search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிளகாய்"

    • மிளகாய் தோட்டங்களுக்கு கடுமையான பாதுகாப்பும் போட்டு இருந்தனர்.
    • விவசாயிகள் போலீசாரையும் கற்களை வீசி தாக்க தொடங்கினர்.

    பெங்களூர்:

    கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் விவசாயிகள் மிளகாய் பயிரிட்டுள்ளனர். குறிப்பாக கர்நாடகாவில் விளையும் மிளகாய்க்கு சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதால் விவசாயிகள் இதில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர். மிளகாய் தோட்டங்களுக்கு கடுமையான பாதுகாப்பும் போட்டு இருந்தனர்.

    விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் மிளகாய்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தனர். இந்த மிளகாய்களை வாங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் திரண்டு வந்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள மிளகாய் சந்தையில் விவசாயிகள் கூட்டுறவு மையம் இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக மிளகாய் விலை உச்சத்தில் இருந்து வந்தது.


    கடந்த வாரம் 100 கிலோ மிளகாய் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த நிலையில் நேற்று 100 கிலோ மிளகாய் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரம் வரை மட்டுமே விற்பனையானது. விலை குறைந்ததால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் சந்தை பகுதியில் உள்ள விவசாய சேவா கூட்டுறவு மையத்துக்குள் நுழைந்து அங்குள்ளள இருக்கைகளை அடித்து நொறுக்கி தாக்கினர்.

    மேலும் அலுவலகத்துக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சங்கத்தின் தலைவர் கார் உள்பட 5 கார்களை தீவைத்து எரித்தனர். மேலும் 10 இரு சக்கர வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் நடுரோட்டில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இது பற்றி தெரியவந்ததும், தீயணைக்க வந்த வாகனங்களையும் விவசாயிகள் தாக்கினர். இதனால் மிளகாய் சந்தை பகுதி போர்களமாக மாறியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு ஏராளமான போலீசார் விரைந்து வந்தனர். விவசாயிகள் போலீசாரையும் கற்களை வீசி தாக்க தொடங்கினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. போராட்டகாரரர்களை விட குறைந்த அளவே போலீசார் இருந்ததால் நிலமையை கட்டுக்குள் கொண்டுவர மிகவும் சிரமமடைந்தனர்.

    • தக்காளி ரூ.50-க்கு விற்பனை
    • சின்ன வெங்காயம் ரூ.75, பாகற்காய் ரூ.80-க்கு விற்பனையானது.

    :நாகர்கோவில் 

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனக மூலம் சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் உள்ளூரில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    வெள்ளரிக்காய், புடலங்காய், தடியங்காய், பூசணிக்காய், வெண்டைக்காய் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக வருகிறது. தக்காளி பெங்களூரில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேட்டுப்பாளையம், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது.

    கடந்த சில நாட்களாக காய்கறி வரத்துகுறைய தொடங்கியதையடுத்து காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளி, பீன்ஸ், கேரட், மிளகாய், விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது. பீன்ஸ், மிளகாயின் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ பீன்ஸ் இன்று ரூ.110-க்கும், மிளகாய் ரூ.120-க்கும் விற்பனையானது.

    தக்காளியின் விலையும் தினமும் உயர்ந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரூ.25-க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை 2 மடங்கு உயர்ந்து இன்று ரூ.50-க்கு விற்பனையானது. இஞ்சியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ இஞ்சி கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று இஞ்சியின் விலை ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம், சேனை விலையும் அதிகரித்து வருகிறது. சேனை கிலோ ரூ.70-க்கு விற்பனையானது. மார்க்கெட்டில் இன்று விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    தக்காளி ரூ.50, வழுதலங்காய் ரூ.80, கத்தரிக்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.25, வெண்டைக்காய் ரூ.50, வெள்ளரிக்காய் ரூ.25, புடலங்காய் ரூ.35, பல்லாரி ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.30, மிளகாய் ரூ.120, பின்ஸ் ரூ.110, கேரட் ரூ.80, சேனை ரூ.70, இஞ்சி ரூ.200, சின்ன வெங்காயம் ரூ.75, பாகற்காய் ரூ.80-க்கு விற்பனையானது.

