search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை மிரட்டல்"

    • தம்பி பழனிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.
    • செல்வி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுார் மெயின்ரோட்டில் வசிப்பவர் கிருஷ்ணன். இவரது மனைவி (செல்வி,45)இவர் இதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். செல்விக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது தம்பி பழனிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 2 -ந் தேதி காலை 7 மணிக்கு செல்வி டீக்கடையில் இருந்தார்.

    அப்போது அங்கு வந்த பழனி கொதிகலனில் இருந்த சுடுதண்ணீரை எடுத்து அக்கா செல்வி மீது ஊற்றி, அசிங்கமாக திட்டி,கொலைமிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த செல்வி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் செல்வி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து பழனியை கைது செய்தனர்.

    • ஆசை வார்த்தை கூறி உல்லாசம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது இளம் பெண். அதே பகுதி சேர்ந்த வாலிபரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த வாலிபர் இளம் பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    இதனால் அப்பெண் கர்ப்பிணியானர். இதனால் அந்த வாலிபரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். வாலிபர் இதற்கு மறுத்தார்.

    பின்னர் ஏதோ சில மாத்திரைகளை கொடுத்து பெண்ணின் கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் இளம் பெண் வாலிபரிடம் தன்னை திருமணம் செய்யக்கோரி வலியுறுத்தினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    பின்னர் இது குறித்து போளூர் அனைத்து மகளிர் போலீசில் இளம் பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளிபாளையம் நகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் சிவம் (வயது 52). இவர் பள்ளிப்பாளையம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
    • இந்த நிலையில் இவரது வார்டுக்கு உட்பட்ட ஒட்ட மெத்தை பகுதியில் சிலர் சாலையை ஆக்கிரமித்து உள்ளனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் சிவம் (வயது 52). இவர் பள்ளிப்பாளையம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    மேலும் இவர் ம.தி.மு.க., நாமக்கல் மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார்.

    இந்த நிலையில் இவரது வார்டுக்கு உட்பட்ட ஒட்ட மெத்தை பகுதியில் சிலர் சாலையை ஆக்கிரமித்து உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் நாகராஜி டம் புகார் தெரிவித்தனர். நான், நகராட்சி பணியாளர் களிடம் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து கடந்த 24-ந் தேதி நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்ட்ஹ நிலையில் களியனூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் கவுன்சிலர் சிவம் செல் போனில் தொடர்பு கொண்டு ஆக்கிரிமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகாத வார்த்தை யால் திட்டியுள்ளார்.

    இந்த நிலையில் சிவம் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வெடியரசம் பாளையம் பகுதியில் இருந்து பள்ளி பாளையத்

    திற்கு வந்தார். அப்போது அவரை வழிமறித்த நாகராஜ் தகறாறில் ஈடுபட்டு கல்லால் தாக்க முயன்றதஅக தெரி கிறது.

    மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும் தெரிகிறது. இது பற்றி சிவம் பள்ளிப் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுபற்றி விசாரித்து வரு கிறார்கள்.

    • துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ராணுவவீரரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இவரிடம் லைசென்சுடன் இரட்டை குழல் துப்பாக்கி உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் அருகே உள்ள கீழூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் லிங்கன், முன்னாள் ராணுவ வீரர். இவரிடம் லைசென்சுடன் இரட்டை குழல் துப்பாக்கி உள்ளது.

    இவரது மனைவி தங்கம்(வயது49). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகள் திருமணத்திற்காக ஆபிரகாம் லிங்கன் கடன் வாங்கி இருந்தார். இதற்காக மாதந்தோறும் தனக்கு வரும் பென்சன் பணத்தை கொடுத்து வருகிறார்.

    சம்பவத்தன்று பென்சன் பணத்தில் ரூ.3ஆயிரத்தை மதுகுடிக்க செலவழித்ததாக கூறப்படுகிறது. இதனை தங்கம் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் மீண்டும் பணம் கேட்டு மனைவியை தொல்லை செய்துள்ளார். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆபிரகாம் லிங்கன் வீட்டில் இருந்த துப்பாக்கியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கம் கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபிரகாம் லிங்கனை தேடி வருகின்றனர்.

    ×