என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூக்குப்போட்டு தற்கொலை
- 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அரசு ஆஸ்பத்திரி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (32). இவர் பலரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதனை திருப்பி கொடுக்க முடியாததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது மனைவி அழகேஸ்வரி திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே ரோசன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சொந்த ஊரான ரோசன்பட்டிக்கு வந்தார். அவர் நோய் குணமாகததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது சகோதரர் கோவிந்த் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி கவிதா நகரை சேர்ந்தவர் குருசாமி (38). சுமை தூக்கும் தொழிலாளி. இவரை குடும்பத்தினர் கண்டித்ததால் கடந்த சில நாட்களாக மது குடிக்காமல் மது குடிக்காமல் இருந்துள்ளார். பின்னர் அவர் மதுகுடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தன்னால் மது குடிக்காமல் இருக்க முடியவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது மனைவி சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்