search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    ரேகா

    கன்னியாகுமரியில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

    • அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சகாய மாதா தெருவை சேர்ந்தவர் ராபின்ஸ்டன் (வயது 48). மீனவர். கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரேகா (வயது 40). இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இதனால் இவர்கள் தனது ஒரே மகளுடன் இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 10-30 மணிக்கு இவர்கள் தூங்க சென்று விட்டனர். அதன் பிறகு ராபின்ஸ்டன் கோவிலுக்கு செல்வதற்காக இன்று காலை எழுந்து பார்த்தபோது தனது மனைவியை காணா ததை பார்த்து திடுக்கிட் டார். உடனே அவன் தனது வீட்டின் மேல் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்குஉள்ள ஒரு அறையில் அவரது மனைவி ரேகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். பின்னர் அவர் இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய் தார். அதன் பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தி னார்கள். அதன் பிறகு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×