    காய்கறிகளின் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறுகையில், உள்ளூரிலிருந்து வரக்கூடிய காய்கறிகளின் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. வெளியூர்களில் இருந்தும் குறைவான அளவில் காய்கறிகள் விற்பனைக்கு வருவதால் காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது. இன்னும் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளது என்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாகும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    • விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தை சேர்ந்த தமிழக வைகை பாசன சங்கத்தலைவர் பாக்யநாதன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை விவசாயம் நிறைந்த பூமியாகும். எனது முன்னோர்கள் காலத்திலும் சரி, பல நூற்றாண்டு காலமாக மிளகாய் சாகுபடி செய்வதே இந்த பகுதியில் நிரந்தர விவசாயமாக இருந்து வருகின்றன.

    அதிலும் முண்டு மிளகாய் என்பது இன்று பன்னாட்டு வர்த்தக அளவில் வரவேற்பு பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை தரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.

    இந்த மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த முண்டு மிளகாய் பொருத்தவரை அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.

    இதனால் பொதுமக்கள் அதிக வரவேற்பை பெற்று மிளகாய் விற்பனையில் முன்னனியில் இருந்து வருகிறது. இத்தகைய மிளகாய்க்கு புவிசார் குறியீடு வேண்டி மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்து 100 ஆண்டு கால நினைவை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த மாதம் மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விவசாயிகளிடம் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தற்பொழுது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமாக மிளகாய் விளைச்சல் வரக்கூடிய இந்த மாவட்டத்திற்கு மிளகாய் மண்டலம் அறிவித்ததன் மூலம் 2 சாதனையும் ஒரே நேரத்தில் கிடைத்த பெருமையால் விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிய பயனுள்ளதாக அமையும்.

    இந்த திட்டத்தினால் மாவட்டத்திலேயே மிளகாய் பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாகும் நிலை மற்றும் மிளகாயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தல் என்ற நிலை உருவாகும். இது மட்டுமின்றி மாவட்டத்திற்கு பன்னாட்டு வணிகம் நிறுவனம் வர தொடங்குவார்கள்.

    இதன் மூலம் விவசாயி களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் காணும். மேலும் விவசாயிகள் மிளகாய் சாகுபடிக்கு அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். இத்தகைய சிறப்பான திட்டத்தை தந்த முதலமைசருக்கு அனைத்து மிளகாய் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கம் சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயற்கை முறையில் பயிரிட்டு அமெரிக்காவுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்தனர்.
    • சம்பாமிளகாயை 5 வருடங்களாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோரைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி ராமர். இவர் செயற்கை உரங்கள் இல்லாமல் இயற்கை முறையிலான உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்.

    ரசாயன உரங்களை பயன் படுத்தாமல் நாட்டு மாட்டுச் சாணங்களை உரமாக பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக, வண்ண பூச்சி ஒட்டிகளை பயன்படுத்தி வருகிறார்.மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வரும் இவர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது பெற்றுள்ளார்.

    இவரது வயலில் விளையும், சம்பாமிளகாயை 5 வருடங்களாக அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த வருடம் இயற்கை விவசாயம் மூலம் இவரது தோட்டத்தில் விளைந்த சம்பாமிளகாயை, கொள்முதல் செய்வதற்கு முன்பு அமெரிக்கநாட்டில் இருந்து 2 பேர் வந்தனர்.

