search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே மீனவர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம் 

    கன்னியாகுமரி அருகே மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

    • கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தைச் சேர்ந்தவர் சகாயம் (வயது 34). மீன்பிடி தொழிலாளி.

    இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு அவர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தார்.

    இதனால் மனம் உடைந்த சகாயம் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில்உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இது குறித்து கன்னியா குமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×