search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் சாவு"

    • சையத் அத்னான் தோட்டத்தில் கிடந்த காலி மருந்து டப்பாவில் தண்ணீர் பிடித்து குடித்து விட்டான்.
    • சிகிச்சை பெற்று வந்த குழந்தை சையத் அத்னான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அப்பாஸ் (29). வெல்டர். இவரது மனைவி சிம்ரான் (28). இவர்களுக்கு 3 வயதில் சையத் அத்னான் என்ற மகன் உள்ளான்.

    சிம்ரான் அதே பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் செயல்பட்டு வரும் பிளா ஸ்டிக் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சிம்ரான் வேலைக்கு செல்லும்போது குழந்தை சையத் அத்னானையும் உடன் அழைத்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்றபோது அங்கிருந்த தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த சையத் அத்னான் தோட்டத்தில் கிடந்த காலி மருந்து டப்பாவில் தண்ணீர் பிடித்து குடித்து விட்டான்.

    சிறிது நேரத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட குழந்தையை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சையத் அத்னான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்
    • தனியார் மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார்

    வெம்பாக்கம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்குவாரி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). சென்னையில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 9-ம் தேதி செய்யாறு அடுத்த சிப்காட் தொழிற்சாலையில் லாரியில் பொக்லைன் எந்திரத்தை ஏற்றுவதற்காக சென்னையில் இருந்து வந்தார்.

    சக்திவேலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார்.

    பின்னர் லாரியில் படுத்திருந்தார். மறுநாள் காலை 10-ந் தேதி காலை அவர் மயங்கி கிடந்தார். அவரை சக ஊழியர்கள் எழுப்ப முயன்றனர். பின்னர் அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இது குறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் செல்லும் வழியிலேயே ரேவதி திடீரென இறந்து விட்டார்.
    • இது குறித்து நம்பியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கோசணம் கடைசெல்லி பாளையத்தை சேர்ந்தவர் கோபால்குமார். டிராக்டர்டிரைவர். இவரது மனைவி ரேவதி (27). இவர் செட்டி தோட்டம் என்ற பகுதியில் தனியார் தறிகுடோனில் வேலைப்பார்த்து வந்தார்.

    வழக்கம் போல் நேற்று காலையும் கோபால்குமார், தனது மனைவி ரேவதியை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு அழைத்து சென்றார்.

    பின்னர் தறி குடோனில் வேலை செய்து கொண்டு இருந்த ரேவதி மாலையில் திடீரென தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தனது கணவருக்கு செல்போனில் தகவல் கொடுத்து உள்ளார்.

    கோபால்குமார் வருவதற்குள் தறிபட்டறை உரிமையாளர் தனது காரிலேயே ரேவதியை நம்பியூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் கொண்டு செல்ல அறிவுறுத்தி உள்ளார்.

    இதையடுத்து கோபிசெட்டிபாளையம் செல்லும் வழியிலேயே ரேவதி திடீரென இறந்து விட்டார். இதுப்பற்றி தெரியவந்ததும் ரேவதியின் கணவர் அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.

    மேலும் இது குறித்து நம்பியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் ரேவதி இறப்புக்கான காரணம் தெரியவரும்.

    காலையில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாலையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சாப்பிட்டு கொண்டிருந்தபோது இளங்கோவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அவரை பரிசோதித்த டாக்டர் இளங்கோ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (60). இவரது மகன் இளங்கோ (24). இளம் வயதிலேயே மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான இளங்கோவுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு வலிப்பு நோய் பாதிப்புக் குள்ளாகி இருந்தார்.

    இதற்காக அரசு மருத்துவமனையில் இளங்கோ சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். ஆனாலும் முறையாக மாத்திரைகள் சாப்பிடாமல் மது குடிப்பதையும் தொடர்ந்துள்ளார்.

    இதனால் இளங்கோவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது இளங்கோவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

    பின்னர் சிறிது நேரத்தில் சரியாகி விட்டதாக தெரிகிறது. நேற்று அதிகாலை 2 மணியளவில் இளங்கோவுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து உடனடியாக அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இளங்கோ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மது குடித்து வந்த ராஜனுக்கு கடந்த 13-ந் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
    • மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மீண்டும் மது குடித்துள்ளார்.

    ஈரோடு, நீலகிரி மாவட்டம், கூடலூர், கோத்ராவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (44). இவரது மனைவி லைலா (38). இவர்களுக்கு 17,18 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    ராஜன், மதுவுக்கு அடிமையானதால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மனைவி, குழந்தைகளைப் பிரிந்து ஈரோட்டுக்கு வந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

    அதிக அளவில் மது குடித்ததால் ராஜனுக்கு குடல் மற்றும் உடலின் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்துள்ளார். ஆனாலும், டாக்டரின் அறிவுரையை ஏற்காமல் தொடர்ந்து மது குடித்து வந்த ராஜனுக்கு கடந்த 13-ந் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனையில் உள் நோயாளியாக ராஜன் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில், நேற்று முன் தினம் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த ராஜன், மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மீண்டும் மது குடித்துள்ளார். இதை யடுத்து, அவர் அங்கேயே இறந்துவிட்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராஜன் மனைவி லைலா, நேற்று ஈரோடு வந்து அவரது உடலை பெற்றுக் கொண்டார்.

