search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திமுக - காங்கிரஸ் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு
    X

    திமுக - காங்கிரஸ் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு

    • பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பதை விவாதித்து இறுதிவடிவம் கொடுக்க திட்டம்.
    • காங்கிரஸ் கைவசம் உள்ள சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், ஒரு சில தொகுதிகளை கூட்டணிகட்சிகளுக்கு வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடைந்தன.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் நேராக சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கன் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    பின்னர் அண்ணா அறிவாளயம் புறப்பட்டு சென்றார்கள். அங்கு டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேக்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பதையும் எந்தெந்த தொகுதிகள் என்பதையும் விவாதித்தனர்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கைவசம் உள்ள சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், ஒரு சில தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கதிட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×