்பூரில் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்பு வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. வணிக கட்டடத்தில் குறு, சிறு தொழிற்சாலைகள் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கின்றன.

    மின்வரிய அலுவலர்கள், மனுக்கள் கிடப்பில் இருப்பதால் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டாமென தடுக்கின்றனர். மின் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதால் குறு, சிறு தொழில்கள் துவங்கும் தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளில் 2,500க்கும் அதிகமான புதிய வணிக நிறுவனங்கள், கடைகள், வணிக கட்டடத்தில் இயங்கி வரும் குறு, சிறு தொழில்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. தற்காலிக மின் இணைப்பில் தொழில் நடத்தி வருவதால் பல மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

    கட்டிட உரிமையாளர்கள், மின் கட்டண செலவை சமாளிக்க முடியாமல் வங்கிக்கடன் தவணை செலுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர். வணிக ரீதியாக கட்டியுள்ள கட்டடங்களில் இயங்கி வரும் குறு, சிறு பனியன் தொழிற்சாலைகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது, மின்வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு, மின் இணைப்பு வழங்கி வருகிறோம். பதிவு மூப்பு அடிப்படையில் இணைப்பு வழங்கப்படும் என்றனர்.

    • தொழிற்சாலையில் இருந்து இரவு நேரங்களில் நெகிழிக் கழிவுகளை எடுத்து வந்து அருகில் உள்ள ஏரிக்கு அருகில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனா்.
    • கண் ஏரிச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா், மண்ணரை பகுதியில் செயல்பட்டு வரும் நெகிழிக் கழிவுகளை எரிக்கும் தொழிற்சாலையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இது குறித்து திருப்பூா் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வாளரிடம் கவுண்டநாயக்கன்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் கவுண்டநாயக்கன்பாளையம் ரோஜா நகா், டி.மண்ணரை ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் மண்ணரையில் கழிவு பாலீத்தின் அறைக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து இரவு நேரங்களில் நெகிழிக் கழிவுகளை எடுத்து வந்து அருகில் உள்ள ஏரிக்கு அருகில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனா்.

    இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு, கண் ஏரிச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. ஆகவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்தத் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×