என் மலர்
உள்ளூர் செய்திகள்

கேட்பாராற்று கிடந்த துப்பாக்கி
- சாலையில் சிறிதாக ஒரு துப்பாக்கி இருப்பதை கண்டனர்.
- தீவிரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் யாராவது இந்த பகுதியில் இந்த துப்பாக்கியை விட்டு சென்றனரா?
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பொம்மிடியை அடுத்த பையர்நத்தம் பகுதியில் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சிறிதாக ஒரு துப்பாக்கி இருப்பதை கண்டனர்.
உடனே அருகே சென்று பார்த்தபோது, அது எஸ்.பி.எம்.எல் ரக துப்பாக்கி என்பது தெரியவந்தது. உடனே போலீசார் கைப்பற்றி விசாரணை
தீவிரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் யாராவது இந்த பகுதியில் இந்த துப்பாக்கியை விட்டு சென்றனரா? அல்லது வனப்பகுதிகளில் வேட்டையாட வந்த மர்ம நபர்கள் யாராவது தெரியாமல் இந்த துப்பாக்கியை விட்டு சென்ற–னரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






