search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் சாவு"

    • பழனிசாமி தோட்டத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.
    • சிறுவலூா் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி பெரியகொரவம் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (54). நாட்டு ச்சர்க்கரை தயாரிக்கும் கரும்பு ஆலை நடத்தி வந்தார். சம்பவத்தன்று பழனிசாமி மொபட்டில் தோட்டத்திற்கு சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இந்நிலையில் காலை பெரியகொரவம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே உள்ள மின் டிரான்ஸ்பார்மர் அருகே பழனிசாமியின் மொபட் நின்றது.

    அப்போது பழனிசாமி, செங்கோட்டையன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் பழனிசாமியை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு பழனிசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பழனிசாமியின் மகன் மவுலிஸ்வரன் சிறுவலூா் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிசாமி இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருத்திகா குழந்தையை பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
    • டாக்டர் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி கருக்கம் பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (27). கோவில் பூசாரி. இவரது மனைவி கிருத்திகா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இதையடுத்து கிருத்திகாவிற்கு கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி குறைபிரசவத்தில் (ஏழரை மாதம்) ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் அதிகாலை கிருத்திகா குழந்தையை பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். சில மணி நேரம் கழித்து குழந்தையை குணசேகரன் பார்த்தபோது எவ்வித அசைவும் இன்றி இருந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி குழந்தையை மீட்டு சிவகிரி அரசு மருததுவமனையில் சிகிசசைக்கு சேர்த்தனர்.

    அங்கு பணியில் இருந்த டாக்டர் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்துல் ரஹிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கரு ங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அப்துல் ரஹிமான் (வயது 29). இவர் ஒரு தனியார் கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பாஷீரா (22).

    இந்நிலையில் சம்பவத்தன்று அப்துல் ரஹிமான் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வீடு திரும்பினார்.

    பின்னர் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் பாஷீரா தனது கணவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்து வமனைக்கு சென்றுள்ளனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அப்துல் ரஹிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவரது மனைவி பாஷிரா கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியுடன் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தவர்
    • பெரியநாயக்கன்பாளையம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள ராவூத்து கோலனுரை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றார். இதனால் ஆறுச்சாமி தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கிளப் பாரில் மது குடிப்பதற்காக சென்றார். மது குடித்து கொண்டு இருந்த போது திடீரென மயங்கி இறந்தார். இதனை பார்த்த பார் ஊழியர்கள் இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த ஆறுச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
    • பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சாம்ராஜ் மகன் சங்கர் (வயது 41). லாரி டிரைவர் ஆவார்.

    இவர் நேற்று லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு பவானி அருகே ஜீவா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் ஏஜென்சியில் லோடு இறக்க வந்துள்ளார்.

    இந்நிலையில் டிரைவர் சங்கர் ஓய்வு அறையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தபோது சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 2-ம் வகுப்பு படித்து வந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி சுகன்யா. தம்பதியின் மகள் மவுலிகா (வயது 7). கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகன்யா தனது மகள் மவுனிகாவுடன் அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    மவுனிகா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சிறுமி தனது தாய் மற்றும் பாட்டியுடன் தூங்கினார். இன்று காலை நீண்ட நேரமாகியும் சிறுமி கண் விழிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தாய் சுகன்யா சென்று பார்த்தபோது மவுலிகா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாமியா சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
    • சுகாதாரத்துறையினரும் எஸ்டேட் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு

    கோவை,

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் லாமியா (வயது 38). இவரது மனைவி அலிஷா காத்துன் (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 1 ஆண்டுக்கு முன்பு லாமியா குடும்ப த்துடன் கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தார். பின்னர் அணலி எஸ்டேட் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.

    லாமியாவுக்கு கடந்த 2 நாட்களாக வயிற்று ப்போக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

    நேற்று அதிகாலை திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து லாமி யாவை எஸ்டேட் மேலாளர் அவரது வாகனத்தில் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே லாமியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது மனைவி அலிஷா காத்துன் தனது கணவரின் மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி வால்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வால் பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து லாமியாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை முடிந்ததும் லாமியாவின் இறப்புக்கான காரணம் குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே சுகாதா ரத்துறையினரும் வடமாநில தொழிலாளி இறந்த எஸ்டேட் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    தொழிலாளிக்கு வயிற்றுப் போக்கு எதனால் ஏற்பட்டது, உணவு பிரச்சினையா, குடிநீர் பாதிப்பா, அல்லது என்ன காரணத்தி னால் அவர் உயிரிழந்தார் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள். 

    • டாக்டர்கள் ரபிஹஸ்தா ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
    • நம்பி யூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே ஓனாக்குட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் மில்லில் மேற்கு வங்க மாநிலம் மல்ட்டா மாவட்டம் ஹக்ரா ஹரி சந்திராபூர் பாபுக் பகுதியை சேர்ந்த ரபிஹஸ்தா (58) என்பவர் வேலை செய்து வந்தார். இவரும் தனது சகோதரர் மகன் ஹேமந்த் சரேணும் (25) தனியாக அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று ரபிஹஸ்தா தனக்கு உடல்நிலை சரியில்லை நான் வேலைக்கு வரவில்லை என ஹேமந்த் சரேணிடம் கூறியுள்ளார்.

