search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக கூட்டணி"

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
    • தி.மு.க. பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு கடந்த 2 நாட்களாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

    ஏற்கனவே தி.மு.க. குழுவுடன் தமிழக காங்கிரஸ் குழு ஒரு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. அப்போது 15 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போதே தி.மு.க. தரப்பில் 'அதிகம் ஆசைப்படாதீர்கள். மற்ற கட்சிகளுக்கும் ஒதுக்க வேண்டும். எனவே தொகுதிகள் குறையும்' என்று கூறப்பட்டது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே 9 தொகுதி குறைய கூடாது என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

    இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அப்போது அஜோய்குமார் 'காங்கிரசுக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என்று வெளியே தகவல்கள் பரவுகிறது. தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க கூடாது என்று மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே பதில் எதுவும் சொல்லவில்லை.

    இதற்கிடையில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டு சிக்கல்களை சுமூகமாக பேசி முடிக்கும் வேலையில் டெல்லி தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

    உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவுடன் பேசியதில் காங்கிரசுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. டெல்லியிலும் காங்கிரசுக்கு 3 தொகுதிகள் வழங்க ஆம்ஆத்மி ஒத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஒவ்வொரு மாநில வாரியாக சுமூகமாக முடிவுகள் எட்டப்பட்டு வருவதால் இந்தியா கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் தி.மு.க.வுடனும் சுமூகமாக பேசி உடன்பாடு காண முடிவு செய்துள்ளார்கள். இதையடுத்து தி.மு.க. பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு கடந்த 2 நாட்களாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினார்.

    அப்போது காங்கிரசுக்கு மொத்தம் 9 தொகுதிகள் வழங்கவும் ஒரு தொகுதியை கமலுக்கு கொடுக்கும்படியும் பேசியதாக கூறப்படுகிறது.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

    • திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெறும்.
    • தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீதம் வெற்றி பெறும்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் என சிவோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    அதன்படி, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    மேலும், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீதமும், மற்ற கட்சிகளுக்கு 38 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    • தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
    • தமிழகத்தில் மோடியை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வார்கள்.

    சென்னை:

    மெரினா அண்ணா சமாதியில் மரியாதை செலுத்திய பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் அண்ணா. அவரது வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் தி.மு.க. மாநில உரிமைகளை தாரை வார்த்து விட்டு அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்டது. இவர்களுக்கு அண்ணாவின் பெயரை சொல்ல எந்த தகுதியும் இல்லை. அண்ணா வழியில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்தார்கள்.

    இப்போது அதே வழியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் வேலைகளை அ.தி.மு.க. ஏற்கனவே தொங்கி விட்டது. எங்கள் தலைமையை ஏற்று கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். தி.மு.க. தொகுதி பங்கீடு செய்வதற்கு அவசரப்பட காரணம் யாரும் அவர்களை விட்டு பிரிந்து சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான்.


    அதற்காகவே அவர்கள் கூட்டணி கட்சியினரை வாங்க... வாங்க.... சீக்கிரம் வாங்க உட்கார்ந்து பேசலாம் என்று அவரசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்கள் அணிக்கும் வருபவர்கள் வரத்தான் செய்வார்கள். அதனை தடுக்க முடியாது. இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் கால அவகாசம் உள்ளது. கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் அ.தி.மு.க. அணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் மோடியை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வார்கள். ஆனால் மறைமுகமாக ஆதரிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    • 2 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதி கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    4 விருப்பத் தொகுதிகளை குறிப்பிட்டு 2 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • முல்லைபெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி பேச்சு வார்த்தை நடத்துவோம்.
    • இந்தியா கூட்டணி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

    வேலூர்:

    "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்தின் கீழ் காட்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று ஆய்வு செய்தார்.

    முல்லைபெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி பேச்சு வார்த்தை நடத்துவோம். நாங்களும் கேரளா அரசு உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்.


