search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்கு"

    • அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சகாய மாதா தெருவை சேர்ந்தவர் ராபின்ஸ்டன் (வயது 48). மீனவர். கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரேகா (வயது 40). இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இதனால் இவர்கள் தனது ஒரே மகளுடன் இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 10-30 மணிக்கு இவர்கள் தூங்க சென்று விட்டனர். அதன் பிறகு ராபின்ஸ்டன் கோவிலுக்கு செல்வதற்காக இன்று காலை எழுந்து பார்த்தபோது தனது மனைவியை காணா ததை பார்த்து திடுக்கிட் டார். உடனே அவன் தனது வீட்டின் மேல் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்குஉள்ள ஒரு அறையில் அவரது மனைவி ரேகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். பின்னர் அவர் இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய் தார். அதன் பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தி னார்கள். அதன் பிறகு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மரத்தில் 55 வயது மதிக்கத்தக்கவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் புது பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மரத்தில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்கவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தைச் சேர்ந்தவர் சகாயம் (வயது 34). மீன்பிடி தொழிலாளி.

    இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு அவர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தார்.

    இதனால் மனம் உடைந்த சகாயம் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில்உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இது குறித்து கன்னியா குமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிள் வாங்கித் தராததால் விபரீத முடிவு
    • வீடு கட்டிய கடன் இருப்பதால் சில மாதங்கள் கழித்து வாங்கி தருவதாக தந்தை கூறியதால் மனமுடைந்தார்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உள்ள கொல்லாறை கைதக்கல் காலணியை சேர்ந்த வர் செல்வன். இவரது இளைய மகன் சஜின் (வயது 20). இவர் பிளஸ்-2 படித்துவிட்டு வெல்டிங் தொழில் செய்து வந்தார்.

    இவர் தனது தந்தையிடம் புதியதாக ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் வாங்கி தர கேட்டு உள்ளார். வீடு கட்டிய கடன் இருப்பதால் சில மாதங்கள் கழித்து வாங்கி தருவதாக தந்தை செல்வன் கூறி உள்ளார். இதனால் சஜின் மனமுடைந்தார்.

    நேற்று செல்வம் தனது மனைவி மற்றும் மூத்தமகனுடன் புதிய வீட்டில் தங்கி உள்ளார்.சஜின் பழைய வீட்டில் தூங்க சென்றார்.

    இன்று காலையில் செல்வன், அவருக்கு காப்பி கொடுப்பதற்கு சென்றார். அப்போது கதவு பூட்டப்பட்டு கிடந்தது. கதவை தட்டிய போதும் சஜின் திறக்கவில்லை.

    இதனை தொடர்ந்து ஜன்னல் வழியாக பார்த்த போது படுக்கை அறையில் வீட்டின் உத்திரத்தில் தூக்குபோட்டு சஜின் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு செல்வன் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து சஜின் உடலைக் கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அரசு ஆஸ்பத்திரி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (32). இவர் பலரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதனை திருப்பி கொடுக்க முடியாததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது மனைவி அழகேஸ்வரி திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே ரோசன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சொந்த ஊரான ரோசன்பட்டிக்கு வந்தார். அவர் நோய் குணமாகததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது சகோதரர் கோவிந்த் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி கவிதா நகரை சேர்ந்தவர் குருசாமி (38). சுமை தூக்கும் தொழிலாளி. இவரை குடும்பத்தினர் கண்டித்ததால் கடந்த சில நாட்களாக மது குடிக்காமல் மது குடிக்காமல் இருந்துள்ளார். பின்னர் அவர் மதுகுடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தன்னால் மது குடிக்காமல் இருக்க முடியவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது மனைவி சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரண்டாவது மனைவி இறந்த சோகத்தை அடிக்கடி மூத்த மனைவியிடம் கூறி வேதனை பட்டு வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புத்தளம் அருகே உள்ள பெத்தபெருமாள் குடியிருப்பை சேர்ந்தவர் கமலன் (வயது 63).

    இவர் புத்தளம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி மூத்த மனைவியின் தங்கையாகும்.இரண்டாவது மனைவி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அன்று முதல் கமலன் மன வேதனையில் இருந்து வந்தார். இரண்டாவது மனைவி இறந்த சோகத்தை கமலன் அடிக்கடி மூத்த மனைவியிடம் கூறி வேதனை பட்டு வந்தார்.இரண்டாவது மனைவி இறந்த சோகத்தை கமலன் அடிக்கடி மூத்த மனைவியிடம் கூறி வேதனை பட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் டீக்கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து இவரது மூத்த மனைவி தங்ககனி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கமலன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இவர் கடநத சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
    • ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள பாலூர் வெட்டுக்காட்டு விளையை சேர்ந்தவர் ஐயப்பன் ஆசாரி மகன் சுனில்குமார் (வயது 46). இவர் நகை தொழில் செய்து வந்தார். இவர் கடநத சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று, இவரது மனைவி சாந்தி இவரை வேலைக்கு செல்ல வலியு றுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சுனில்குமார் அவரை தள்ளி விட்டு அறைக்குள் சென்று மனைவியின் சேலையால் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார்.