    இதுகுறித்து, ஈரோடு அரசு மருத்துவமனை புறக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஓட்டலில் வேலை பார்த்த மாற்றுத்திறனாளி திடீரென பரிதாபமாக இறந்தார்.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த தம்பிபட்டியை சேர்ந்தவர் சுந்தரம்மாள். இவரது மகன் ராஜ்குமார்(வயது48), மாற்றுத்திறனாளி. விபத்தில் ஒரு காலை இழந்தவர். இவர் திருமங்கலம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சமையல் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். அதே ஓட்டல் மாடியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் நேற்று இறந்து விட்டார். இதுபற்றி சுந்தரம்மாள் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • சகோதரி கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கொவளை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அம்மு (வயது32) இருவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் திருவிழா நடந்தது. திருவிழாவில் தெருக்கூத்து நாடகம் நடந்தது.

    இதனை அம்மு அவரது கணவர் செந்தில் இருவரும் பார்த்துவிட்டு அதிகாலை வீட்டிற்கு வந்து தூங்கினர். காலை 9 மணி அளவில் செந்தில் மாட்டுக்கு தண்ணீர் காட்ட தனது மனைவியை எழுப்பி உள்ளார்.

    அப்போது அசதியாக உள்ளதாகவும் நீங்களே மாட்டிற்கு தண்ணீர் காட்ட வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மாட்டிற்கு தண்ணீர் வைத்து விட்டு பின்னர் விவசாய வேலைக்கு செந்தில் சென்று விட்டார்.

    பிற்பகல் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அம்மு படுக்கையில் இருந்து எழவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த செந்தில் மனைவியை எழுப்பி பார்த்தபோது கண் விழிக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அம்மு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து அம்முவின் சகோதரி லட்சுமி (34) கீழ்கொடுங்காலூர் போலீசில் இன்று புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சரவணன் (வயது 37). இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
    • இந்நிலையில் சரவணன் கள்ளிப்பாளையம் பகுதியில் மது அருந்திவிட்டு படுத்திருந்துள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் எழவில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர் அருகே கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் சரவணன் (வயது 37). இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் சரவணன் கள்ளிப்பாளையம் பகுதியில் மது அருந்திவிட்டு படுத்திருந்துள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் எழவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர்,அருகில் சென்று பார்த்த போது, சரவணன் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து பிரேதத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சரவணக்குமார் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருந்தார்.
    • வயிற்று போக்கு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டார்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் நஞ்ச கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சரவணக்குமார் (வயது 28).

    இவருக்கு கடந்த 6 மாதத்து க்கு முன்பு தான் திருமண மானது. இவருக்கு வடிவுக்கரசி (23) என்ற மனைவி உள்ளார். சரவ ணக்கு மார் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் டிரைவ ராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சரவணக்குமார் அந்த கம்பெனியில் வழக்கம் போல் வேலை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டு கொண்டு இருந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிவபாலசுப்பிரமணியம் மூச்சு பேச்சின்றி தரையில் கிடந்துள்ளார்.
    • பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவபாலசுப்பிரமணியம் (67).

    இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வண்ணாங்காட்டு வலசு பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் காவலாளியாக பணியாற்றி அருகில் உள்ள மூலக்கரை பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிவபால சுப்பிர மணியம் தனக்கு உடல் நிலை சரியில்லை என மில்லில் வேலை பார்க்கும் மேற்பார்வையாளர் பாஸ்கரனிடம் கூறியுள்ளார்.

    பின்னர் பணி முடிந்து தான் தங்கியிருக்கும் அறைக்கு சென்றவர் மறு நாள் வேலைக்கு செல்லவில்லை. மேற்பார்வையாளர் பாஸ்கரன் போன் செய்து பார்த்தும் சிவபாலசுப்பிரமணியம் போனை எடுக்கவில்லை.

    இதையடுத்து மில்லில் வேலை பார்க்கும் 2 பேரை அனுப்பி சிவபால சுப்பிர மணியம் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்த்து வருமாறு பாஸ்கரன் அனுப்பி வைத்துள்ளார்.

    அவர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது சிவபால சுப்பிரமணியம் மூச்சு பேச்சின்றி தரையில் கிடந்து ள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சிவபால சுப்பிரமணியம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து மில் மேற்பார்வையாளர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோவை செல்லும் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார்.
    • பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (42). இவர் அதே பகுதியில் கோவை செல்லும் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார். இவரது மனைவி இமாக்குலேட் கீதா (49). இவர் திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்களாகிறது. குழந்தைகள் இல்லை. ஆனந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது மனைவி பணிபுரிந்து வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில், இமாக்குலேட் கீதா திருச்சியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்றிருந்தார். ஆனந்த் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

    நேற்று காலை சுமார் 8 மணியளவில் வீட்டில், பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது.
    • சம்பவத்தன்று வீட்டில் அக்குழந்தை மூச்சு இல்லாமல் இருந்து வந்தது

    கடலூர்:

    கடலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது. கடலூர் அடுத்த ரெட்டி ச்சாவடி செல்லஞ்சேரியை சேர்ந்தவர் சுமன் (வயது 30). இவரது மனைவி மலர். இவர்களுக்கு கடந்த 14 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது.   சம்பவத்தன்று வீட்டில் அக்குழந்தை மூச்சு இல்லாமல் இருந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பெண் குழந்தையை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.   ஆனால் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த 14 நாளான பெண் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×