    இதனை யடுத்து ஹேமந்த் சரண் வேலைக்கு சென்று விட்டு மதிய உணவு இடை வேளை க்கு தங்கியிருக்கும் அறைக்கு வந்து பார்த்த பொழுது தனது சித்தப்பா எந்தவித பேச்சும், அசைவும் இல்லா மல் இருப்பது தெரிந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த அரசு டாக்டர்கள் ரபிஹஸ்தா ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதையடுத்து ஹேமந்த் சரேண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த நம்பி யூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபாலுக்கு வலிப்பு நோய் பாதிப்பு உள்ளது.
    • அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கோபால் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொ டக்குறிச்சியை அடுத்துள்ள எழுமாத்தூர் அய்யகவுண்ட ன்பாளையம் நெறிப்பாறை பகுதியை சேர்ந்தவர்

    கோபால் (32). ஜே.சி.பி. டிரைவர். இவரது மனைவி மணிமேக லை (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் கோபாலுக்கு வலிப்பு நோய் பாதிப்பு உள்ளது. காலை வழக்கம் போல வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கோபால் சென்றார்.

    சிறிது நேரத்தில் கோபாலின் உறவினர் ஒருவர் மணிமேகலைக்கு போன் செய்து கூட்டப்பள்ளி வாய்க்கால் அருகே கோபால் மூச்சு பேச்சின்றி, வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே விழுந்து கிடப்பதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து மணிமேகலை உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று உறவினர்கள் உதவியுடன் கோபாலை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கோபால் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து மொடக்கு றிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அன்சாருக்கு வலிப்பு நோய் அதிகமாக இருந்தது.
    • சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் கரட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்த வர் அன்சர் (வயது 31). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராசிதா (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    மேலும் அன்சருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகி ச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அன்சாருக்கு வலிப்பு நோய் அதிகமாக இருந்தது.

    இதையடுத்து அவரது நண்பர்கள் அன்சரை சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மீண்டும் சத்திய மங்கலம் அரசு மருத்துவம னைக்கு அன்சரே சிகிச்சை க்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அன்சர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து மனைவி ராசிதா சத்திய மங்கலம் காவல் நிலை யத்தில் புகார் அளி த்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மன்னன் காஜு மயக்கம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்தார்.
    • மயங்கிய நிலையில் இருந்த அவரை சித்தோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றார்.

    பவானி:

    மேற்கு வங்க மாநிலம் பகரா பகுதியை சேர்ந்தவர் நியூர்லிகாஜு. இவரது மகன் மன்னன் காஜு (35). இவருக்கு சம்பா பிபி என்ற மனைவியும், ஹசன் காஜு என்ற மகனும் உள்ளனர்.

    இவர் திருப்பூர் முதலி பாளையம் சிட்கோ மீனாட்சி நகரில் தங்கி மேற்கு வங்கத்தை சேர்ந்த சலா வுதீன் மற்றும் திருப்பூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மோகன்ராஜ் என்பவரிடம் கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.

    இவரின் மனைவி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மன்னன் காஜு மற்றும் அவர்களது நண்பர்களான சையது, இன்தாஜில் ஆகிய 3 பேர் சுற்றி பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பவானி வந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    அவர்கள் சித்தோடு அருகே சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் ஒரு தனியார் ஓட்டல் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மன்னன் காஜு மயக்கம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்தார்.

    இதை கண்ட அவருடன் சென்றவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒரு டீக்கடையில் தண்ணீர், டீ, பிஸ்கட் வாங்கி கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை சித்தோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • கோவிந்தம்பாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த நெல் அறுவடை எந்திர டிரைவர் செல்லக்கருப்பன்.
    • இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் கோவிந்தம்பாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த நெல் அறுவடை எந்திர டிரைவர் செல்லக்கருப்பன். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இதற்கிடையே தனலட்சுமி 2-வதாக கர்ப்பம் தரித்தார். அவருக்கு கடந்த 30-ந் தேதி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்தது. அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் தனலட்சுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தனலட்சுமி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.

    குழந்தை பிறந்த 4 நாட்களிலேயே அவர் திடீரென இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

    புகார்

    இதனால் தனலட்சுமியின் உறவினர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி மீது புகார் கூறியுள்ளனர். இதையடுத்து சுகாதார துறை அதிகாரி ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார். தனலட்சுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவருக்கு வழங்கப்பட்ட ஊசி மருந்துகள், மாத்திரைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    பிரசவம் பார்த்த டாக்டர் மற்றும் நர்சுகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றார். மேலும், தலைவாசல் போலீசார், தனலட்சுமி இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×