    மேகதாது அணை விவகாரத்தில் இன்னும் ஆய்வு மேற்கொள்வது குறித்து கேட்டதற்க்கு, அவர்கள் எதை செய்தாலும் சரி, ஆய்வு பண்ணாலும் சரி படம் வரைந்தாலும் சரி, செய்து போட்டோ எடுத்து போட்டாலும் சரி, டி.பி.ஆர் தயாரிக்கும் ரிப்போர்ட்டுக்கு தமிழ்நாடு அரசின் ஒப்புதல் வேண்டும், இரண்டாவது மத்திய அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும், நாம் அதை ஒத்துக் கொள்ள வேண்டும் ஒத்துக் கொள்ளும் வரை அது நடக்காது.

    வெள்ள பாதிப்பில் இன்னும் நிதி வரவில்லை கேட்டிருக்கிறோம்.


    "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தை இப்பதான் தொடங்கி கல்யாணம் பண்ணி இருக்கோம் அதுக்குள்ள குழந்தையை பற்றி கேட்டால் எப்படி தெரியும். எங்களிடம் திட்டங்கள் எந்த அளவுக்கு பயன் தந்துள்ளது என்பது மக்களுக்கு தெரியும்.

    இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமார் விலகியது ஒரு திருவிளையாடல் தான். இது மாதிரி திடீர் திடீர் செய்திகள் வரும் இதெல்லாம் எதிர்பார்த்துதான் கூட்டணி அமைக்கிறோம். எதிர்பார்த்துதான் தேர்தலை சந்திக்கிறோம். இதெல்லாம் எங்களுக்கு புதுசு அல்ல. எங்களுக்கு இது பழசு தான்.

    தி.மு.க கூட்டணி பேச்சு வார்த்தையை நாங்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் மட்டும் தான் தற்போதைக்கு பேசிவிட்டு செல்கின்றார்கள்.

    சோசியல் மீடியாவில் தவறாக பரவும் தகவலை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அரசியல் கட்சிகள் நிலைபாடு மாறிக்கொண்டே இருக்கும். என்றைக்கோ பேசியதை இன்றைக்கு பரப்பக்கூடியது என்பது ஆண்மை இல்லாத தனம்.

    இந்தியா கூட்டணி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைக்கு வருவார்கள் போவார்கள் கூட்டணி இறுதி ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் வந்தனர்.
    • 9-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார், கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


    இந்நிலையில், நேற்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், வருகிற 9-ந்தேதி காங்கிரசுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி மற்றும் தமிழக குழுவினர் பங்கேற்ற நிலையில், 9-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர்.

    • காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
    • கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது.

    இந்நிலையில், தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே வருகிற 3-ந்தேதி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி, மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

    கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    • பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பதை விவாதித்து இறுதிவடிவம் கொடுக்க திட்டம்.
    • காங்கிரஸ் கைவசம் உள்ள சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், ஒரு சில தொகுதிகளை கூட்டணிகட்சிகளுக்கு வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடைந்தன.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் நேராக சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கன் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    பின்னர் அண்ணா அறிவாளயம் புறப்பட்டு சென்றார்கள். அங்கு டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேக்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பதையும் எந்தெந்த தொகுதிகள் என்பதையும் விவாதித்தனர்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கைவசம் உள்ள சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், ஒரு சில தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கதிட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • இன்று நடைபெறும் பேக்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பதையும் எந்தெந்த தொகுதிகள் என்பதையும் விவாதித்து இறுதிவடிவம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.
    • காங்கிரஸ் கைவசம் உள்ள சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், ஒரு சில தொகுதிகளை கூட்டணிகட்சிகளுக்கு வழங்கதிட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் நேராக சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கன் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    பின்னர் அண்ணா அறிவாளயம் புறப்பட்டு சென்றார்கள். அங்கு டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இன்று நடைபெறும் பேக்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பதையும் எந்தெந்த தொகுதிகள் என்பதையும் விவாதித்து இறுதிவடிவம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.


    கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, ஆரணி, திருவள்ளூர், தேனி, கரூர் ஆகிய தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுவையில் ஒரு தொகுதியையும் ஒதுக்கி இருந்தனர். அந்த தேர்தலில் தேனி தொகுதியை தவிர மற்ற 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்று இருந்தார்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கைவசம் உள்ள சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், ஒரு சில தொகுதிகளை கூட்டணிகட்சிகளுக்கு வழங்கதிட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனவே மாற்று தொகுதியாக எந்தெந்த தொகுதிகளை கேட்பது என்று காங்கிரஸ் தலைவர்கள் விவாதித்து எடுத்த முடிவின் அடிப்படையில் தி.மு.க.விடம் கேட்க திட்டமிட்டுள்ளார்கள்.

