என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை"

    • ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியை பெற்றுத்தரும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    • இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக திமுக என்ன செய்தது.

    சென்னை எழும்பூர் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்ற இபிஎஸ் என்டிஏ கூட்டணி கட்சி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது இபிஎஸ் கூறியதாவது:-

    என்டிஏ கூட்டணி கட்சி தலைவர்களுடன் விரைவில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும். தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் பொறுமையாக உணர்வுப்பூர்வமாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியை பெற்றுத்தரும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் பொறுமையாக உணர்வுப்பூர்வமாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். என்டிஏ கூட்டணி சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களில் இஸ்லாமியர்கள் இருப்பார்கள்.

    இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக திமுக என்ன செய்தது. கடந்த தேர்தலில் திமுக அறிவித்த வாக்குறுதிகளில் 4ல் ஒரு பங்கு வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை.

    சிறுபான்மை மக்களுக்கு திமுக பாதுகாப்பாக இருக்கும் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி. அவசரமாக புதிய புதிய திட்டங்களுக்கு திமுக அடிக்கல் நாட்டுவது ஏன்? தமிழகத்தில் இன்று ஊழல் இல்லாத துறைகளே இல்லை.

    தவெக உடன் இதுவரை எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
    • கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது.

    இந்நிலையில், தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே வருகிற 3-ந்தேதி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி, மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

    கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் வந்தனர்.
    • 9-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார், கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


    இந்நிலையில், நேற்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், வருகிற 9-ந்தேதி காங்கிரசுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி மற்றும் தமிழக குழுவினர் பங்கேற்ற நிலையில், 9-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர்.

    ×