    இதுகுறித்து சாந்தி கருங்கல் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் கருங்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜாக்கமங்கலம் அருகே எறும்பு காட்டை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 32). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிவரஞ்சனி. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வரதராஜன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

    இதுபற்றி ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து வரதராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • அவர் அடிக்கடி செல்போனில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி வடக்கூர் கல்பாளைய தெருவை சேர்ந்தவர் தங்கம். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களின் மகள் ரம்யா (வயது 15).ரம்யா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கணவர் இறந்த பின்பு தங்கம் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    ரம்யா பள்ளிக்கு சென்று வந்த பின்னர் தாயாருக்கு உதவி செய்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவார். படித்து விட்டு அவரது அறையில் தூங்க செல்வார். இன்று காலை ரம்யா நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவரது தாயார் தங்கம், அறைக்கு சென்று கதவை தட்டினார்.

    அறைக்கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்தார்.

    அங்கு ரம்யா, மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கம் அலறினார்.

    இது பற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ரம்யா அடிக்கடி செல்போ னில் விளையாடி கொண்டிரு ந்ததாகவும், அதனை தாயார் கண்டித்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்தி ருப்பதாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அவர் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் வீட்டில் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் நந்தன்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவர் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. செல்வம் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் வீட்டில் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்பு உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி கலா மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சீனிவாசன் பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் கதர் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • சீனிவாசனை இவரது வீட்டில் உள்ளவர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பூங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (59).திருமணமாகாதவர். இவர் பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் கதர் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 12-ம் தேதி வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். சீனிவாசனை இவரது வீட்டில் உள்ளவர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

    எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை தேடி வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் சீனிவாசன் தூக்கில் பிணமாக தொங்கியவாறு உடலை திருவண்ணாமலை போலீசார் மீட்டனர். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை போலீசார் சீனிவாசன் உடலை பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் சீனிவாசன் எப்படி இறந்தார்?யாரேனும் இவரை கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்க விட்டனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல் நல குறைவால் ராமதாஸின் மனைவி இறந்தார்.
    • காதல் மனைவி இறந்த சோகம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே மாமண்தூர் பகுதி யைச் சேர்ந்தவர் ராம தாஸ் (வயது 28). இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் உடல் நல குறைவால் ராமதாஸின் மனைவி இறந்தார். பின்னர் ராமதாஸ் காதல் மனைவி இறந்த சோகம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்து வந்தார். மேலும் ஒரு வயது குழந்தையை வைத்து தனியாக பராமரித்து சரிவர பார்த்துக் கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வந்தார். நேற்று ராமதாஸ் தனது ஒரு வயது குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு அதே பகுதியில் ஏரிக்கரையில் உள்ள ஆல மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை அந்த வழியாக சென்ற பொது மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்
    • திண்டுக்கல்லை சேர்ந்த நாகபாண்டி என்பவரை அங்காள ஈஸ்வரி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

    மதுரை,

    மதுரை அருகே உள்ள பொதும்பு கீழத்தெருவை சேர்ந்தவர் அங்காள ஈஸ்வரி (வயது 19). பிளஸ்-2 படித்துள்ளார். திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் உறவினர் கணேசன் மனைவி நாக லட்சுமி என்பவரின் செருப்பு கடையில் வேலை பார்த்தார்.

    அங்காள ஈஸ்வரி சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். இதுகுறித்து நாகலட்சுமி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான அங்காள ஈஸ்வரியை தேடி வந்தனர்.

    இதற்கிடையே திண்டுக்கல்லை சேர்ந்த நாகபாண்டி என்பவரை அங்காள ஈஸ்வரி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. கணவன்-மனைவி இருவரும் ஆலம்பட்டிக்கு வந்தனர்.

    அப்போது நாகபாண்டி அங்காள ஈஸ்வரியை உற வினர் வீட்டில் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் அங்காள ஈஸ்வரி குடும்பத்தினரை நாகலட்சுமி தொடர்பு கொண்டார். அப்போது அங்காள ஈஸ்வரி குடும்பத்தினர் இன்று இரவு மட்டும் அவள் உங்கள் வீட்டில் இருக்கட்டும். நாளை அழைத்துச் செல்கிறோம் என்று தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து அங்காள ஈஸ்வரி, உறவினர் நாகலட்சுமி வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. அங்காளஈஸ்வரி நேற்று காலை அந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×