    • சமீபத்தில் திருச்சியில் நடத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் மாநாட்டின் மூலம் தன் பலத்தை திருமாவளவன் நிரூபித்து காட்டி உள்ளார்.
    • தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி நாகப்பட்டினத்தை விட்டுக்கொடுக்க தயங்குகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

    முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற 30-ந்தேதி தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது.

    கடந்த தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்றது.

    இந்த தேர்தலில் 3 தொகுதிகள் கேட்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.

    சமீபத்தில் திருச்சியில் நடத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் மாநாட்டின் மூலம் தன் பலத்தை திருமாவளவன் நிரூபித்து காட்டி உள்ளார். இந்த மாநாட்டில் திரண்டிருந்த கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரிலேயே பார்த்தார்.

    இதை மையமாக வைத்து கூடுதல் தொகுதி கேட்கும் முடிவில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார்.

    நாகப்பட்டினம் அல்லது காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றை கேட்க முடிவு செய்துள்ளார். நாகப்பட்டினம் தற்போது கம்யூனிஸ்டு கையில் உள்ளது. காஞ்சிபுரம் தி.மு.க. கையில் இருக்கிறது.

    நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதிக்குள் ஒரு சட்டமன்ற தொகுதியும், காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குள் 2 சட்டமன்ற தொகுதிகளும் விடுதலை சிறுத்தைகள் கைவசம் உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி நாகப்பட்டினத்தை விட்டுக்கொடுக்க தயங்குகிறது. அதேபோல் காஞ்சிபுரம் தொகுதிக்கு காங்கிரஸ் குறிவைத்துள்ளது. இந்த போட்டிக்குள் திருமாவளவனும் இறங்கி இருப்பதால் காங்கிரசும், கம்யூனிஸ்டும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

    • டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை வந்தனர்.
    • 9 தொகுதிகளை தி.மு.க தர மறுத்தால் மேலும் 12 தொகுதிகளின் பட்டியலை வழங்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் நேராக சத்திய மூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தி.மு.க. தலைமையிடம் வழங்கி அதில் 14 தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளை கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 9 தொகுதிகளை தி.மு.க தர மறுத்தால் மேலும் 12 தொகுதிகளின் பட்டியலை வழங்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளது.

    நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், அரக்கோணம், தென்சென்னை ஆகிய தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    கடந்த தேர்தலில் வென்ற 9 தொகுதிகளுடன் கூடுதலாக விருப்ப 5 தொகுதிகளை சேர்த்து மொத்தமாக 14 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    • தி.மு.க. வழங்கும் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டால் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.
    • காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    சென்னை:

    தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்குகிறது.

    இதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகிய மூவரும் நாளை டெல்லியில் இருந்து சென்னை வருகிறார்கள்.

    விமான நிலையத்தில் இருந்து நேராக சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் கு.செல்வபெருந்தகை, காரிய கமிட்டி உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    பின்னர் மாலை 3 மணியளவில் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச செல்கிறார்கள். டெல்லி தலைவர்கள், கே. எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை ஆகியோர் செல்கிறார்கள்.

    கடந்த முறை தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதே போல் இந்த ஆண்டும் குறைந்த பட்சம் 9 தொகுதிகள் தர வேண்டும் என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்கள். ஆளும் தி.மு.க. தரப்பில் 7 தொகுதிகள் வரை ஒதுக்க சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் பங்கீட்டில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

    எனவே நெருக்கடியான சூழ்நிலையில் டெல்லி தலைவர்கள் நேரில் அமர்ந்து பேச முடிவு செய்கிறார்கள். எனவே நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.


    இந்த கூட்டத்தில் தொகுதிகள் எண்ணிக்கையை உறுதி செய்து விடுவார்கள். அதன் பிறகு டெல்லியில் உள்ள தலைவர்கள் உறுதி செய்த பிறகு எந்தெந்த தொகுதிகளை பெறுவது என்பது பற்றி பேசப்படும் என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. வழங்கும் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டால் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.

    காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    ×