search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chilli prices"

    • மிளகாய் தோட்டங்களுக்கு கடுமையான பாதுகாப்பும் போட்டு இருந்தனர்.
    • விவசாயிகள் போலீசாரையும் கற்களை வீசி தாக்க தொடங்கினர்.

    பெங்களூர்:

    கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் விவசாயிகள் மிளகாய் பயிரிட்டுள்ளனர். குறிப்பாக கர்நாடகாவில் விளையும் மிளகாய்க்கு சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதால் விவசாயிகள் இதில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர். மிளகாய் தோட்டங்களுக்கு கடுமையான பாதுகாப்பும் போட்டு இருந்தனர்.

    விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் மிளகாய்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தனர். இந்த மிளகாய்களை வாங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் திரண்டு வந்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள மிளகாய் சந்தையில் விவசாயிகள் கூட்டுறவு மையம் இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக மிளகாய் விலை உச்சத்தில் இருந்து வந்தது.


    கடந்த வாரம் 100 கிலோ மிளகாய் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த நிலையில் நேற்று 100 கிலோ மிளகாய் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரம் வரை மட்டுமே விற்பனையானது. விலை குறைந்ததால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் சந்தை பகுதியில் உள்ள விவசாய சேவா கூட்டுறவு மையத்துக்குள் நுழைந்து அங்குள்ளள இருக்கைகளை அடித்து நொறுக்கி தாக்கினர்.

    மேலும் அலுவலகத்துக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சங்கத்தின் தலைவர் கார் உள்பட 5 கார்களை தீவைத்து எரித்தனர். மேலும் 10 இரு சக்கர வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் நடுரோட்டில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இது பற்றி தெரியவந்ததும், தீயணைக்க வந்த வாகனங்களையும் விவசாயிகள் தாக்கினர். இதனால் மிளகாய் சந்தை பகுதி போர்களமாக மாறியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு ஏராளமான போலீசார் விரைந்து வந்தனர். விவசாயிகள் போலீசாரையும் கற்களை வீசி தாக்க தொடங்கினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. போராட்டகாரரர்களை விட குறைந்த அளவே போலீசார் இருந்ததால் நிலமையை கட்டுக்குள் கொண்டுவர மிகவும் சிரமமடைந்தனர்.

    • மழையால் மிளகாய் விளைச்சல் அதிகரித்து விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது.
    • பெரும்பாலான விவசாயிகள் மிளகாய்களை பறிக்காமல் செடியில் விட்டு விடுகின்றனர். இதனால் மிளகாய் செடியில் பழமாகிறது. விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய த்தில் குமணன்தொழு, கோம்பைத்தொழு, பசுமலைதேரி, அரண்மனைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் மிளகாய் தேனி, சின்னமனூர் உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் மிளகாய் விளைச்சல் அதிகரித்து விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 3 மாதம் வரை ஒரு கிலோ மிளகாய் ரூ.40 வரை சந்தைகளில் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து வரத்து அதிகரித்து காணப்படுவதன் காரணமாக படிப்படியாக விலை குறைந்து தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.

    இதனால் பெரும்பாலான விவசாயிகள் மிளகாய்களை பறிக்காமல் செடியில் விட்டு விடுகின்றனர். இதனால் மிளகாய் செடியில் பழமாகிறது. விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மிளகாய் வரத்து அதிகரித்தால் விலை குறைவதும் வரத்து குறைந்தால் விலை அதிகரிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே மிளகாய் விவசாயிகளுக்கு போதுமான அளவில் லாபம் கிடைப்பதில்லை.

    எனவே மிளகாய்க்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×