search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி"

    • உளுந்தூர்பேட்டை அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
    • உளுந்தூர்பேட்டை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே ஒடப்பன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது40). இவர் கள்ளத்தனமாகவும் அனுமதி பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தனிப்பிரிவு காவலர்தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் உளுந்தூர்பேட்டை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    • சோமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் அடிக்கடி ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
    • மோதலின் தொடர்ச்சியாக ரவுடி கும்பல் பழிவாங்கும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் வந்து இருக்கலாம் என்று தெரிகிறது

    ஸ்ரீபெரும்புதூர்:

    தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியில் உக்கடை உள்ளது. நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் டீ குடிக்க வந்தனர். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் காரில் மர்ம கும்பல் வந்தனர். அவர்களை கண்டதும் டீக்கடைக்குள் புகுந்து பின்பக்கம் வழியாக 2 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை மர்ம கும்பல் துரத்தியபோது ஒருவர் கால் தடுக்கி கீழே விழுந்தார். பின்னர் அவர் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டார்.

    அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து டீக்கடை உரிமையாளர் பார்த்தபோது அங்கு 3 துப்பாக்கி குண்டுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சோமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்தட வந்து 3 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் தோட்ட நிரப்பும் ஹண்டில் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண் போலியானது என்பது விசாரணையில் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய 2 வாலிபர்களும் யார்? அவர்களை பின்தொடர்ந்து காரில் வந்த கும்பல் யார் என்பது குறித்து போலீசார் தீவிரவி சாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது. சோமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் அடிக்கடி ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலின் தொடர்ச்சியாக ரவுடி கும்பல் பழிவாங்கும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் வந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் பி.பி.ஜி.டி. சங்கரை ரவுடி கும்பல் வெடி குண்டை வீசி ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. ரவுடி கும்பல் துப்பாக்கியுடன் வலம் வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரவடி கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • வன அலுவலர்கள் கீழ் அரசம்பட்டு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • விட்டுச் சென்ற உரிமம் இல்லாத 9 நாட்டு துப்பாக்கிகள், ஒரு கார், 2 செல்போன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் வனச்சரகம், கணியம்பாடி அடுத்த கீழ் அரசம்பட்டு அருகே உள்ள வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

    நேற்று இரவு ஒரு கும்பல் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளுடன் காரில் சென்று உள்ளதாக மாவட்ட வன அலுவலர் கலாநிதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    வன அலுவலர்கள் கீழ் அரசம்பட்டு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் இருந்த 3 மர்ம நபர்கள் வனத்துறையினரை கண்டதும் காரை விட்டு விட்டு தப்பி ஓடினர்.

    வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்று ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    பிடிபட்ட நபர் திருவண்ணாமலை மாவட்டம் சாரணா குப்பத்தை சேர்ந்த கணேசன் மகன் சுதாகர் (வயது 22) என்பதும் , தப்பி ஓடியவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (29) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் விட்டுச் சென்ற உரிமம் இல்லாத 9 நாட்டு துப்பாக்கிகள், ஒரு கார், 2 செல்போன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    வனத்துறையினர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தப்பிய ஓடியவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேரை காவலில் எடுத்து விசாரணை
    • துப்பாக்கியை காட்டி 20 பவுன் நகையை கொள்ளையடித்து காரில் சென்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்த வர் முகமது உமர் சாகிப் (வயது 55). வெளி நாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர் தற்போது இங்கேயே வசித்து வருகிறார்.

    இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று ஜாஸ்மின், மகள் மற்றும் மாமியாருடன் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். வீட்டில் முகமது உமர் சாகிப் மட்டும் இருந் தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் முகமது உமர் சாகிப்பிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வீட்டிலிருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு காரில் சென்றனர்.

    இதுகுறித்து முகமது உமர்சாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார். ெகாள்ளை தொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ், இடலாக்குடியைச் சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த ரஹீம், அழகிய பாண்டியபுரத்தைச் சேர்ந்த கவுரி, இருளப்புரத்தைச் சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன்புகாரி, மேல சரக்கல்விளையை சேர்ந்த தர்வீஸ்மீரான் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டது.

    கொள்ளைக்கு பயன்ப டுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளை யர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டது. தனி படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர்.

