search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர்"

    • 2022-ம் ஆண்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், பணம் செலுத்திய 130 விவசாயி களுக்கு 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்ப டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    • ஆனால் இதுவரை அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம், தென்னங்குடி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2022-ம் ஆண்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், பணம் செலுத்திய 130 விவசாயி களுக்கு 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்ப டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இன்று ஆத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களுக்கு அரசு வழங்கிய ஆணையுடன் நேரில் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், முதல்-அமைச்சர் அறிவித்த விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பணம் செலுத்தியும், கடந்த ஒரு ஆண்டுகளாக எங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதிகாரிகள், உத்தரவு வரவில்லை என கூறி வருகின்றனர்.

    உடனடியாக எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். கடந்த ஒரு வருட காலமாக இதற்காக அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். மாடுகளுக்கு கூட குடிதண்ணீர் இல்லா மல் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.  

    • டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார்.
    • அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தினகரன். இவரது மகன் பாலாஜி (வயது 43). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவர்கள் நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்தபோது, பாலாஜி கடன் தொல்லையால் தவித்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட விரக்தியில் எங்காவது சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, பாலாஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • காப்பகத்தில் விக்டோரியா (வயது 13) என்ற சிறுமி, குழந்தை முதலே தங்கி இருந்து பள்ளியில் படித்து வந்தார்.
    • உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, கடந்த 20-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங் குறிச்சியில் தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் விக்டோரியா (வயது 13) என்ற சிறுமி, குழந்தை முதலே தங்கி இருந்து பள்ளியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, கடந்த 20-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார், வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் மரம் அறுப்புமில் வைத்து நடத்தி வருகிறார்.
    • இந்நிலையில் மின் கசிவு காரணமாக திடீரென மரம் அறுக்கும் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த வர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன்( வயது 50). இவர் பரமத்தி வேலூரில் இருந்து கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் மரம் அறுப்புமில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மின் கசிவு காரணமாக திடீரென மரம் அறுக்கும் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த வர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பி னும் தீயை அணைக்க முடியவில்லை. தீ வேகமாக பரவ ஆரம்பித்தது.

    இது குறித்து சாமிநாதன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீய ணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட மரம் அறுப்பு மில்லுக்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மரம் அறுப்பு மில்லில் இருந்து அறுப்பு மிஷின் மற்றும் பல்வேறு மரக்கட்டைகள் தீயில் எறிந்து நாசமாயின.

    • சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டான பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தரையில் உட்கார்ந்தார்.

    சேலம்:

    சேலம் தாதம்பட்டி எஸ்.கே.டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 44). தொழிலாளியான இவர், இன்று காலை சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டான பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தரையில் உட்கார்ந்தார்.

    உடனே அந்த பகுதியினர் அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் குழுவினர், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சிறிது நேரத்தில் சரவணன் உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • நாமக்கல் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராமன் உயிரிழந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூப்பிட்டான் பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 82). இவரது மனைவி ராமாயி (80).

    இவர்கள் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். ராமன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ராமனுக்கு உடல்நிலை மோசமானதால், பரமத்திவேலூர் தாலுகா, கோலாரத்தில் உள்ள அவரது மகள் சரசுவுக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    அவரது மகள் ராமனை, நாமக்கல் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராமன் உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது. இதனால் விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இரும்புப்பாலம் அடுத்த செங்கோடம்பாளையம் செல்லும் வழியில் ஏராளமான ஏக்கரில் மானாவரி சாகுபடி செய்யும் விவசாய நிலங்கள் உள்ளன.

    இதில் மக்காசோளம், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பயிரிடப் பட்டுள்ளன. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது நிலத்தில், அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது.

