search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

    • தொழிற்சாலை சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தொழிற்சாலை சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி தமிழ் மாநில குழு சார்பில் இன்று காலை தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம், அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநிலச் செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார்.

    தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தினை தொடக்கி வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்ப ட்டன. முடிவில் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் சேவையா ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து பேசினார்.

    இதில் மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், விவசாய தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர் மணிமூர்த்தி, மின்வாரிய சம்மேளன மாநிலத் துணைத் தலைவர் பொன்.தங்கவேல், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாத்துரை, கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் தாமரைச் செல்வன், கட்டுமான சங்க மாவட்ட துணைத்தலைவர் செல்வம், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் செந்தில்நா தன், உடலுழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் சுதா, உழைக்கும் பெண்கள் அமைப்பு செயலாளர் பரிமளா, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், நுகர்பொருள் வாணிபக்கழக சங்க மாவட்ட பொருளாளர் தியாகராஜன், தஞ்சை நகர தொழிற்சங்க தலைவர் பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×