    இந்த நிலையில் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் ஜெயிலில் அடைக் கப்பட்டனர். தலைமறை வாகி இருந்த 4 பேரை தேடி வந்த நிலையில் ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, தர்வீஸ் மீரான் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜே.எம். 2 கோர்ட்டில் சரண டைந்தனர். இவர்களை நீதிபதி ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, தர்வீஸ் மீரான் ஆகிய 3 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கோட்டார் போலீசார் 3 பேரையும் காவலில் எடுத்தனர். அவர் களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தலைமறைவாகி இருந்த முக்கிய குற்றவாளி சார்லசை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கோவில்பட்டியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த சார்லஸை போலீ சார் சுற்றி வளைத்து பிடித்த னர். பிடிபட்ட சார்லஸை நாகர்கோவிலுக்கு கொண்டு வந்து விசாரித்து வரு கிறார்கள். கைது செய் யப்பட்ட சார்லசுக்கு குமரி மாவட்டத்தில் வேறு திருட்டு வழக்கு களில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தி லும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    • பெண் உள்பட 3 கொள்ளையர்கள் சிக்கினர்
    • தப்பி ஓடிய 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்தவர் உமர் பாபு (வயது 53). வெளிநாட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். தற்பொழுது இங்கு வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று இரவு உமர் பாபுவின் மனைவி, மகள் மற்றும் மாமியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். வீட்டில் உமர் பாபு மட்டும் தனியாக இருந்தார்.

    ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு ஜாஸ்மினும், மாமியார் மற்றும் மகளும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டினுடைய மின் விளக்கு கள் அணைக்கப்பட்டு இருந்தது. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் ஜாஸ்மின் கணவரை அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து வீட்டிலிருந்து பர்தா அணிந்த 2 நபர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் ஜாஸ்மின் யார் என்று கேட்டார். அப்போது அவர்கள் நாங்கள் உங்களது உறவுக்காரர்கள் என்று கூறினார்கள். உமர் பாபு குறித்து கேட்டபோது சரிவர பதில் கூறவில்லை. உள்ளே சென்று பார்த்த போது உமர் பாபுவின் கைகள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே ஜாஸ்மின் கூச்சலிட்டார். உடனே கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டினார்கள். பின்னர் வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளை அடித்து விட்டு தப்பி ஓடினார்கள். ஜாஸ்மினின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் கொள்ளை யர்களை பிடிக்க முயன்ற னர். அப்போது ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினார். மேலும் கொள்ளையர்கள் வந்த காரையும் பொதுமக்கள் பிடித்தனர். கொள்ளையன் பிடிபட்டது குறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடியில் இருந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த காரையும் சோதனை செய்தனர். அப்போது போலி பதிவு எண் கொண்ட கார் என்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொள்ளை யர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஜாஸ்மினிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையன் குறித்து அடையாளங்களை அவர் தெரிவித்தார்.

    தங்களது வீட்டிற்கு பர்தா அணிந்து 2 பேர் வந்ததில் ஒருவர் பெண் என்றும், மற்றொருவர் ஆண் என்று கூறினார். எனவே கொள்ளை சம்பவத்தில் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை யர்கள் 2 பேர் நேற்று மதியம் பர்தா அணிந்து உமர் பாபு வீட்டிற்குள் வருவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. எனவே கொள்ளையர்கள் காலை யிலிருந்து நோட்டமிட்டு இந்த கைவரிசை யில் ஈடுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கொள்ளையர்கள் விட்டு சென்ற துப்பாக்கியையும், அரிவாளையும் போலீசார் கைப்பற்றியுள்ளார்கள்.

    கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பிளாஸ்டிக் துப்பாக்கி என்பது தெரிய வந்துள்ளது. பிடிபட்ட கொள்ளையனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. தப்பி ஓடியவர்களும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது விசா ரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். கொள்ளை வழக்கில் தப்பி ஓடிய பெண்ணையும், வாலி பர் ஒருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் 2 பேருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நட வடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    • டிஃபன் பாக்சில் தோட்டாக்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
    • ஒரு மணி நேரத்திற்கு பள்ளி வளாகம் முழுக்க ஊரடங்கு நிலை உருவாக்கப்பட்டது.

    அமெரிக்காவின் அரிசோனா மாகாண தலைநகர் ஃபீனிக்சில் பாஸ்ட்ரோம் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர் தனது பையில் துப்பாக்கியும், டிஃபன் பாக்சில் தோட்டாக்களையும் கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மாணவரிடம் துப்பாக்கியும், அவரது பை மற்றும் டிஃபன் பாக்சில் தோட்டாக்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக பள்ளியில் இருந்து மற்ற மாணவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பள்ளி வளாகம் முழுக்க ஊரடங்கு நிலை உருவாக்கப்பட்டது.