    இந்த விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென அருகில் இருந்த விவசாய நிலங்களுக்கும் பரவியது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்அடிப்படையில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    இந்த திடீர் தீவிபத்திற்கு காரணம் மர்ம நபர்களா? அல்லது கடுமையான வெயிலின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அணியார் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான தகரக் கொட்டகை, வீட்டில் இருந்த பாத்திரங்கள், உணவு பொருட்கள், துணிமணிகள், ஆவணங்கள், நகைகள், பணம் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அணியார் கிராமத்தை சேர்ந்தவர் அல்லிமுத்து (வயது 60) கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள தகரம் வேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில், அல்லிமுத்து வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து, வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான தகரக் கொட்டகை, வீட்டில் இருந்த பாத்திரங்கள், உணவு பொருட்கள், துணிமணிகள், ஆவணங்கள், நகைகள், பணம் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

    மின் கசிவு காரணமாக வீடு தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கொண்ட லாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி தார்காட்டை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி
    • அப்போது அவர்கள் 3 பேரும் சாமி ஆடிய போது தகராறு ஏற்பட்டு, கோவிந்தராஜை மற்ற இருவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி தார்காட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 22), விசைத்தறி தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள பூலாவரி மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி, கோவிலுக்கு சென்று சாமி ஆடியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த கோவிலில் அதே ஊரை சேர்ந்த லோகநாதன் மற்றும் சச்சின் ஆகிய இருவரும் சாமி ஆட வந்துள்ளனர். அப்போது அவர்கள் 3 பேரும் சாமி ஆடிய போது தகராறு ஏற்பட்டு, கோவிந்தராஜை மற்ற இருவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில், லோகு என்ற லோகநாதன் (25), சச்சின் (20) ஆகிய 2 பேர் மீதும் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    • கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா‌ என‌‌ வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா என வாகன சோதனை மேற்கொண்டனர்.

    கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.

    தமிழக அரசு சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்–படும் ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவை கடத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்ப–டையில் அவ்வழியாக வந்த லாரி, சரக்கு ஆட்டோ மற்றும் கனரக வாகனங்–களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் ரேஷன் அரிசி மற்றும் மண் எண்ணை எதுவும் பிடிபட–வில்லை எனவும் தொடர்ந்து வாகன சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறையினர் தெரிவித்தனர்.

    வழியாக வந்தால் அனைத்து வாகனங்க–ளையும் நிறுத்தி சோதனை செய்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த 17-ம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் கோம தியை சிகிச்சைக்காக உற வினர்கள் அனுமதித்தனர்.
    • சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள வெள்ளரி வெள்ளி சின்னமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் இவரது மனைவி கோமதி (வயது 24), மாற்றுத் திறனாளியான இவருக்கு தலை சுற்றல், வாந்தி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 17-ம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் கோம தியை சிகிச்சைக்காக உற வினர்கள் அனுமதித்தனர்.

    அங்கு ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோமதியின் உடல் நிலைமிகவும் மோசமடைந்தது. இதனால் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் கோமதி இறந்தார் என கூறி எடப்பாடி ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். எடப்பாடி போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.

    • 100 சதவீதம் கருகி உள்ள நிலையில் விபத்தில் சிக்கிய பெண் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது
    • தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    வடக்கு தாமரை குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி ஷீலா (வயது 64). இவர்களது மகன் ஹரிகரன் (30). ஷீலாவும் அவரது மகன் ஹரிகரனும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தூங்கினார்கள்.அப்போது வீட்டில் விளக்கை பற்ற வைத்திருந்தனர். நள்ளிரவு திடீரென விளக்கு சரிந்து எதிர்பாராத விதமாக குடிசை வீட்டில் தீப்பிடித்தது.

    தீவிபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்தது.அப்போது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஹரிகரன் கண் விழித்தார். தீ எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே ஓடினார். அதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமானது.

    இந்த விபத்தில் அவரது தாயார் ஷீலா சிக்கி உடல் கருகினார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஷீலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஷீலாவின் உடல் 100 சதவீதம் கருகி உள்ள நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள் . இதுகுறித்து தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×