    அவர்கள் கோரைப் பள்ளம் கிராமத்தில் ராமர் தோட்டத்திற்கு சென்று மிளகாய் செடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அவர்களுக்கு விவசாயி ராமர் தலைமையில் கிராம மக்கள் குலவையிட்டு, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    இந்த வருடம் 200 டன் சம்பாமிளகாய், இந்த பகுதியில் உள்ள 20 கிராமங்களில் இருந்து, கொள்முதல் செய்ய உள்ளதாக அமெரிக்க நாட்டினர் கூறினர். மேலும் இருவரும் பாக்குவெட்டி கிராமத்தில் உருவாட்டி என்பவரின் மிளகாய் தோட்டத்திலும் ஆய்வு செய்தனர். பின்னர் கமுதி விவசாய கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் மிளகாயை ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாத்து வைக்கப்படும் குடோனை பார்வையிட்டனர்.

    இந்த ஆய்வின் போது, கூட்டுறவு விற்பனை சங்க பொது மேலாளர் போஸ், தனியார் நிறுவன அதிகாரி சவுரப், கொள்முதல் மேலாளர் சஞ்ஜய், ஜோசப்ராஜ், கள ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • பி.ஏ.பி., பாசனத்துக்கு காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
    • கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவுக்கு தயார் நிலையில் உள்ளது.

    உடுமலை :

    கத்தரி,மிளகாய் நாற்று தேவைப்படும் உடுமலை வட்டார விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பி.ஏ.பி., பாசனத்துக்கு காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.சங்கரமாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில், விவசாயிகளுக்கு தேவையான கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவுக்கு தயார் நிலையில் உள்ளது.மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், சிங்காரவேல் 95247-27052, சித்தேஸ்வரன் 88836-10449, காயத்ரி 63790-62232, ராஜ்மோகன் 95854-24502 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வடகிழக்கு பருவமழைக்குப் பிறகு சாகுபடி பரப்பு அதிகரித்து பச்சை மிளகாய்க்கு போதிய விலை கிடைக்காது.
    • சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அறுவடைப்பணிகளை திட்டமிட்டு மதிப்பு கூட்டுவதிலும், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதியில் சொட்டு நீர் மற்றும் நுண்ணீர் பாசனம் உட்பட தொழில்நுட்பங்களை பின்பற்றி காய்கறி சாகுபடியில், விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.இதில் பச்சை மிளகாய், பாப்பனூத்து, குட்டியகவுண்டனூர், ஆண்டியகவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும் சாகுபடியாகிறது.இந்நிலையில் வடகிழக்கு பருவமழைக்குப்பிறகு சாகுபடி பரப்பு அதிகரித்து பச்சை மிளகாய்க்கு போதிய விலை கிடைக்காது.எனவே சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அறுவடைப்பணிகளை திட்டமிட்டு மதிப்பு கூட்டுவதிலும், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    மிளகாய் சாகுபடியில் ெஹக்டேருக்கு 13 மெட்ரிக்., டன் வரை விளைச்சல் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். விலை வீழ்ச்சியின் போது பச்சை மிளகாயை செடியிலேயே பழுக்க விட்டு பின்னர் அறுவடை செய்கின்றனர்.இதில் விதைத்தேவைக்கு குறிப்பிட்ட சதவீதத்தை பயன்படுத்தி கொள்கின்றனர். மேலும் உலர்களங்களில் காய வைத்து வற்றல் மிளகாயாகவும் விற்பனை செய்கிறார்கள்.

    செடியிலேயே மிளகாயை காய விடுவதால்அவற்றின் எடை வெகுவாக குறைந்து ெஹக்டேருக்கு 3 மெட்ரிக்., டன் வற்றல் மிளகாய் கிடைக்கிறது.பச்சை மிளகாயை விட, வற்றலுக்கு அதிக விலை கிடைப்பதால் உடுமலைப்பகுதி விவசாயிகள் கிராம உலர்களங்களில், வற்றலை காய வைத்து தரம் பிரிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், வற்றல் மிளகாய்க்கு உள்ளூர் மற்றும் பிற மாவட்ட சந்தைகளில் ஆண்டு முழுவதும் தேவை உள்ளது. எனவே இப்பணியில் ஈடுபட்டுள்ளோம். கிராமம்தோறும் உலர் களங்கள் அமைத்து கொடுத்தால், இத்தகைய மதிப்பு கூட்டு பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்றனர்.

    ×