    பள்ளிக்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொண்டு வந்தது, 15 வயதான மாணவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட மாணவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

    பின் ஆயுதங்களை வைத்திருந்தது, பள்ளியில் இடையூறை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றங்களுக்காக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பள்ளி மாணவரிடம் இருந்து AR-15 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    • குராயூர்-மொச்சிக்குளம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக ஒரு கார் வந்தது.
    • பறிமுதல் செய்யப்பட்ட கார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமொழி, வனிதா மற்றும் போலீஸ்காரர் நாகராஜன் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    குராயூர்-மொச்சிக்குளம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக ஒரு கார் வந்தது. மிகவும் மெதுவாக வந்த அந்த காருக்குள் இருந்தவர்கள் டார்ச்லைட்டை அடித்தபடி இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை நிறுத்துமாறு சைகை காண்பித்துள்ளனர்.

    போலீசாரை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதையடுத்து போலீசார் அவர்களின் பின்னால் துரத்தி சென்றனர். அரசப்பட்டி-கீழக்கோட்டை செல்லும் சாலையில் முத்துமாரி தோட்டம் என்ற பகுதிக்கு வந்தபோது காரில் வந்த 2 பே்ா, காரை அங்கேயே நிறுத்திவிட்டு இருட்டுக்குள் ஓடி தப்பி சென்று விட்டனர்.

    அவர்களை துரத்தி வந்த போலீசார், காருக்குள் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் துப்பாக்கி மற்றும் 113 தோட்டக்கள், 2 காலி கேஸ்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்தவர்களை அந்த பகுதியில் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். காரின் பதிவு எண்ணை வைத்து அந்த கார் யாருடையது? என்று போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.

    மேலும் அந்த காருக்குள் திருமங்கலம் காளிமுத்து நகரை சேர்ந்த பாலகணேஷ் என்பவரின் ஆதார் அட்டை, பெரம்பலூர் மாவட்ட ரைபிள் கிளப் லைசன்ஸ் உள்ளிட்டவைகள் இருந்தன. அவற்றையும் கைப்பற்றிய போலீசார் தப்பி சென்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    தப்பி ஓடியவர்கள் வேட்டையாடுவதற்காக காரில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொண்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் சதிச்செயலில் ஈடுபட கொண்டு சென்றனரா? என்பது அவர்கள் சிக்கினால் தான் தெரியவரும். இதனால் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • போலீஸ் வாகன சோதனையில் 2 துப்பாக்கிகள்-பால்ரஸ் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பறவைகளை வேட்டையாடுவதற்காக கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-கால்பிரவு 4 வழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கி டமான மினி சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த வாக னத்தில் இருந்து 5 பேர் இறங்கினர். போலீசார் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் உரிமம் இல்லாத 2 ஒற்றைக் குழல் துப்பாக்கி கள், 50 கிராம் பால்ரஸ் குண்டுகள், 50 கிராம் ரவை தூள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .

    வாகனத்தில் வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன், மோகன்ராஜ், ரவிக்குமார், நடராஜன், அஜித் குமார், ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தினர் .

    விவசாய நிலங்களை அழிக்கும் விலங்கு கள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதற்காக இந்த துப்பாக்கிகள் கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் சிறிதாக ஒரு துப்பாக்கி இருப்பதை கண்டனர்.
    • தீவிரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் யாராவது இந்த பகுதியில் இந்த துப்பாக்கியை விட்டு சென்றனரா?

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பொம்மிடியை அடுத்த பையர்நத்தம் பகுதியில் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சிறிதாக ஒரு துப்பாக்கி இருப்பதை கண்டனர்.

