search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chili"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாகும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    • விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தை சேர்ந்த தமிழக வைகை பாசன சங்கத்தலைவர் பாக்யநாதன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை விவசாயம் நிறைந்த பூமியாகும். எனது முன்னோர்கள் காலத்திலும் சரி, பல நூற்றாண்டு காலமாக மிளகாய் சாகுபடி செய்வதே இந்த பகுதியில் நிரந்தர விவசாயமாக இருந்து வருகின்றன.

    அதிலும் முண்டு மிளகாய் என்பது இன்று பன்னாட்டு வர்த்தக அளவில் வரவேற்பு பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை தரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.

    இந்த மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த முண்டு மிளகாய் பொருத்தவரை அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.

    இதனால் பொதுமக்கள் அதிக வரவேற்பை பெற்று மிளகாய் விற்பனையில் முன்னனியில் இருந்து வருகிறது. இத்தகைய மிளகாய்க்கு புவிசார் குறியீடு வேண்டி மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்து 100 ஆண்டு கால நினைவை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த மாதம் மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விவசாயிகளிடம் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தற்பொழுது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமாக மிளகாய் விளைச்சல் வரக்கூடிய இந்த மாவட்டத்திற்கு மிளகாய் மண்டலம் அறிவித்ததன் மூலம் 2 சாதனையும் ஒரே நேரத்தில் கிடைத்த பெருமையால் விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிய பயனுள்ளதாக அமையும்.

    இந்த திட்டத்தினால் மாவட்டத்திலேயே மிளகாய் பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாகும் நிலை மற்றும் மிளகாயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தல் என்ற நிலை உருவாகும். இது மட்டுமின்றி மாவட்டத்திற்கு பன்னாட்டு வணிகம் நிறுவனம் வர தொடங்குவார்கள்.

    இதன் மூலம் விவசாயி களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் காணும். மேலும் விவசாயிகள் மிளகாய் சாகுபடிக்கு அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். இத்தகைய சிறப்பான திட்டத்தை தந்த முதலமைசருக்கு அனைத்து மிளகாய் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கம் சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×