search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிக்கட்டி"

    • குல்மார்க்கில் உள்ள பைன் பேலஸ் பிளாட்டினம் என்கிற ஓட்டலில் தீ விபத்து.
    • தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தகவல்.

    வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க்கில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    குல்மார்க்கில் உள்ள பைன் பேலஸ் பிளாட்டினம் என்கிற ஓட்டலில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே, தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்ட அங்கிருந்த மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பனிக்கட்டிகளை தூக்கி எரிந்து தீயை அணைக்க முயன்றனர். இதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • பனிக்கட்டி தொழிற்சாலை அமைக்க மானியம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • ரூ.72 லட்சமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22 மற்றும் 2022-23 திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் பனிக்கட்டி தொழிற்சாலை அமைத்தல் திட்டத்தின் கீழ் 30 டன் (பொது-1, ஆதிதிரா விடர் பழங்குடியினர்-1, மகளிர்-1) மற்றும் 50 டன் (மகளிர்-1) கொள்ளளவில் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.

    30 டன் கொள்ளளவு கொண்ட ஒரு பனிக்கட்டி தொழிற்சாலை அமைப்ப தற்கான அலகு தொகை ரூ.120.00 லட்சம் என கணக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பி ரிவினருக்கு செலவினத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ.48 லட்சமும், மகளிருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.72 லட்சமும் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    50 டன் கொள்ளளவு கொண்ட ஒரு பனிக்கட்டி தொழிற்சாலை அமைப்ப தற்கான அலகு தொகை ரூ.150 லட்சம் என கணக்கீடு செய்யப்பட்டு, பொதுப் பிரிவினருக்கு செல வினத்தில் 40 சதவீதம் மானி யமாக ரூ.60 லட்சமும், மகளிருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.90 லட்சமும் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்ப டையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள மீனவ பயனாளிகள் சம்மந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ள கேட் டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலு வலகம், பட்டிணம்காத்தான் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×