    உடனே அருகே சென்று பார்த்தபோது, அது எஸ்.பி.எம்.எல் ரக துப்பாக்கி என்பது தெரியவந்தது. உடனே போலீசார் கைப்பற்றி விசாரணை

    தீவிரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் யாராவது இந்த பகுதியில் இந்த துப்பாக்கியை விட்டு சென்றனரா? அல்லது வனப்பகுதிகளில் வேட்டையாட வந்த மர்ம நபர்கள் யாராவது தெரியாமல் இந்த துப்பாக்கியை விட்டு சென்ற–னரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாயின் உரிமையாளர் மாணிக்கம் இது குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்தார்.
    • நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கழுதை பாலி என்ற பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் தனது விவசாய தோட்டத்தில் கோழி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் வளர்த்து வரும் கோழிகளை அடிக்கடி ஒரு நாய் பிடித்து சென்றது. இது குறித்து அண்ணாதுரை அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் மோகன்ராஜ் (28) என்பவரிடம் கூறியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஜி.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ஒரு நாய் அண்ணாதுரையின் விவசாய தோட்டம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றது. அப்போது அந்த நாய் தான் கோழிகளை பிடித்து சென்ற நாய் என்று கருதி அண்ணாதுரை இது குறித்து தனது நண்பர் மோகன்ராஜிக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து மோகன்ராஜ் தனது வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து அந்த நாயை சுட்டார். இதில் பலத்த காயம் அடைந்த நாய் அங்கேயே இறந்துவிட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் நாயின் உரிமையாளர் மாணிக்கம் இது குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு காயத்துடன் இறந்து கிடந்த நாயை மீட்டனர். மேலும் அண்ணாதுரை மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

    இறந்த நாயின் உடல் இன்று கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக சத்தியபாண்டி வேலை செய்து வந்தார்.
    • போலீசார் 10 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டனர்.

    கோவை

    மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி (31). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

    கோவை விளாங்கு–றிச்சியில் தங்கியிருந்து, அங்குள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக சத்தியபாண்டி வேலை செய்து வந்தார்.

    கடந்த மாதம் 12-ம் தேதி இரவு பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள கருப்பக்கால் தோட்டம் என்ற பகுதியில் சத்திய–பாண்டியை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொன்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் திரையரங்கு விவகாரம் தொடர்பாக இருந்த முன்விரோதம் காரணமாக சத்தியபாண்டி கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தீத்தி–பாளையத்தை சேர்ந்த காஜா உசேன்(24), செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சஞ்சய்குமார்(23), அல்ஜபீர்கான், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ஆல்வின்(37), ஆயுதங்களை மறைத்து வைக்க உதவிய தீத்திப்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன்(25) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜா என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் சஞ்சய் ராஜா கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த போலீசார், ஜே.எம்.3 நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தினர். போலீசார் 10 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டனர். நீதிமன்றம் 5 நாட்கள் விசாரிக்க அனுமதித்தது. இதையடுத்து அவரை தனியிடத்தில் வைத்து வழக்கு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, சத்தியபாண்டி கொல்லப்பட்ட போது ஒரு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கும்பலிடம் மேலும் ஒரு துப்பாக்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, 2 துப்பா க்கிகளையும் கண்டறிந்து பறிமுதல் செய்வத ற்கான நடவடிக்கை தீவிரப்படு்த்த–ப்பட்டுள்ளது.

    2 துப்பாக்கிகளும் சீனா நாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். சில லட்சங்கள் அளித்து இடைத்தரகர்கள் மூலம் இவற்றை வாங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

    துப்பாக்கி எப்படி வாங்கப்பட்டது, அதற்கு பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல், சத்தியபாண்டி கொலை வழக்கில் கூடுதல் தகவல்களை பெற காவலில் எடுக்கப்பட்ட சஞ்சய் ராஜாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ராணுவவீரரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இவரிடம் லைசென்சுடன் இரட்டை குழல் துப்பாக்கி உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் அருகே உள்ள கீழூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் லிங்கன், முன்னாள் ராணுவ வீரர். இவரிடம் லைசென்சுடன் இரட்டை குழல் துப்பாக்கி உள்ளது.

    இவரது மனைவி தங்கம்(வயது49). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகள் திருமணத்திற்காக ஆபிரகாம் லிங்கன் கடன் வாங்கி இருந்தார். இதற்காக மாதந்தோறும் தனக்கு வரும் பென்சன் பணத்தை கொடுத்து வருகிறார்.

    சம்பவத்தன்று பென்சன் பணத்தில் ரூ.3ஆயிரத்தை மதுகுடிக்க செலவழித்ததாக கூறப்படுகிறது. இதனை தங்கம் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் மீண்டும் பணம் கேட்டு மனைவியை தொல்லை செய்துள்ளார். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆபிரகாம் லிங்கன் வீட்டில் இருந்த துப்பாக்கியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கம் கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபிரகாம் லிங்கனை தேடி வருகின்றனர்.

    ×